search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode railway station"

    • ரெயில் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு நடை மேடையாக சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
    • ரெயிலில் பயணம் செய்த பயணிகளிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.

    ஈரோடு:

    குடியரசு தின விழா நாளை இந்தியா முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பெயரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் கண்காணித்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் குடியரசு தின விழாவை முன்னிட்டு 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு பஸ் நிலையத்தில் இன்று பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் அடிக்கும் சம்பவத்தை தடுக்கும் வகையில் ஈரோடு டவுன் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஈரோடு ரெயில் நிலையத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஈரோடு ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஒன்றிணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு ரெயில் நிலையம் நுழைவு வாயில் ஈரோடு ரெயில்வே போலீசார் பயணிகள் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்து அதன் பிறகே அவர்களை உள்ளே அனுமதித்தனர். மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை செய்தனர். ரெயில் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு நடை மேடையாக சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதேபோல் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்த ஒவ்வொரு ரெயில்களிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரெயிலில் பயணம் செய்த பயணிகளிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர். இதுபோல் ஈரோடு காவிரி ரெயில் இரும்பு பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று முதல் நாளை வரை போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் உள்ள சோதனை சாவடிகளிலும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

    • ரெயில் நிலைய நுழைவாயில் பகுதியில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பயணிகள் கொண்டு வரும் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்து அதன் பின்னரே அவர்கள் உள்ளே அனுமதிக்கின்றனர்.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தங்கள் சொந்த ஊருக்கு நாளை மாலை முதல் மிக அதிக அளவில் பயணம் செய்ய உள்ளனர்.

    தொலை தூர பயணத்துக்கு பொது மக்கள் ரெயில் பயணங்க ளை அதிக அளவில் தேர்ந்தெடுத்து சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசுகள் ரெயிலில் கொண்டு செல்லக்கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். பொதுமக்கள் தங்கள் சொந்த பயன்பாடு அல்லது வணிகரீதியாக ரெயில்களில் யாரேனும் எளிதில் தீப்பற்ற கூடிய பட்டாசு ரகங்கள் எடுத்து செல்கின்றனரா? என்று போலீசார் கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான ரெயில்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் ரெயில் நிலைய நுழைவா யில் பகுதியில் இன்ஸ்பெ க்டர் கிருஷ்ணன் தலைமை யில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பயணிகள் கொண்டு வரும் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்து அதன் பின்னரே அவர்கள் உள்ளே அனுமதிக்கின்றனர். பட்டாசு ஏதேனும் உள்ளதா? என போலீசார் தீவிரமாக சோ தனை செய்து வருகின்றனர்.

    மேலும் ரெயில் நிலையத்தில் வரும் ஒவ்வொரு ரெயில்களையும் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனை வரும் 24-ந் தேதி நள்ளிரவு வரை நீடிக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    சோதனையின் போது பயணிகள் பட்டாசு எடுத்து செல்வது கண்டுபிடி க்கப்பட்டால் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். 

    • ஈரோடு ரெயில் நிலையத்தில் இரவில் படுத்து தூங்குபவர்களின் விவரங்களை சேகரிக்கும்படி போலீசாருக்கு மாவட்ட காவல்துறை நிர்வாகம் உத்தரவிட்டது.
    • போலீசார் ரெயில் நிலைய வளாகத்தில் தங்கி இருந்த 30-க்கும் மேற்பட்டவர்களின் விவர ங்களை சேகரித்ததோடு அவர்களின் கை ரேகைகளும் சேகரிக்கப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலைய வளாகத்தின் நுழைவு பகுதி மற்றும் நடைமேடை பகுதியில் இரவில் படுத்து தூங்கும் சிலர் சிறுசிறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் வயதான சிலர் பயணிகளிடம் யாசகம் பெற்று அங்கேயே நிரந்தரமாக தங்கிக்கொள்கின்றனர். வயது முதிர்ச்சியால் இறந்து விடும் பட்சத்தில் இறந்த நபர் யார், எந்த ஊர் என்ற விபரம் தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    இதற்கு தீர்வு காணும் வகையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் இரவில் படுத்து தூங்குபவர்களின் விவரங்களை சேகரிக்கும்படி போலீசாருக்கு மாவட்ட காவல்துறை நிர்வாகம் உத்தரவிட்டது.

    இதையடுத்து ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் உள்பட 15-க்கும் மேற்பட்ட போலீசார் ரெயில் நிலைய வளாகத்தில் தங்கி இருந்த 30-க்கும் மேற்பட்டவர் களின் பெயர், ஊர் உள்ளிட்ட விவர ங்களை சேகரித்ததோடு, அவர்களின் கை ரேகை களும் சேகரிக்கப்பட்டன.

    • சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று ஒரு போன் அழைப்பு வந்தது.
    • ஈரோடு பஸ் நிலையம், மணிக்கூண்டு, ரெயில் நிலையம் ஆகிய 3 இடங்களில் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    ஈரோடு:

    சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று ஒரு போன் அழைப்பு வந்தது.

    அதில் பேசிய நபர் ஈரோடு பஸ் நிலையம், மணிக்கூண்டு, ரெயில் நிலையம் ஆகிய 3 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், இந்த 3 இடங்களிலும் இன்னும் சில நேரத்தில் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    இது குறித்து சென்னை போலீசார் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு போலீசாரை உஷார்படுத்தினர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் ஈரோடு பஸ் நிலையம், மணிக்கூண்டு ஆகிய பகுதிகளில் மோப்பநாய் உதவியுடன் ஒவ்வொரு இடமாக அங்குலம் அங்குலமாக சோதனையில் ஈடுபட்டனர். நேற்று இரவு 8 மணி அளவில் ஈரோடு பஸ் நிலையத்திற்குள் 30-க்கும் மேற்பட்ட போலீசார் மோப்ப நாயுடன் ஒவ்வொரு இடமாக சோதனையில் ஈடுபட்டனர்.

    இதனால் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் பதட்டம் அடைந்தனர். பஸ் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு ரேக்காக சென்று போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர்.

    பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைகளிலும் சோதனையிட்டனர். சுமார் 2 மணி நேரமாக பஸ் நிலை யத்தில் சோதனையிட்டனர்.

    இதேப்போல் மணிக்கூண்டு பகுதிக்கும் நேற்று இரவு மற்றொரு போலீஸ் பிரிவினர் சென்று சோதனையில் ஈடுபட்டனர். பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு பகுதி வரை சாலையின் இருபுற மும் போலீசார் ஒவ்வொரு இடமாக மெட்டல் டிடெக்டர் கருவிகள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதேபோல் டவுன் டி.எஸ்பி. ஆனந்தகுமார் தலைமையான போலீசார் ரெயில் நிலையத்திற்கு சென்று அதிரடி சோதனை ஈடுபட்டனர். இரவு 8 மணிக்கு ரெயில் நிலையத்திற்குள் சென்று சோதனையில் ஈடுபட தொடங்கினார்.

    ரெயில் நிலைய நுழை வாயில் பகுதி, பயணிகள் உடமைகள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து நடைமேடை பகுதிகளிலும் போலீசார் தீவிர சோதனையிட்டனர். மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு பணிகள் உடமைகள் சோதனை செய்யப்பட்டன.

    மேலும் ஈரோடு வழியாக சென்ற அனைத்து ெரயில்களிலும் ஒவ்வொரு பெட்டியாக சென்று போலீசார் பயணிகள் உடைமைகளை சோதனை யிட்டனர். இரவு 11 மணி வரை கிட்டத்தட்ட 3 மணி நேரமாக ரெயில் நிலையம் முழுவதும் போலீசார் சோதனை செய்ததில் வெடி குண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது.

    இதனையடுத்தே போலீசார் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த நபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை மே ற்கொண்டு வருகின்றனர்.

    ஏற்கனவே இதே போல் 2 முறை ஈரோடு பஸ் நிலையம், மணிக்கூண்டு, ெரயில் நிலையம் பகுதிக்கு வெடிகுண்டல் மிரட்டல் விடுத்த சம்பவம் நடந்து ள்ளது. மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒரு வாலிபர் சிறையில் 3 வேளையும் சாப்பாடு நல்லா கிடைக்கும் என்பதால் இது போன்ற மிரட்டல் விடு த்தேன் என்று கூறியிருந்தார்.

    அந்த நபர்தான் இந்த முறையும் மிரட்டல் விடுத்திருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரபடுத்தி உள்ளனர்.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் பிளாட்பார மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையம் வழக்கம் போல் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

    ஈரோடு-சென்னை ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை சென்னையில் இருந்து காலை 6.30 மணியளவில் ஈரோடு ரெயில் நிலையத்தில் வந்து நின்றது. பயணிகள் இறங்கி சென்று கொண்டிருந்தனர். 4-வது பிளாட்பார்ம் மற்றும் 3-வது பிளாட்பார்முக்கு இடைப்பட்ட ‘சப்-வே’ வழியில் பயணிகள் வேகமாக இறங்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது பிளாட்பார்மின் மேற்கூரை கான்கிரீட் தளத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து கீழே விழுந்தது.

    அப்போது அந்த வழியாக நடந்து சென்ற ஈரோடு என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி பானுமதி (வயது 42) என்பவரது தலையில் விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேலும் மேற்கூரையின் கான்கிரீட் பகுதி இடிந்து விழுந்ததில் நடந்து சென்ற மேலும் 3 இளைஞர்கள் காயம் அடைந்தனர்.

