என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோல் தொழிற்சாலை"

    • விஷவாயு தாக்கி கத்தியவாடி கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மயங்கி விழுந்தார்.
    • சுத்திகரிப்பு பணிக்கு உதவியாக வந்திருந்த பெண்கள் ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த வி.சி.மோட்டூரில் தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் ராணிப்பேட்டை நகரம் மற்றும் சுற்றியுள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றி அனுப்பபடும் கழிவுநீர் பல்வேறு நிலைகளில் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது.

    சுத்திகரிப்பு நிலையத்திற்கு தொழிற்சாலைகளிலிருந்து கழிவுநீர் வரும் குழாயில் சுத்திகரிப்பு நிலையம் சார்பில் அவ்வப்போது அடைப்பு சரி செய்வது உள்பட பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காலை வி.சி.மோட்டூர் தனியார் கியாஸ் ஏஜென்சி எதிரில், சுத்திகரிப்பு நிலையத்திற்கு தோல் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் வரும் பெரிய அளவிலான குழாயில் அடைப்பு ஏற்பட்டது. அதனை சரி செய்ய அதன் மேல் புறத்தை திறந்து அதில் 4 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது விஷவாயு தாக்கி கத்தியவாடி கிராமத்தை சேர்ந்த ஏழுமலை(54) என்பவர் மயங்கி விழுந்தார்.

    இதை பார்த்த ஆற்காட்டை சேர்ந்த சாந்தகுமார் (31), மேல்விஷாரத்தை சேர்ந்த இப்திகார் உல்கக் (31), பூண்டிகிரமத்தைசேர்ந்த ரமேஷ்(46) ஆகியோர் ஏழுமலையை மீட்க முயன்றனர். அவர்களும் மூச்சு திணறி மயக்கம் ஏற்பட்டு மயங்கினர்.

    இதை பார்த்த சுத்திகரிப்பு பணிக்கு உதவியாக வந்திருந்த பெண்கள் ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு படையினர் விரைந்து வந்து குழாய்க்குள் மயங்கிய நிலையில் இருந்த 4 பேரை உடனடியாக மீட்டனர்.

    மீட்கப்பட்டவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஏழுமலை மேல் சிகிச்சைக்காக பூட்டுத்தாக்கில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்ற 3 பேருக்கும் வாலாஜா அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர்.

    இது தொடர்பாக ராணிப்பேட்டை, வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் ராணிப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • செந்தமிழ்ச்செல்வன் ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட்டில் தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
    • விஷ வாயு தாக்கி 4 பேரும் மயக்கம் அடைந்தனர்.

    ராணிப்பேட்டை:

    வேலூர் மாவட்டம், சதுப்பேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன் (வயது 31). இவரது மனைவி ஷீலா, இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    செந்தமிழ்ச்செல்வன் ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட்டில் தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

    நேற்று இரவு செந்தமிழ் செல்வனுடன் ராணிப்பேட்டை வி.சி. மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜா (47), வாழைப்பந்தலை சேர்ந்த ராமதாஸ் (26), புளியங்கன்னு பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (49) ஆகியோர் தோல் தொழிற்சாலையில் உள்ள கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது விஷ வாயு தாக்கி 4 பேரும் மயக்கம் அடைந்தனர். இதில் செந்தமிழ் செல்வனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    ராஜா, ராமதாஸ், மகேந்திரன் ஆகியோர் மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தனர். இதனை கண்ட சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் செந்தமிழ் செல்வன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்வேறு வெளிநாடுகளுக்கும் தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அடுத்த ஓதியம்பட்டு பகுதியை தலைமையிடமாக கொண்டு தனியார் தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

    இங்கு தயாரிக்கபடும் பொருட்கள் அரியாங்குப்பம், மிஷன் வீதியில் உள்ள வணிக நிறுவனங்களின் விற்பனை செய்யபட்டு வருகிறது. பல்வேறு வெளிநாடுகளுக்கும் தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து வந்த 20 பேர் அடங்கிய வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று புதுச்சேரிக்கு வந்தனர். ஒரே நேரத்தில் 3 குழுக்களாக பிரிந்து, தோல் தொழிற்சாலை மற்றும் விற்பனையகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    வரி ஏய்ப்பு காரணமாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருகிறது. இதில் பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ×