என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meteorological Centre"

    • சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
    • சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருவெடுத்தது.

    இந்தப் புயலுக்கு டிட்வா என பெயரிடப்பட்டது. இந்த டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரையை நெருங்கியிருக்கும் நிலையில், இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    மேலும் இந்த டிட்வா புயல் அடுத்து இரண்டு நாட்களுக்கு சென்னை கடற்கரை அருகே நிலை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு 3 கிமீ வேகத்தில் நகர்ந்த நிலையில் கடந்த 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் நீடிக்கிறது.

    • சென்னையின் சில இடங்களில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு மேகவெடிப்பே காரணம்.
    • வடகிழக்கு பருவமழையால் இந்தாண்டு தமிழகத்தில் நல்ல மழைப்பொழிவு இருக்கும்.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக இரவு 11 மணிக்கு மேல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த 30ம் தேதி சென்னையின் சில இடங்களில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு மேகவெடிப்பே காரணம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    இந்நிலையில், வடகிழக்கு பருவமழையால் இந்தாண்டு தமிழகத்தில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்றும் சென்னையில் இந்தாண்டு புயல் ஆபத்தும் இருக்கிறது என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழை இந்தாண்டு காலக்கட்டத்தில், குறிப்பாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் காலங்களில் வலி மண்டலம் மற்றும் கடல் சார்ந்த அமைப்புகளை பார்க்கும்போது, நமக்கு லா நினோ உருவாக வாய்ப்புள்ளது.

    இந்தியப் பெருங்கடல் இருமுனை (IOD) பொறுத்தவரையில் எதிர்மறை ஐஓடி நிகழ்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வடகிழக்கு பருவமழை காலங்களில் கடந்த 6 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் லா நினா ஆண்டுகளாக அமைந்திருக்கிறது. 2023ம் ஆண்டில் மட்டும் எல் லினோ ஆண்டுகளாகவும் அமைந்துள்ளது.

    இந்த லா நினா மற்றும் அதன் காரணிகளை பார்க்குமபோது, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது தமிழகத்தில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வடகிழக்கு பருவமழை சற்று தாமதமடைந்தாலும், பருவமழை வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தீவிர மழை பொழிவு இருக்கும். தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலம், புயல் போன்ற அமைப்புகள் உருவாகி மழை பொழிவு இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    லா நினா:

    பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள தண்ணீர் சில பகுதிகளில் சூடாகவும், சில பகுதிகளில் குளிர்ச்சியாகவும் இருக்கும். இது உலகெங்கிலும் உள்ள வானிலையில் ஒரு சமநிலையை உருவாக்குகிறது.

    இந்த சமநிலையில் ஏற்படும் மாற்றங்களே எல் நினோ மற்றும் லா நினா வானிலை நிகழ்வுகள் ஆகும்.

    எல் நினோ:

    எல் நினோ பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள கடலின் வெப்பநிலையை வழக்கத்தை விட சூடாக்குகிறது, குறைந்தது 0.5 டிகிரி அதிகரித்தால் எல் நினோ உருவாகியதாக அறிவிக்கப்படும்.

    • இயல்பான அளவான 418.9 மி.மீ.யை விட அதிகமாக 447.8 மி.மீ. மழை பதிவாகி இருக்கிறது.
    • அருணாசல பிரதேசம், அசாம், பீகார், டெல்லி, மகாராஷ்டிரா, லட்சத்தீவுகள் போன்றவை 20 முதல் 59 சதவீதம் வரை குறைவான மழைப்பொழிவை பெற்று இருக்கின்றன.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த பருவமழை இதுவரை இயல்பை விட 7 சதவீதம் அதிகம் பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    அந்தவகையில் இயல்பான அளவான 418.9 மி.மீ.யை விட அதிகமாக 447.8 மி.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

    அதேநேரம் இது பல்வேறு பிராந்தியங்களுக்கு இடையே மிகப்பெரிய மாறுபாடுகளை கொண்டுள்ளது.

    அந்தவகையில் ராஜஸ்தான், லடாக், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் சிக்கிம் மாநிலங்கள் மிக அதிக மழை பெற்றுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் 384.7 மி.மீ. (இயல்பான அளவு 200.4 மி.மீ.) மழை பெய்திருக்கிறது. இதைப்போல லடாக் 30 மி.மீ. மழை (10.7 மி.மீ.) பெற்றிருக்கிறது.

    மேலும் மத்திய பிரதேசம், குஜராத், தாத்ரா-நாகர் ஹவேலி, டையூ-டாமன், ஜார்கண்ட் மற்றும் அசாம் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 20 முதல் 59 சதவீதம் வரை அதிக மழை பெற்றுள்ளன.

    உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இயல்பான மழை அளவை 19 சதவீத சராசரியில் பெற்றிருக்கின்றன.

