search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pamban Railway Bridge"

    • அனைத்து பணிகளையும் வேகமாக முடிக்க அதிகளவில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பாம்பன் புதிய ரெயில் பாலம் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
    • அடுத்த மாதம் முதல் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் வாராவதி கடல் பகுதியில் 1914 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் மீட்டர் கேஜ் ரெயில் பாலம் அமைக்கப்பட்டது.

    வரலாற்று சிறப்பு மிக்க இந்த பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் இரு பகுதியிலிருந்து திறந்து மூடும் வகையில் தூக்கு பாலம் அமைக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ள இந்த பாதையில் ரெயிலில் செல்வதை வாழ்நாள் கனவாகவும் கொண்டுள்ளனர்.

    இதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதை அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டது. இந்த பாலம் 106 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட பழுது மற்றும் சேதம் காரணமாக தொடர்ந்து அந்த பாதையில் ரெயில்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டு ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து, கடந்த 2019 ஆண்டு ரூ.525 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில்நுட்பத்துடன் பாம்பன் ரெயில் பாலம் கட்டுமான பணிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினர். இதன் பின்னர் பணிகள் தொடங்கியது. தற்போது மண்டபத்தில் இருந்து மையப்பகுதி வரையில் பணிகள் நிறைவடைந்துள்ளது.

    இதேபோன்று பாம்பனில் இருந்து மையப்பகுதி வரை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் மையப்பகுதியில் பொருத்தப்பட உள்ள தூக்கி இறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பாலம் 500 டன் எடையை கொண்டுள்ளது.

    இந்த பாலம் முழுமையாக பொருத்தப்பட்டு மையப்பகுதிக்கு கொண்டு செல்லுவதற்கான பணிகள் நடைபெறுகிறது. மேலும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்போது இந்த புதிய பாம்பன் ரெயில்வே பாலத்தை திறந்து வைக்க இருக்கிறார்.

    அதன் எதிரொலியாக அனைத்து பணிகளையும் வேகமாக முடிக்க அதிகளவில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பாம்பன் புதிய ரெயில் பாலம் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

    பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து 84 நாட்களுக்கு பிறகு பாம்பன் தூக்குப்பாலம் வழியாக ராமேசுவரத்துக்கு மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது. #PambanBridge #PambanRailwayBridge
    ராமேசுவரம்:

    மண்டபத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பனில் 3 கிலோ மீட்டருக்கு கடலில் ரெயில் மேம்பாலம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது.

    இந்த பாலத்தில் ராமேசுவரத்துக்கு நாள்தோறும் 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதேநேரத்தில் கப்பல் போக்குவரத்துக்கும் ஏற்றவகையில் இருபிரிவுகளாக திறக்கும்படி பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே ராமேசுவரம் பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி விரிசல் ஏற்பட்டது.  இதையடுத்து அந்த வழி தடத்தில் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டன.



    பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், 84 நாட்களுக்கு பிறகு தற்போது ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 6.5 டன் துருப்பிடிக்காத இரும்பு ராடுகளை கொண்டு விரிசல் சரிசெய்யப்பட்டதையடுத்த தற்போது மீண்டும் ரயில் சேவையை ரயில்வே தொடங்கியுள்ளது.

    புவனேஸ்வர், சேது, கோவை உள்ளிட்ட விரைவு ரயில்கள் 10 கிமீ வேகத்தில் ரயில் பாலத்தில் சென்றதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. #PambanBridge #PambanRailwayBridge

    ரூ.8 கோடி நிதியில் பாம்பன் ரெயில் பாலத்தில் புதிதாக இரும்பு கர்டர்கள் மாற்றும் பணி தொடங்கியது. இதன்காரணமாக திருச்சி பாசஞ்சர் ரெயில் 30-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் தீவை இணைப்பதில் பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. கடலுக்குள் 146 தூண்கள் கட்டி, அதன் மீது 145 கர்டர்கள் அமைத்து தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அதன்மீது ரெயில்கள் சென்று வருகின்றன. கடலுக்குள் அமைந்துள்ளதோடு, 105 ஆண்டுகளை கடந்துள்ள பாலத்தின் பாதுகாப்பு கருதி அனைத்து ரெயில்களும் 20 கி.மீ. வேகத்தில் தான் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் பாம்பன் ரெயில் பாலத்தில் 27 கர்டர்கள் புதிதாக அமைக்க ரெயில்வே துறைக்கு மத்திய அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து அரக்கோணம் ரெயில்வே தொழிற்சாலையில் தயார் செய்யப்பட்ட இரும்பு கர்டர்கள் லாரி மூலம் பாம்பன் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, கிரேன் மூலம் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.

    இந்தநிலையில் பாம்பன் ரெயில் பாலத்தில் நேற்று புதிதாக இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி தொடங்கியது. இந்த பணியில் பாலத்தில் தூண்களின் மீது இருந்த பழைய இரும்பு கர்டர்கள் கிரேன் மூலம் முதலாவதாக அகற்றப்பட்டது. அதன் பின்பு பாம்பன் ரெயில் நிலையத்தில் இருந்து தண்டவாளம் வழியாக புதிய கர்டரானது பாலத்திற்கு தொழிலாளர்களால் இழுத்து கொண்டு வரப்பட்டது. அதன் பின்பு கிரேன் மூலமாக புதிய கர்டரானது பாலத்தில் பொருத்தப்பட்டது.

    இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், பாம்பன் ரெயில் பாலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் பாலத்தில் 44 கர்டர்கள் புதிதாக மாற்றப்பட்டன. தற்போது மேலும் 27 கர்டர்கள் புதிதாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளன. ஆனால் தற்போது 10 கர்டர்கள் மட்டுமே தான் புதிதாக அமைக்கப்படவுள்ளன. நேற்று தொடங்கிய இப்பணி வருகிற 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது. புதிய கர்டர் சீரமைப்பு பணிகளையொட்டி வருகிற 30-ந்தேதி வரை திருச்சி-ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில் ரத்து செய்யப்பட்டு, பரமக்குடி வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரெயிலை தவிர மற்ற அனைத்து ரெயில்களும் வழக்கம்போல் ராமேசுவரம் வரை வந்து செல்லும் என்றார். 
    ×