என் மலர்

    நீங்கள் தேடியது "worker dies"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராஜா கூலித் தொழிலாளி இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாய் கடித்ததாக கூறப்படுகிறது.
    • சிகிச்சை பலனன்றி நேற்று பரிதாபமாக இறந்து போனார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை பவளக்கொடி வீதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 46). கூலித் தொழிலாளி. இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதற்கு இவர் நாட்டு மருந்துகள் மூலமாக சிகிச்சை பெற்றுள்ளார். இதனால் இவர் சோர்வாகவும், வேலைக்கு செல்லாமலும் வீட்டிலேயே இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று திடீரென இவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து இவர் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனன்றி நேற்று பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மரம் வெட்டும் தொழிலாளியான இவர் தற்போது ராசிபுரம் அருகே உள்ள தொட்டிய வலசு கிராமத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.
    • நேற்று பாண்டியன், சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொட்டிய வலசு பிரிவு சாலையை கடக்க முயன்றார்.

    ராசிபுரம்:

    சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 55). மரம் வெட்டும் தொழிலாளியான இவர் தற்போது ராசிபுரம் அருகே உள்ள தொட்டிய வலசு கிராமத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். நேற்று பாண்டியன், சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொட்டிய வலசு பிரிவு சாலையை கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற சரக்கு வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது பற்றி வெண்ணந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தில் இறந்த பாண்டியனின் உடலை கைப்பற்றி ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விபத்து தொடர்பாக ெதாடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கல்குவாரியில் தவறி விழுந்து தொழிலாளி இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புதூரில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது.

    இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெடி வைத்து கல் உடைக்கப்பட்டது. குவிந்திருந்த கல் குவியலை அகற்றும் பணி இன்று காலை நடந்தது.

    இதில் ராஜபாளையம் அருகே உள்ள இளந்திரம்கொண்டான் கிராமத்தை சேர்ந்த மாரிக்கனி(வயது50), தென்காசி மாவட்டம் வலசையை சேர்ந்த முத்துமாணிக்கம்(45), சாமிராஜா(40) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

    கற்குவியலை அகற்றி கொண்டிருந்தபோது திடீரென கற்கள் சரிந்தது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 பேரும் நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தனர். இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர். தலையில் பலத்த காயமடைந்த மாரிக்கனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    உயிருக்கு போராடி கொண்டிருந்த முத்து மாணிக்கம், சாமிராஜா ஆகிய 2 பேரை அப்பகுதி மக்கள் மீட்டு தென்காசி மாவட்டம் சிவகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் விபத்து குறித்து தகவல் அறிந்த சேத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாரிக்கனியின் உடலை கைப்பற்றி ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்குவாரியில் தவறி விழுந்து தொழிலாளி இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் பெருமாள் வயது 43 தொழிலாளி. இவருடைய நண்பர் சத்யராஜ் என்பவருடன் வேலூர் பைபாஸ் ரோட்டில் உள்ள வெல்டிங் பட்டறைக்கு நேற்று வந்தனர். அப்போது பெருமாள் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

    உடனே அவரை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பெருமாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    வேலூர் வடக்கு போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வேலாயுதம். இவரது மகன் சிவக்குமார் (வயது 33), வெள்ளித் தொழிலாளி.
    • குடும்ப தகராறு காரணமாக உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    சேலம்:

    சேலம் சிவதாபுரம் சத்யா நகரை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகன் சிவக்குமார் (வயது 33), வெள்ளித் தொழிலாளி. இவர் கடந்த 23-ந் தேதி குடும்ப தகராறு காரணமாக உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    உடலில் தீ பற்றி எரிந்தபோது வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஒடி வந்து தீயை அணைத்தனர். பின்னர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவக்குமார் நேற்று மாலை பரிதமாக இறந்தார். இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த சம்பவத்தன்று சித்தோடு அருகே ஒரு வீட்டில் கட்டிடம் கட்டும் வேலைக்கு நல்லசாமி சென்று இருந்தார்.
    • இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு நடுப்பாளையம் பட்டுசாமி கோவில் தெரு வை சேர்ந்தவர் நல்லசாமி (57). கட்டிட கூலி தொழிலாளி. இவரது மனைவி கண்ணம்மாள்.

