search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்டிட பணியின் போது தவறி விழுந்து தொழிலாளி பலி
    X

    கட்டிட பணியின் போது தவறி விழுந்து தொழிலாளி பலி

    • கடந்த சம்பவத்தன்று சித்தோடு அருகே ஒரு வீட்டில் கட்டிடம் கட்டும் வேலைக்கு நல்லசாமி சென்று இருந்தார்.
    • இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு நடுப்பாளையம் பட்டுசாமி கோவில் தெரு வை சேர்ந்தவர் நல்லசாமி (57). கட்டிட கூலி தொழிலாளி. இவரது மனைவி கண்ணம்மாள்.

    கடந்த சம்பவத்தன்று சித்தோடு அருகே ஒரு வீட்டில் கட்டிடம் கட்டும் வேலைக்கு நல்லசாமி சென்று இருந்தார். அங்கு கட்டிட வேலையில் ஈடு பட்டுக் கொண்டிருந்தபோது கால் தவறி சாரத்தில் இருந்து கீழே விழுந்து விட்டார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவரு க்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நல்ல சாமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×