என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி பலி"

    • யானைபின் தொடர்ந்து துரத்தி, ராஜேசை தாக்கியது.
    • பொதுமக்கள், ராக்வுட் தேயிலை தொழிற்சாலை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா நெலாக்கோட்டை பகுதியில் ராக்வுட் தேயிலைத் தோட்டம் அருகே ஒரு ஆண் யானை கடந்த சில நாட்களாக முகாமிட்டு வந்தது.

    கடந்த 30-ந் தேதி இரவு, அங்குள்ள எஸ்டேட் தொழிலாளி ராஜேஷ் (48) என்பவர் தனது மனைவி கங்காவுடன் நெலாக்கோட்டை பஜாரில் பூஜை சாமான்கள் வாங்கிக் கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பினார்.

    வீட்டிற்கு அருகே வந்தபோது, ரோட்டில் யானை நின்று கொண்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஷ், அவரது மனைவி, மற்றும் ஆட்டோ டிரைவர் ரமேஷ் ஆகியோர் ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடினர். அப்போது யானைபின் தொடர்ந்து துரத்தி, ராஜேசை தாக்கியது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் யானை ஆட்டோவையும் சேதப்படுத்தியது.

    வனத்துறையினர் ராஜேஷ் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றபோது, பொதுமக்கள் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    டி.எஸ்.பி வசந்தகுமார் மற்றும் வனத்துறை அதகாரிகள் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து இரவு 11.30 மணிக்கு உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

    சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நேற்று காலை மீண்டும் பொதுமக்கள், ராக்வுட் தேயிலை தொழிற்சாலை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உயிரிழந்தவரின் மனைவிக்கு கல்வித் தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும், மனிதர்களை தாக்கும் யானையை பிடிக்க வேண்டும், கூடுதல் வன ஊழியர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு எம்.எல்.ஏ ஜெயசீலன், ஆர்.டி.ஓ குணசேகரன், டி.எஸ்.பி. வசந்தகுமார், தாசில்தார் சிராஜுநிஷா ஆகியோர் நேரில் வந்து பேச்சு நடத்தினர். மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் மதியம் போராட்டத்தை கைவிட்டனர். அப்பகுதியில் போலீசார் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • புலி நடமாட்டம் இருப்பதாக கருதப்பட்ட இடங்களில் வனத்துறையினர் சார்பில் கூண்டு வைக்கப்பட்டது.
    • கூண்டில் சிக்கியது 13 வயது மதிக்கத்தக்க பெண் புலி ஆகும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் காளிகாவு அருகே கடந்த மே மாதம் ரப்பர் தோட்டத்தில் நின்று கொண்டிருந்த சோக்காடு கல்லமுலா பகுதியை சேர்ந்த அப்துல்கபூர்(வயது45) என்ற தொழிலாளி புலி தாக்கியதில் பலியானார்.

    அப்துல் கபூரை கொன்ற புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து புலி நடமாட்டம் இருப்பதாக கருதப்பட்ட இடங்களில் வனத்துறையினர் சார்பில் கூண்டு வைக்கப்பட்டது. புலியை கண்டுபிடிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் சிக்காமல இருந்துவந்தது.

    இந்த நிலையில் அப்துல்கபூரை கொன்ற புலி, எஸ்டேட் பகுதியில் வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சிக்கியது. இதுகுறித்து தகவலறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். மேலும் அங்கு ஏராளமான பொதுமக்களும் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    கூண்டில் சிக்கியது 13 வயது மதிக்கத்தக்க பெண் புலி ஆகும். அதனை காட்டுக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் கூண்டுக்குள் சிக்கியதும் ஆக்ரோஷமாக அங்கும் இங்கும் ஓடியதால் கூண்டில் மோதி புலியின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் புலிக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

    தொழிலாளியை கொன்ற புலி 50 நாட்களுக்கு பிறகு சிக்கியுள்ளதால் அந்த பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

    • மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது.
    • மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரியை அடுத்த பென்னாகரம் குண்டு பெருமாள் காலனி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் செல்வபதி (வயது 31). வெல்டிங் தொழிலாளி.

    நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் அதியமான் கோட்டை அருகேயுள்ள புறவடை ஜங்சன் பகுதியில் சென்றுள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட செல்வபதி படுகாயம் அடைந்தார்.அவரை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ராஜன் நேற்று இரவு திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே சாலையை கடக்க முயன்றார்.
    • திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி திடீரென ராஜன் மீது மோதியது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர், ஜெயா நகர் பாரதி தெருவை சேர்ந்தவர் ராஜன் (வயது65). கூலித்தொழிலாளி. இவர் நேற்று இரவு திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி திடீரென ராஜன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவர் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    • தேர்ப்பேட்டை என்ற பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த பைக் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது.
    • சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக மகேந்திரன் உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    திருவண்ணாமலை மாவட்டம், திருவதிபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் நேற்று முன்தினம் காவேரிப்பட்டணம்-கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது தேர்ப்பேட்டை என்ற பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த பைக் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக மகேந்திரன் உயிரிழந்தார்.

    இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கதிரேசன் பட்டணம் அருகே வந்த போது சாலையை கடக்க முயற்சி செய்தார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிரேசனை மோதியது எந்த வாகனம்? அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை மதுக்கரை சீராப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 48). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று சேலம்-பாலக்காடு ரோட்டில் நடந்து சென்றார். பட்டணம் அருகே வந்த போது சாலையை கடக்க முயற்சி செய்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கதிரேசன் மீது மோதியது. பின்னர் நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட இவர் பலத்த காயம் அடைந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிரேசனை மோதியது எந்த வாகனம்? அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    • ஜே.சி.பி. எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் பெருக்கெடுத்து வந்தது.
    • பள்ளத்தில் வேலை செய்து கொண்டிருந்த சக்திவேல் மீது மணல் சரிந்து விழுந்தது. இதில் அவர் மண்ணில் புதைந்துவிட்டார்.

    மதுரை:

    மதுரை கூடல்புதூர் அசோக்நகர் 2-வது தெரு பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் இந்தப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    இன்று காலை பாதாள சாக்கடை திட்டப்பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். ஈரோட்டைச் சேர்ந்த சக்திவேல் (வயது 35) என்பவரும் பாதாள சாக்கடை பணியில் ஈடுபட்டார். இதற்காக ஜே.சி.பி. எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் பெருக்கெடுத்து வந்தது.

    அப்போது பள்ளத்தில் வேலை செய்து கொண்டிருந்த சக்திவேல் மீது மணல் சரிந்து விழுந்தது. இதில் அவர் மண்ணில் புதைந்துவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரை மீட்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். பள்ளத்தை தண்ணீர் மூடி விட்டதால் அவரது உடலை உடனடியாக மீட்க முடியவில்லை. இதனால் மணலில் புதைந்த சக்திவேல் உயிருடன் புதைந்து பலியாகி விட்டார். அவரது உடலை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதியம் 1 மணி வரை அவரது உடலை மீட்க முடியவில்லை. இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மதுரையில் மணலில் புதைந்து தொழிலாளி பலியான சம்பவத்தில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • ஒப்பந்த நிறுவனங்களிடம் தொழிலாளிக்கு உரிய உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் கூறினார்.

    மதுரை

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). இவர் நேற்று மதுரை கூடல்புதூர் அசோக்நகர் 2-வது தெருவில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணியில் ஈடுபட்டபோது மணல் சரிவில் சிக்கி புதைந்து பலியானார். அவரது உடல் 5 மணிநேரம் போராடி மீட்கப்பட்டது. இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வேலை பார்த்ததால் சக்திவேல் மணலில் புதைந்து பலியானதாக சக தொழிலாளர்கள் கூறினர்.

