search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "process"

    கொளத்தூரில் விவசாயிகளுக்கான செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடந்தது.
    மேட்டூர்:

    கொளத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு லாபகரமான விவசாயம் குறித்த செயல் முறை விளக்க நிகழ்ச்சி கொளத்தூரில் நடைபெற்றது. கொளத்தூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வெங்கடாசலம் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.

    வேளாண்மை விற்பனை துறை உதவி பொறியாளர் நடராஜன் ,வேளாண் அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை இயக்குனர் பாலசுப்பிரமணியம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். 

    விவசாயிகள் வேளாண்மை துறையில் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்த்துவைக்க அவுட் குரோ என்ற புதிய செயலி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. 

    விவசாயிகள் குறைந்த நிலப்பரப்பில் அதிக லாபம் ஈட்டுவதற்கு குறித்தும் மற்றும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள் பழங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்வதற்கும் விவசாய பயிர் பாதுகாப்பு குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
     
    நிகழ்ச்சியில் அன்னை காவேரி விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சுகவனம்,   அவுட் குரோ நிறுவனத்தின் விவசாயிகள் செயல்பாடுகள் பிரிவு தலைவர் செந்தில்குமார் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். 

    இதற்கான ஏற்பாடுகளை அன்னை காவேரி விவசாய உற்பத்தி குழுமம் மட்டும் அவுட் குரோ செயலி குழுமத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
    ஈரோடு ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வரும் என்று சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் கூறினார்.
    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுப்பாராவ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரெயில் நிலையத்தின் முன்பகுதியில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தும் இடங்கள், என்ஜின் டிரைவர்களின் கட்டுப்பாட்டு அலுவலகம், ரெயில்வே தண்டவாளங்கள், நடைமேடைகள் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அலுவலகங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை மேலாளர் பார்வையிட்டு, ரெயில்வே ஊழியர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    நான் சேலம் கோட்ட ரெயில்வே மேலாளராக பொறுப்பேற்ற பிறகு ஈரோடு ரெயில் நிலையத்திற்கு முதல் முறையாக வந்து ஆய்வு செய்தேன். இங்கு மேம்படுத்தப்பட வேண்டிய பணிகள் குறித்து பார்வையிடப்பட்டது. ஈரோடு ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்), லிப்ட்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் ஒரு லிப்ட் அடுத்த மாதம் ஜூலை 15-ந் தேதிக்குள் திறக்கப்படும். மற்றொரு லிப்ட் 3 மாதங்களில் அமைக்கப்படும். நகரும் படிக்கட்டுகள் அடுத்த மாதம் இறுதியில் செயல்பாட்டுக்கு வரும்.

    சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் ஆள் இல்லாத ரெயில்வே கேட்டுகளில் ஆட்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே அடுத்த மாதத்திற்குள் ஆள் இல்லாத ரெயில்வே கேட்டுகள் இருக்காது. பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் ஒருசில பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்த பணிகள் நிறைவடைந்த பிறகு வழக்கம்போல் ரெயில்கள் இயக்கப்படும்.

    ஈரோடு-திருச்சி மார்க்கத்தில் மின்சார என்ஜின்கள் இயக்குவதற்காக மின்பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அடுத்த மாதம் (ஜூலை) 3-ந் தேதியில் இருந்து 7 ரெயில்கள் மின்சார என்ஜின்கள் மூலமாக இயக்கப்பட உள்ளன.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் 4 நடை மேடைகள் உள்ளன. அனைத்து ரெயில்களும் சுமார் 10 நிமிடங்கள் வரை நிற்கின்றன. இதனால் நடைமேடைகளில் ஒரு ரெயில் நின்றிருக்கும்போது, மற்றொரு ரெயில் வெளியே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் நடைமேடைகளை அதிகப்படுத்த வேண்டிய தேவை தற்போது இல்லை.

    ரெயில்வே தண்டவாளங்களில் அபாயகரமான இடங்களில் நின்று செல்பி எடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என்கிற ஆணை இன்னும் வரவில்லை. இதற்கான ஆணை வந்தபிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுப்பாராவ் கூறினார்.
    ரூ.8 கோடி நிதியில் பாம்பன் ரெயில் பாலத்தில் புதிதாக இரும்பு கர்டர்கள் மாற்றும் பணி தொடங்கியது. இதன்காரணமாக திருச்சி பாசஞ்சர் ரெயில் 30-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் தீவை இணைப்பதில் பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. கடலுக்குள் 146 தூண்கள் கட்டி, அதன் மீது 145 கர்டர்கள் அமைத்து தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அதன்மீது ரெயில்கள் சென்று வருகின்றன. கடலுக்குள் அமைந்துள்ளதோடு, 105 ஆண்டுகளை கடந்துள்ள பாலத்தின் பாதுகாப்பு கருதி அனைத்து ரெயில்களும் 20 கி.மீ. வேகத்தில் தான் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் பாம்பன் ரெயில் பாலத்தில் 27 கர்டர்கள் புதிதாக அமைக்க ரெயில்வே துறைக்கு மத்திய அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து அரக்கோணம் ரெயில்வே தொழிற்சாலையில் தயார் செய்யப்பட்ட இரும்பு கர்டர்கள் லாரி மூலம் பாம்பன் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, கிரேன் மூலம் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.

    இந்தநிலையில் பாம்பன் ரெயில் பாலத்தில் நேற்று புதிதாக இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி தொடங்கியது. இந்த பணியில் பாலத்தில் தூண்களின் மீது இருந்த பழைய இரும்பு கர்டர்கள் கிரேன் மூலம் முதலாவதாக அகற்றப்பட்டது. அதன் பின்பு பாம்பன் ரெயில் நிலையத்தில் இருந்து தண்டவாளம் வழியாக புதிய கர்டரானது பாலத்திற்கு தொழிலாளர்களால் இழுத்து கொண்டு வரப்பட்டது. அதன் பின்பு கிரேன் மூலமாக புதிய கர்டரானது பாலத்தில் பொருத்தப்பட்டது.

    இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், பாம்பன் ரெயில் பாலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் பாலத்தில் 44 கர்டர்கள் புதிதாக மாற்றப்பட்டன. தற்போது மேலும் 27 கர்டர்கள் புதிதாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளன. ஆனால் தற்போது 10 கர்டர்கள் மட்டுமே தான் புதிதாக அமைக்கப்படவுள்ளன. நேற்று தொடங்கிய இப்பணி வருகிற 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது. புதிய கர்டர் சீரமைப்பு பணிகளையொட்டி வருகிற 30-ந்தேதி வரை திருச்சி-ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில் ரத்து செய்யப்பட்டு, பரமக்குடி வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரெயிலை தவிர மற்ற அனைத்து ரெயில்களும் வழக்கம்போல் ராமேசுவரம் வரை வந்து செல்லும் என்றார். 
    ×