என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சையால் தொழிலாளி சாவு
- எடப்பாடி கோழிப் பண்ணை பகுதியை சேர்ந்த வர் பச்சமுத்து (வயது 58). கூலி தொழிலாளி.
- கடந்த 20-ந் தேதி சேலம் அரசு மருத்துவ மனையில் அனும திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடி கோழிப் பண்ணை பகுதியை சேர்ந்த வர் பச்சமுத்து (வயது 58). கூலி தொழிலாளி. இவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 20-ந் தேதி சேலம் அரசு மருத்துவ மனையில் அனும திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் திடீரென இவர் உயிரிழந்தார். இதை அறிந்த பச்சமுத்துவின் உறவினர்கள் இன்று மருத்துவமனை டீன் அலுவலகத்தை முற்றுகை யிட முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து இறந்த பச்சமுத்துவின் மகன் கூறும்போது, எனது தந்தைக்கு சி.டி. ஸ்கேன் எடுத்தனர். அதேபோல விபத்தில் அனுமதிக்கப் பட்ட, எனது தந்தை பெயர் கொண்ட மற்றொரு பச்சமுத்து என்பவருக்கும் சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டது. இருவரின் மருத்துவ அறிக்கை மாறிய தால் எனது தந்தைக்கு தர வேண்டிய சிகிச்சை வேறு ஒரு நபருக்கும், தலையில் அடிபட்டு விபத்தில் அனு மதிக்கப்பட்ட பச்சமுத்து என்பவருக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சையை எனது தந்தைக்கும் அளித்த தால், அவர் உயிரிழந்து விட்டார்.
தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுத்து, எனது இறப்புக்கு தந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும். இதுபோன்று மருத்துவர்கள் கவனக்கு றைவாக செயல்பட்டால், எவ்வாறு ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனையை நம்பி வந்து சிகிச்சை பெற முடியும்? எனவே மருத்து வர்கள் கவனமுடன் செயல்பட்டு சிகிச்சை செய்ய வேண்டும். மேலும் எனது தந்தை உடலை பிரேத பரிசோ தனை செய்யாமல் தர வேண்டும் என தெரி வித்தார். மருத்துவர் தவறான சிகிச்சை அளித்த தன் காரணமாக, தந்தை இறந்ததாக கூறி மருத்துவ மனை டீன் அலுவலகத்தை மகன் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட முயன்ற சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்