    கடந்த சம்பவத்தன்று சித்தோடு அருகே ஒரு வீட்டில் கட்டிடம் கட்டும் வேலைக்கு நல்லசாமி சென்று இருந்தார். அங்கு கட்டிட வேலையில் ஈடு பட்டுக் கொண்டிருந்தபோது கால் தவறி சாரத்தில் இருந்து கீழே விழுந்து விட்டார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவரு க்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நல்ல சாமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நேருக்கு நேர் மோதிக்கொண்டது
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி அருகே உள்ள பண்டபல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 30) கூலி வேலை செய்து வருகிறார்.

    நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் பண்டப்பல்லியில் இருந்து பரதராமி செல்ல பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாமிரெட்டிபல்லி கிராமம் தனியார் கல்லூரி அருகே வரும்போது ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து தாதுமணல் ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சென்ற லாரியும்-பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, பரதராமி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் ஆகியோர் விரைந்து வந்து சுரேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து தொடர்பாக பரதராமி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாடிப்படி ஏறியபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த தாஜ் புரா சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40), ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 2-ம் தேதி இரவு வீட்டின் மாடிபடிக்கட்டில் ஏறிச் சென்றுள்ளார். அப்போது கால் தவறி கீழே விழுந்து விட்டார்.

    ஆபத்தான நிலையில் இருந்த ரமேஷை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    அங்கு ரமேஷ் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காஞ்சிக்கோயில் அடுத்துள்ள எல்.எம்.எஸ். வீதி அருகே வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி சக்திவேல் ரோட்டில் விழுந்தார்.
    • இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த அடிபட்டு மயக்கமாக இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோவில், செங்காளிபாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 50). கூலி தொழிலாளி.

    சம்பவத்தன்று சக்திவேல் காஞ்சிக்கோவிலுக்கு சொந்த வேலையாக சென்று விட்டு செங்காளி பாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    காஞ்சிக்கோயில் அடுத்துள்ள எல்.எம்.எஸ். வீதி அருகே வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி ரோட்டில் விழுந்தார்.

    இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த அடிபட்டு மயக்கமாக இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சக்திவேல் இறந்து விட்டதாக கூறினர்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சவுதி அரேபியாவில் முசிறி தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
    • உடலை மீட்டு வர மனைவி கண்ணீர் மனு

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் முசிறி சித்தாம்பூர் காவேரி பாளையம் குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் புரவியான் (வயது 48). இவர் கடந்த சில ஆண்டுகளாக அரபு நாடுகளில் வெல்டிங் வேலை செய்து வந்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியா சென்ற அவர் அங்குள்ள உள்ள ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார்.

    இந்த நிலையில் கடந்த 8 தேதி அவர் வேலை பார்த்த கம்பெனியிலிருந்து ஒரு ஊழியர் புரவியானின் மனைவி அன்னக்கிளியை தொடர்பு கொண்டு, உங்களது கணவர் மாயமாகிவிட்டதாக தெரிவித்தார். பின்னர் நேற்றைய தினம் காலை உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர் நேற்று நள்ளிரவு புரவியான் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.

    இதை அடுத்து அன்னக்கிளி தனது மகள் நிவேதாவுடன் திருச்சி கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில், கணவர் சாவில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கணவர் இறந்து விட்டதாக தகவல் வந்துள்ளது. கணவர் உடலை மீட்டுத் தந்து எங்கள் வாழ்வாதாரத்துக்கு வழி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மனைவி போலீஸ் நிலையத்தில் புகார்
    • பைக்கில் சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, அருகே உள்ள அனாதிமங்கலம், கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன், (வயது 45) தொழிலாளி. சேத்துப்பட்டில் இருந்து அனாதிமங்கல கிராமம் நோக்கி ஆரணி - சேத்துப்பட்டை சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஆரணியில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி எதிரே வந்தமினி வேன் அய்யப்பன் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.

    இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அய்யப்பனை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அய்யப்பன் பரிதாபமாக இறந்துவிட்டார். சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துமனி வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print