    அதேநேரம் அருணாசல பிரதேசம், அசாம், பீகார், டெல்லி, மகாராஷ்டிரா, லட்சத்தீவுகள் போன்றவை 20 முதல் 59 சதவீதம் வரை குறைவான மழைப்பொழிவை பெற்று இருக்கின்றன.

    இந்த தகவல்களை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது.

    • கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    கேரளாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் பல பகுதிகள் இருளில் மூழ்கின.

    இந்நிலையில் கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இடுக்கி மற்றும் எர்ணாகும் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்டயம், காஞ்சிரப்பள்ளி மற்றும் மீனாச்சில் ஆகிய 3 தாலுக்காக்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோட்டம் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.

    பத்தனம்திட்டாவில் மணிமாலா மற்றும் பம்பா, காசர்கோட்டில் மொக்ரல் மற்றும் கொல்லத்தில் பள்ளிக்கல் உள்ளிட்ட பல ஆறுகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடற்கரைகளுக்கு அப்பால் ஜூலை 27-ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • சென்னை எழும்பூர், புதுப்பேட்டை, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.
    • உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒருமணி நேரத்திற்கும் மேலாக மழை செய்து வருகிறது.

    சென்னை சாந்தோம், பட்டினப்பாக்கம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்தது.

    ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், கிண்டி, பரங்கிமலை, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    சென்னை எழும்பூர், புதுப்பேட்டை, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒருமணி நேரத்திற்கும் மேலாக மழை செய்து வருகிறது.

    உதகை - கூடலூர் சாலையில் உள்ள சோலூர் சந்திப்பு பகுதியில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலும், சென்னை, திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.
    • நீலகிரி மற்றும் கோவையில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வடகிழக்கு ஜார்கண்ட் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது.

    இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வலுவிழந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழக்க வாய்ப்புள்ளது.

    இதன் தாக்கமாக, தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது.

    தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் ஜூன் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

    மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி மற்றும் கோவையில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், பிற்பகலில் திடீரென வானம் இருண்டது.
    • சென்னையில் அடுத்த 1 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், பிற்பகலில் திடீரென வானம் இருண்டது. பின்னர், மிதமான மழை பெய்யத் தொடங்கியது.

    சென்னையில் அடுத்த 1 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் 1 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை கொட்டும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்யில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென மழை பெய்தது.
    • 21 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    சென்னையில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென மழை பெய்தது. சென்னையில் கோயம்பேடு, மதுரவாயல், நெற்குன்றம், வளசரவாக்கம், வானகரம், போரூர், ஐயப்பந்தாங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

    சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, நசரத்பேட்டை, திருவேற்காடு, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.

    இதைதொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று இரவு 9 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இரவு 9 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
    • ஆவடியில் இருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென மழை பெய்து வருகிறது.

    சென்னையில் கோயம்பேடு, மதுரவாயல், நெற்குன்றம், வளசரவாக்கம், வானகரம், போரூர், ஐயப்பந்தாங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    மேலும், புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, நசரத்பேட்டை, திருவேற்காடு, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    காஞ்சிப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், சேலம், தருமபுரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களிலும் மாலை 6 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் வெயிலுக்காக சாலையில் போக்குவரத்து காவல்துறையால் அமைக்கப்பட்ட பந்தல் மலைக்காற்றில் சரிந்தது. இதனால், ஆவடியில் இருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    • ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தென்மேற்கு பருவமழை இன்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளது.

    மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை உருவாகக்கூடும்.

    தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் நாளை மறுதினம் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான /மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சின்னக்கல்லாரில் 21 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.
    • கன மழை காரணமாக தென்காசி மாவட்டத்துக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கோவை:

    தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் கேரளாவில் தொடங்கும். அதன் எதிரொலியாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டி உள்ள கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்யும்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே அதாவது நேற்றுமுன்தினமே கேரளாவில் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தமிழகத்திலும் பல மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

    கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு 2 நாட்கள் அதிகனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. நேற்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் அதிகபட்சமாக 35 செ.மீ. மழை பெய்தது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சின்னக்கல்லாரில் 21 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.

    கனமழையால் கோவை மாவட்டத்தில் உள்ள நொய்யல் ஆறு, வால்பாறை கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, பவானி ஆறு, ஆழியாறு போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை மற்றும் சிறுவாணி அணை, ஆழியார் அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    பில்லூர் அணையில் நேற்று திடீரென நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் அணையில் இருந்து இரவில் 18 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. அங்கிருந்து வெளியேறிய தண்ணீர் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் குளிப்பதற்கோ, துணி வைப்பதற்கோ யாரும் ஆற்று பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்தில் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு 50-க்கும் மேற்பட்ட மரங்கள் நடுரோட்டில் முறிந்து விழுந்துள்ளன. இதன்காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மரங்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் உடனுக்குடன் அகற்றி வருகிறார்கள். மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்துள்ளதால் பல கிராமங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. வீடுகளும் சேதம் அடைந்துள்ளன.

    ஊட்டிக்கு சுற்றுலா வந்த 15 வயது சிறுவன் மரம் முறிந்து விழுந்ததில் பலியானதை தொடர்ந்து முன் எச்சரிக்கையாக ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு உள்ளன. சுற்றுலா பயணிகளும் தாங்களாகவே நீலகிரியில் இருந்து வெளியேறி வருகிறார்கள். சுற்றுலா பயணிகள் வருகையும் வெகுவாக குறைந்து விட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலைப்பயிர்த் தோட்டங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

    இன்று 2-வது நாளாக கோவை, நீலகிரி மாவட்டத்துக்கு சிவப்பு நிற அதிகனமழை எச்சரிக்கை நீடிக்கிறது. இதனால் மழை பொழிவு மேலும் அதிகரித்து சேதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    கன மழை காரணமாக தென்காசி மாவட்டத்துக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்திலும் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டி வருகிறது.

    குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் 2-வது நாளாக அங்கு சுற்றுலாபயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா ஹேமச்சந்திரன் கூறியிருப்பதாவது:-

    ஒரு வார காலம் முன்னதாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் நீலகிரி, கோவை மாவட்டங்களில் தீவிரமடைந்து காணப்படுகிறது.

    இன்று காலை 8.30 மணி நிலவரப்படி நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 35 செ.மீ, மேல் பவானி 30 செ.மீ மற்றும் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியில் 21 செ.மீ அதி கனமழை பதிவாகியுள்ளது.

    ரத்னகிரி அருகே கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தெலுங்கானா பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடிக்கிறது. வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் நீலகிரி, கோவை மாவட்டங்களில் மே 31-ந்தேதி வரை பருவமழை தீவிரமடைந்து மிக கனமழை முதல் அதி கனமழை வரை கொடுக்க கூடும்.

    இருவேறு காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென்மேற்கு பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில் மகராஷ்டிர மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மும்பை மாநகர் உள்ளிட்ட இடங்களில் தொடங்க கூடும். அவ்வாறு தொடங்கும் நிலையில் அது கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இயல்பிற்கு முந்தைய தொடக்கமாக அமையும்.

    அதேபோல கடந்த 53 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக வேகமாக தென்மேற்கு பருவமழை முன்னேறி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கர்நாடகத்தில் 2 வாரத்திற்கு முன்னதாக தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது.
    • மலைநாடு பகுதியில் உள்ள சிக்கமகளூரு, குடகு, சிவமொக்கா ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தம் தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக கர்நாடகத்தின் கடலோர பகுதிகளிலும், மலைநாடு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகத்தில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. அதாவது, வழக்கமாக கேரளாவில் ஜூன் 1-ந்தேதியும், கர்நாடகத்தில் அதற்கு அடுத்த வாரமும் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.

    ஆனால் கேரளாவில் ஒரு வாரத்திற்கு முன்னதாகவும், கர்நாடகத்தில் 2 வாரத்திற்கு முன்னதாகவும் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, மலைநாடு மாவட்டங்களான சிக்கமகளூரு, சிவமொக்கா, ஹாசன், குடகு உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது பலத்த மழை கொட்டி வருகிறது.

    இந்த நிலையில், கர்நாடக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதையடுத்து இன்று முதல் 6 நாட்களுக்கு கனமழை பெய்யும். குறிப்பாக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா, பெலகாவி, தார்வார் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். பாகல்கோட்டை, விஜயாப்புரா, கதக் ஆகிய மாவட்டங்களில் கனமழையும், பீதர், ஹாவேரி, கலபுரகி, கொப்பல், ராய்ச்சூர், யாதகிரி ஆகிய மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

    மலைநாடு பகுதியில் உள்ள சிக்கமகளூரு, குடகு, சிவமொக்கா ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சாம்ராஜ்நகர், ஹாசன், மண்டியா, மைசூருவில் கனமழை பெய்யக்கூடும். பெங்களூரு, சிக்பள்ளாப்பூர், தாவணகெரே, கோலார், ராமநகர், துமகூரு, விஜயநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். உத்தர கன்னடா, சிவமொக்கா, உடுப்பி, சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, குடகு ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) அதி கனமழை பெய்யக்கூடும். அதனால் இந்த மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' (சிவப்பு எச்சரிக்கை) விடுக்கப்படுகிறது.

    தார்வார், பெலகாவி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், விஜயாப்புரா, பாகல்கோட்டை, கதக், ஹாசன், மண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

    ×