என் மலர்
நீங்கள் தேடியது "worker death"
- தொழிலாளி மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.
- கருமத்தம்பட்டி போலீசார் விசாரிக்கிறார்கள்.
கோவை:
கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 36). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ருக்குமணி(26). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த 4 நாட்களாக ஆனந்தகுமார் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. இதனால் அவர் மிகவும் சோர்வுடன் காணப்பட்டார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த போது தீடீரென மயங்கினார். இதனை பார்த்த வீட்டில் இருந்த வர்கள் உடனடியாக ஆனந்தகுமாரை மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கருமத்த ம்பட்டி போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதி.
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த பெரிய கொமேஸ்வரம் பகுதியை சேர்ந்த சூராவேலு மகன் ஏழுமலை வயது (31) கட்டட தொழிலாளி நேற்று இரவு உடல்நிலை சரியில்லை என ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். டாக்டர்கள் ஏழும லையை பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டம் அணைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அங்குள்ள தடுப்பணைக்கு அப்பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி முத்து (வயது 30) என்பவர் நேற்று முன்தினம் இரவு குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் அவரது மோட்டார் சைக்கிள் தடுப்பணை அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை கண்ட அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் இது குறித்து முத்துவின் வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது முத்துவின் ஆடைகளும் அங்கு இருந்ததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் நிலைய அலுவலர் பாலமுருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து முத்துவை தேடினர். சுமார் 4½ மணி நேர தேடுதலுக்கு பின்னர் முத்துவின் உடல் கிடைத்தது. இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். தடுப்பணையில் குளித்த போது நீரில் மூழ்கி அவர் இறந்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 52). கூலித் தொழிலாளி. இவர் நேற்று காலை தூத்துக்குடியில் உள்ள தெப்பக்குளத்துக்கு வந்தாராம். அங்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. அவர் தெப்பக்குளத்தில் குளிப்பதற்காக இறங்கினாராம். அப்போது எதிர்பாராதவிதமாக மாரிமுத்து குளத்தில் கால் தவறி விழுந்துள்ளார். சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவளக்குப்பம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது40), கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் இருந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக இளங்கோவனின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
இதனால் இளங்கோவன் தனது மகனுடன் வசித்து வந்தார். இதற்கிடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இளங்கோவனின் மகனும் இறந்து போனார். ஏற்கனவே மனைவி பிரிந்து சென்ற வேதனையில் இருந்து வந்த இளங்கோவன் தனது ஒரே மகனும் இறந்து போனதால் சோகத்தில் அதிகமாக மதுகுடித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் இளங்கோவன் பிணமாக கிடந்தார். அக்கம்பக்கத்து வீட்டினர் இதனை பார்த்து தவளக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குபதிவு செய்து இளங்கோவன் அளவுக்கு அதிகமாக மதுகுடித்ததால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிறுமுகை அருகே உள்ள பெத்திகுட்டையை சேர்ந்தவர் வீரன் (வயது 45). கூலித் தொழிலாளி. இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த முருகன் (40).
சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் மேட்டுப்பாளையம்- சத்தி ரோட்டில் நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வேன் 2 பேரும் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே வீரன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சிறுமுகை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூலூர் செஞ்சேரிபுதூரை சேர்ந்தவர் குமரேசன் (32). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் பல்லடம்-உடுமலை ரோட்டில் சென்றார்.
அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த லாரி திடீரென பின்னால் வந்தது. இதனை கவனிக்காமல் சென்ற குமரேசன் கண்இமைக்கும் நேரத்தில் லாரி மீது மோதினார்.
இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் ஆனால் செல்லும் வழியிலேயே குமரேசன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூலூரை சேர்ந்தவர் செல்வராஜ் (34). தனியார் நிறுவன ஊழியர்.
சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் சூலூர்- எம்.ஜி.புதூர் ரோட்டில் சென்றார். அப்போது திடீரென நாய் குறுக்கே வந்தது. நாய் மீது மோதாமல் இருக்க செல்வராஜ் பிரேக் போட்டார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் சாமிநாதன் (25).
சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் செஞ்சேரி மலை ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சாமிநாதன் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். சுல்தான்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாபநாசம்:
பாபநாசம் நகர சுத்தி தொழிலாளர் காலனியில் வசித்து வந்தவர் முருகானந்தம் (வயது35). கூலித்தொழிலாளி. இவர் மனைவி மேரி (27). கணவன்-மனைவி இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்நிலையில் முருகானந்தம் அதே தெருவில் வசித்து வரும் தனது தாயார் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.
இந்நிலையில் அவரது மனைவி மேரி கணவர் முருகானந்தம் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பாபநாசம் போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முருகானந்தம் பிரேதத்தை பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள கழனிவாசலில் அரசின் சார்பில் தண்ணீர் தொட்டி புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்தப்பணியில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள மேலப்பனையைச் சேர்ந்த செந்தில் (வயது 37) என்ற கட்டிடத் தொழிலாளி ஈடுபட்டு வருகிறார்.
வழக்கமாக இரவு நேரங்களில் புழுக்கம் காரணமாக செந்தில் தண்ணீர் தொட்டியின் மேல் பகுதிக்கு சென்று தூங்குவது வழக்கம்.
நேற்று இரவு செந்தில் தண்ணீர் தொட்டியின் மேலே சென்று தூங்கியுள்ளார். இன்று அதிகாலை எழுந்த அவர், தூக்க கலக்கத்தில் கீழே இறங்க முயன்றுள்ளார்.
அப்போது நிலை தடுமாறி செந்தில் தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.