search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Serious checking of"

    • ரெயில் நிலைய நுழைவாயில் பகுதியில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பயணிகள் கொண்டு வரும் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்து அதன் பின்னரே அவர்கள் உள்ளே அனுமதிக்கின்றனர்.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தங்கள் சொந்த ஊருக்கு நாளை மாலை முதல் மிக அதிக அளவில் பயணம் செய்ய உள்ளனர்.

    தொலை தூர பயணத்துக்கு பொது மக்கள் ரெயில் பயணங்க ளை அதிக அளவில் தேர்ந்தெடுத்து சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசுகள் ரெயிலில் கொண்டு செல்லக்கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். பொதுமக்கள் தங்கள் சொந்த பயன்பாடு அல்லது வணிகரீதியாக ரெயில்களில் யாரேனும் எளிதில் தீப்பற்ற கூடிய பட்டாசு ரகங்கள் எடுத்து செல்கின்றனரா? என்று போலீசார் கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான ரெயில்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் ரெயில் நிலைய நுழைவா யில் பகுதியில் இன்ஸ்பெ க்டர் கிருஷ்ணன் தலைமை யில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பயணிகள் கொண்டு வரும் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்து அதன் பின்னரே அவர்கள் உள்ளே அனுமதிக்கின்றனர். பட்டாசு ஏதேனும் உள்ளதா? என போலீசார் தீவிரமாக சோ தனை செய்து வருகின்றனர்.

    மேலும் ரெயில் நிலையத்தில் வரும் ஒவ்வொரு ரெயில்களையும் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனை வரும் 24-ந் தேதி நள்ளிரவு வரை நீடிக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    சோதனையின் போது பயணிகள் பட்டாசு எடுத்து செல்வது கண்டுபிடி க்கப்பட்டால் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். 

    ×