    இதுபற்றிய புகாரின் பேரில் கோவையைச் சேர்ந்த தனியார் கட்டிட நிறுவன உரிமையாளர் அசோகன், மேலாளர் ரவிக்குமார், மேற்பார்வையாளர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மாநகரில் நடப்பாண்டு மட்டும் 6 பேர் புதைக்குழிக்குள் சிக்கி பலியாகி உள்ளனர். மதுரையில் கடந்த ஏப்ரல் மாதம் பழங்காநத்தம் கழிவு நீரேற்று நிலையத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியில் இறங்கிய சிவகுமார் (வயது 45), சரவணன் ( 32), அலங்காநல்லூர் லட்சுமணன் (வயது 31) ஆகிய 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    விளாங்குடியில் கடந்த ஜூன் மாதம் பாதாள சாக்கடை பணியில் ஈடுபட்ட ஈரோடு வீரணன் என்பவர், புதைகுழிக்குள் சிக்கி பலியானார். கூடல்புதூர், சொக்கலிங்கம் நகரில் குடிநீர் குழாய்க்காக தோண்டிய பள்ளத்தில், சமையல்காரர் ரமேஷ் என்பவர் தவறி விழுந்து இறந்தார்.

    இது தொடர்பாக மதுரை மாநகராட்சி கமிஷனர் சிம்ரஞ்சித்சிங் கூறுகையில், "மாநகரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நிலப்பரப்பின் பெரும்பாலான பகுதிகள் ஈரப்பதத்துடன் உள்ளன. எனவே 10 அடிக்கு மேல் பள்ளம் உள்ள பகுதிகளில், மறுசீரமைப்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளோம்.

    ஒப்பந்த நிறுவனங்களிடம் தொழிலாளிக்கு உரிய உபகரணங்கள் வழங்க வேண்டும். பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளோம். விபத்தில் இறந்த சக்திவேலுக்கு இன்சூரன்ஸ் போடப்பட்டு உள்ளது. இருந்த போதிலும் தமிழக அரசிடம் பேசி அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு பெற்று தரப்படும் என்றார்.

    • செல்வலிங்கம் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
    • பலத்த காயம் அடைந்த செல்வலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதுக்கோட்டை அய்யனார் காலனியை சேர்ந்தவர் செல்வலிங்கம் ( வயது 32). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு இவர் வழக்கம்போல் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டி ருந்தார்.

    லாரி மோதியது

    மறவன்மடம் அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த செல்வலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வலிங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோபால கிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் காளப்பட்டி- கோவில்பாளையம் ரோட்டில் சென்றார்.
    • லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் வந்த கோபால கிருஷ்ணன் மீது மோதியது.

    கோவை,

    கோவை சரவணம்பட்டி பெருமால் கோவில் வீதியை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (வயது 40). தொழிலாளி.சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் காளப்பட்டி- கோவில்பாளையம் ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் வந்த கோபால கிருஷ்ணன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சம்பவத்தன்று சித்தோடு அருகே ஒரு வீட்டில் கட்டிடம் கட்டும் வேலைக்கு நல்லசாமி சென்று இருந்தார்.
    • இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு நடுப்பாளையம் பட்டுசாமி கோவில் தெரு வை சேர்ந்தவர் நல்லசாமி (57). கட்டிட கூலி தொழிலாளி. இவரது மனைவி கண்ணம்மாள்.

    கடந்த சம்பவத்தன்று சித்தோடு அருகே ஒரு வீட்டில் கட்டிடம் கட்டும் வேலைக்கு நல்லசாமி சென்று இருந்தார். அங்கு கட்டிட வேலையில் ஈடு பட்டுக் கொண்டிருந்தபோது கால் தவறி சாரத்தில் இருந்து கீழே விழுந்து விட்டார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவரு க்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நல்ல சாமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 43), கூலி தொழிலாளி.
    • இவர் நேற்று காலை சொந்த வேலையாக மோட்டார் சைக்கிளில் அன்னதானப்பட்டிக்கு சென்றார்.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் கோட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 43), கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை சொந்த வேலையாக மோட்டார் சைக்கிளில் அன்ன தானப்பட்டிக்கு சென்றார். அப்போது அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே ரோட்டை கடக்க முயன்ற போது, பழைய பஸ் நிலையத்தில் இருந்து மகுடஞ்சாவடி நோக்கி சென்ற அரசு டவுன் பஸ், எதிர்பாராத விதமாக சீனிவாசன் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சீனிவாசன், தலையில் பலத்த காயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சீனிவாசன் பரிதாபமாக இருந்தார். இந்த விபத்து குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×