    இந்த சம்பவம் இன்று காலை ஈரோடு ரெயில் நிலையத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சம்பவ இடத்துக்கு ஈரோடு ரெயில்வே போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
    ஈரோடு ரெயில் நிலையத்தில் எதிர்பாராத விதமாக சரக்கு ரெயில் மீது என்ஜின் திடீரென மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. . #Train

    ஈரோடு:

    ஈரோடு வழியாக பெங்களூருக்கு ஆயில் ஏற்றி செல்லும் சரக்கு ரெயில் இன்று காலை ஈரோடு ரெயில் நிலையத்தை நெருங்கி வந்து கொண்டிருந்தது.

    அதே நேரத்தில் எதிர் திசையில் மற்றொரு தண்ட வாளத்தில் குட்ஷெட்டில் இருந்து பணிமனை நோக்கி ஒரு ரெயல் என்ஜின் இயக்கப்பட்டது.

    எதிர்பாராத விதமாக சரக்கு ரெயில் மீது என்ஜின் திடீரென மோதியது. இதில் பணிமனை நோக்கி சென்ற ரெயில் என்ஜின் தடம் புரண்டது. இதில் அந்த என்ஜினில் உள்ள ஏணிப்படிகள் உடைந்து சேதமடைந்தன.

    என்ஜினின் வலதுபுற மேல் பகுதி சேதம் அடைந்தது. ஆனால் பெங்களூரு நோக்கி சென்ற சரக்கு ரெயிலுக்கு எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை.

    ஆயிலை ஏற்றிக் கொண்டு சென்ற சரக்கு ரெயில் வேகமாக மோதி இருந்தால் பெரும் தீ விபத்து ஏற்பட்டு இருக்கும்.

    ஆனால் அதிர்ஷ்டவசமாக அது நடைபெறவில்லை.இது பற்றிய தகவல் கிடைத்ததும் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட என்ஜினை மீண்டும் தண்டவாளத்தில் நிலை நிறுத்துவதற்காக ஹைட்ராலிக் ஜாக்கி என்னும் நவீன கருவி துணையுடன் பணியில் ஈடுபட்டனர்.

    விபத்து நடந்த இடத்துக்கு ரெயில்வே உயரதிகாரிகள் மற்றும் ரெயில்வே போலீசார் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்து காரணமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வரும் என்று சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் கூறினார்.
    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுப்பாராவ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரெயில் நிலையத்தின் முன்பகுதியில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தும் இடங்கள், என்ஜின் டிரைவர்களின் கட்டுப்பாட்டு அலுவலகம், ரெயில்வே தண்டவாளங்கள், நடைமேடைகள் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அலுவலகங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை மேலாளர் பார்வையிட்டு, ரெயில்வே ஊழியர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    நான் சேலம் கோட்ட ரெயில்வே மேலாளராக பொறுப்பேற்ற பிறகு ஈரோடு ரெயில் நிலையத்திற்கு முதல் முறையாக வந்து ஆய்வு செய்தேன். இங்கு மேம்படுத்தப்பட வேண்டிய பணிகள் குறித்து பார்வையிடப்பட்டது. ஈரோடு ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்), லிப்ட்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் ஒரு லிப்ட் அடுத்த மாதம் ஜூலை 15-ந் தேதிக்குள் திறக்கப்படும். மற்றொரு லிப்ட் 3 மாதங்களில் அமைக்கப்படும். நகரும் படிக்கட்டுகள் அடுத்த மாதம் இறுதியில் செயல்பாட்டுக்கு வரும்.

    சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் ஆள் இல்லாத ரெயில்வே கேட்டுகளில் ஆட்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே அடுத்த மாதத்திற்குள் ஆள் இல்லாத ரெயில்வே கேட்டுகள் இருக்காது. பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் ஒருசில பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்த பணிகள் நிறைவடைந்த பிறகு வழக்கம்போல் ரெயில்கள் இயக்கப்படும்.

    ஈரோடு-திருச்சி மார்க்கத்தில் மின்சார என்ஜின்கள் இயக்குவதற்காக மின்பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அடுத்த மாதம் (ஜூலை) 3-ந் தேதியில் இருந்து 7 ரெயில்கள் மின்சார என்ஜின்கள் மூலமாக இயக்கப்பட உள்ளன.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் 4 நடை மேடைகள் உள்ளன. அனைத்து ரெயில்களும் சுமார் 10 நிமிடங்கள் வரை நிற்கின்றன. இதனால் நடைமேடைகளில் ஒரு ரெயில் நின்றிருக்கும்போது, மற்றொரு ரெயில் வெளியே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் நடைமேடைகளை அதிகப்படுத்த வேண்டிய தேவை தற்போது இல்லை.

    ரெயில்வே தண்டவாளங்களில் அபாயகரமான இடங்களில் நின்று செல்பி எடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என்கிற ஆணை இன்னும் வரவில்லை. இதற்கான ஆணை வந்தபிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுப்பாராவ் கூறினார்.
    ×