search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ranipet"

    • சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 4ம் தேதி (திங்கட்கிழமை) அன்று பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை.
    • செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் திங்கள் அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

    மிச்சாங் புயல் தீவிரமடைந்துள்ளதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் எனவும், குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் ரெட் அலார்ட் (பலத்த மழை) எச்சரிக்கையும் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 4ம் தேதி (திங்கட்கிழமை) அன்று பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் திங்கள் அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    4 மாவட்டங்களைத் தொடர்ந்து, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.

    தொடர்ந்து, விழுப்புரத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

    கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    வேலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை அருகே 3 குடிசை வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் மூதாட்டி உடல் கருகி பலியானார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வாலாஜா:

    ரணிப்பேட்டை அடுத்த காரை பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 70) குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகள் சுகுணா (42). மகன் ராஜ்குமார் (35).

    சுகுணாவிற்கு திருமணமாகி சாந்தி வீட்டின் அருகிலேயே வசித்து வருகிறார். இவரது வீட்டில் மின் இணைப்பு இல்லாத காரணத்தால் தாய் சாந்தி வீட்டில் இருந்து ஒயர் மூலம் மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வந்தார்.

    இந்நிலையில் நேற்றிரவு சுகுணா வீட்டிற்கு சென்ற மின் ஒயரில் திடீரென தீபிடித்து எரிந்து சாந்தியின் குடிசை வீட்டில் தீ பற்றியது காற்று அதிகமாக வீசியதால் தீ அருகில் இருந்த சுகுணா மற்றும் வினோத்குமார் வீடுகளிலும் மளமளவென பரவியது.

    சாந்தியால் வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை. இதனால் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார். தீ பற்றி எரிவதை கண்டு வெளியே ஓடிவந்த ராஜ்குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

    இது குறித்து ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு அலுவலர் கமலக்கண்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    ராணிப்பேட்டை டி.எஸ்.பி. கலைசெல்வன், மற்றும் போலீசார் சாந்தியின் உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீகாயமடைந்த ராஜ்குமாரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்த்திரியில் சேர்த்தனர். பின்னர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இன்று காலை தீ விபத்து நடந்த வீடுகளை காந்தி எம்.எல்.ஏ. பார்வையிட்டு பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

    ராணிப்பேட்டை அருகே வியாபாரி வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாஹவீர் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் கலீல் (வயது 52) பிஸ்கெட் வியாபாரி. இவர் நேற்று இரவு வேலூரில் நடந்த உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு குடும்பத்தோடு வந்திருந்தார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுவிட்டனர்.

    இன்று காலை வீட்டிற்கு திரும்பிய கலீல் வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து கலீல் ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை அருகே பால் வியாபாரியிடம் ரூ. 82 ஆயிரம் திருட்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை அடுத்த பொன்னை எஸ்.என். பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 62). பால் வியாபாரி.

    கணேசன் வியாபார தேவைக்காக நேற்று பொன்னையில் உள்ள கூட்டுறவு வங்கியில் ரூ.40ஆயிரமும் மற்றோரு தனியார் வங்கியில் ரூ.42 ஆயிரம் எடுத்தார். அந்த பணத்தை ஒரு பையில் வைத்து வங்கி முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது பைக் பெட்டியில் வைத்தார்.

    அப்போது அங்கு வந்த அவரது நண்பரிடம் கணேசன் பேசிக் கொண்டு இருந்தார். பின்னர் அங்கிருந்து மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்றார். அங்கு பைக்கை நிறுத்தி பெட்டிடையை திறந்து பார்த்தார். அபபோது பொட்டியில் வைத்திருந்த பணப்பை காணமல் போயிருந்தது.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கணேசன் இது குறித்து பொன்னை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டையில் பீர் பாட்டிலை உடைத்து 3 பேரை குத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை ஆர்.எப். ரோடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் மகன் சுரேஷ் (வயது 28). இவர், நேற்று மாலை பைக்கில் சென்ற போது ஒரு டீக்கடை முன்பு உட்கார்ந்து இருந்த அதே பகுதியை சேர்ந்த கண்ணன் (32) என்பவர் மீது மோதி விட்டார்.

    இதனால் இருத்தரப்பினர் பயங்கரமாக மோதி கொண்டனர். கண்ணன் தரப்பினர் பீர் பாட்டிலை உடைத்து பைக்கை மோதிய சுரேஷ் மற்றும் அவரது உறவினர்கள் பிரதாப், கலைவாணனை சரமாரியாக குத்தினர். இதில் 3 பேருக்கும் மார்பு, முதுகில் குத்துப்பட்டு ரத்தம் பீறிட்டு கொட்டியது.

    படுகாயமடைந்த அவர்களை, பொதுமக்கள் மீட்டு ராணிப்பேட்டை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து பீர் பாட்டிலால் தாக்கிய கண்ணன் மற்றும் அவரது மைத்துனர் விஜய் (20), நண்பர் வீரமணி (26) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராணிப்பேட்டையில் மணல் கடத்தலை தடுத்த போலீஸ் சப் -இன்ஸ்பெக்டரை ஒழித்து விடுவதாக மிரட்டியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ராணிப்பேட்டை:

    சிப்காட்டை அடுத்த அவரக்கரை அருகே உள்ள பாலாற்றில் இருந்து நேற்று அதிகாலை புளியங்கண்ணுவை சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 28) என்பவர் டிப்பர் லாரியில் மணல் கடத்தி வந்தார்.

    ராணிப்பேட்டை ஒத்தவாடை தெரு அருகே வந்தபோது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நெடுஞ்சாலை ரோந்துப்பணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி மணல் கடத்தி வந்த லாரியை மடக்கினார்.

    அப்போது சம்பவ இடத்திற்கு வந்த ராணிப்பேட்டை காரை பகுதியை சேர்ந்த நரேஷ் என்பவர் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதியை அசிங்கமாக பேசி ஒழித்து விடுவேன் என மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து கருணாநிதி ராணிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். ராணிப்பேட்டை போலீசார் மணல் கடத்தி வந்த டிப்பர் லாரி டிரைவர் ரஞ்சித்குமாரை கைது செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நரேசை தேடி வருகின்றனர்.#tamilnews
    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், மத்திய அரசு, தமிழக அரசை கண்டித்ததும் ராணிப்பேட்டை பெல் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    குடியாத்தம்:

    தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து குடியாத்தம் சித்தூர்கேட் பகுதியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர். மாநில இணை செயலாளர் ஏ.இஸ்மாயில் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இர்ஷாத்அலி, மாவட்ட அமைப்பாளர் நியாஸ் அகமது, நகர தலைவர் மைனுதீன், வர்த்தக அணி வாலிபாஷா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    உண்ணாவிரதத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்தும், அப்பாவி பொதுமக்கள் 12 பேர் இறப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது கடுமையாக நடடிக்கை எடுக்க வேண்டும், இதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்-அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுவதாக கூறி போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரையில் படுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலும் உள்ளதை கண்டுக்காத மத்திய அரசு, தமிழக அரசை கண்டித்து ராணிப்பேட்டை பெல் ஊழியர்கள் இன்று காலை பெல் கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன், சிவக்குமார், கணேஷ், ஸ்டாலின், சங்கர நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    ×