என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவல் நிலையம்"

    • நீதிபதி கூறிய கருத்தை விமர்சித்து அவதூறு பதிவு வெளியிட்டதாக நடவடிக்கை.
    • சாணார்பட்டி போலீசார் நிர்மல் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழக வெற்றிக் கழகம் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்உஎம்.நிர்மல் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கில் நீதிபதி கூறிய கருத்தை விமர்சித்து அவதூறு பதிவு வெளியிட்டுள்ளதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் சாணார்பட்டி போலீசார் நிர்மல் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், நிர்மல்குமார் கைதை கண்டித்து திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல்நிலையத்தை தவெகவினர் முற்றுகையிட்டு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தவெக மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் கைது செய்யப்பட்டு பல மணி நேரமாகியும் காவலத் நிலையத்தில் விசாரணை நடத்தி வருவதாக தவெகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நிர்மல்குமாரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என தவெகவினர் கோஷமிட்டனர். காவல்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட தவெகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • மூத்த போலீஸ் அதிகாரிகள் முன்பு அவர்கள் சரண் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மாவோயிஸ்டு தலைவர்கள் பழங்குடியினரின் உண்மையான எதிரிகள்.

    சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் 16 நக்சலைட்டுகள் சரண் அடைந்தனர். போலீஸ் நிலையத் தில் மூத்த போலீஸ் அதிகாரிகள் முன்பு அவர்கள் சரண் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பல்வேறு கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் அதில் இருந்து விலகி சரண் அடைந்ததாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

    விசாரணையின் போது மாவோயிஸ்டு தலைவர்கள் பழங்குடியினரின் உண்மையான எதிரிகள் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    • தற்கொலை செய்து கொண்ட நபர் குறித்த தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை.
    • தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை:

    கோவை பெரிய கடைவீதி காவல்நிலையத்தில் முதலாவது மாடியில் உள்ள க்ரைம் உதவி ஆய்வாளர் அறையில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தற்கொலை செய்து கொண்ட நபர் நேற்று இரவு 11 மணி அளவில் காவல் நிலையத்திற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

    தற்கொலை செய்து கொண்ட நபர் குறித்த தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை. மேலும் உயிரிழந்த நபர் எதற்காக காவல்நிலையத்திற்கு வந்தார் என்பது குறித்த தகவல்களும் வெளியாகவில்லை.

    இச்சம்பவம் குறித்து அறிந்து வந்த தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • காதலன் விக்னேசுக்கு போன் செய்து தான் வீட்டை விட்டு வெளியேறி தக்கலை வந்து விட்டதாக தெரிவித்தார்.
    • பெண்ணின் குடும்பத்தினர் காதல் திருமணத்தை ஏற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    தக்கலை:

    குமரி மாவட்டம் பத்மநாபபுரம் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 29), லேத் பட்டறை தொழிலாளி. இவருக்கும் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் நாகூர்பாளையம் பகுதியை சேர்ந்த ஜனனிஸ்ரீ (21) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் காதலாக மாற இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் ஜனனிஸ்ரீக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். அப்போது அவர் தனது காதலை தெரிவித்துள்ளார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 27-ந்தேதி வீட்டில் இருந்து வெளியேறிய ஜனனிஸ்ரீ, பஸ் மூலம் தக்கலை வந்துள்ளார்.

    பின்னர் தனது காதலன் விக்னேசுக்கு போன் செய்து தான் வீட்டை விட்டு வெளியேறி தக்கலை வந்து விட்டதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து விக்னேஷ் தக்கலை சென்று ஜனனிஸ்ரீயை சந்தித்தார். பின்னர் அவரை அழைத்துச் சென்று 28-ந் தேதி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து மறுநாள் காதல் ஜோடியினர், தக்கலை போலீஸ் நிலையம் வந்து சரண் அடைந்தனர்.

    அப்போது அவர்கள் ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள ஒரு இந்துக் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், அதனை பதிவு செய்ய இருப்பதாகவும், இதற்கு பெண் குடும்பத்தினர் எதிர்ப்பு இருப்பதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கூறினர். இதனை தொடர்ந்து இருவரது குடும்பத்திற்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் போலீஸ் நிலையம் வந்ததும் பேச்சுவார்த்தை நடந்தது.

    பெண்ணின் குடும்பத்தினர் காதல் திருமணத்தை ஏற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜனனிஸ்ரீயை போலீசார் காதல் கணவர் விக்னேசுடன் அனுப்பி வைத்தனர். 

    • ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கோரிய மனு எண்ணிடப்பட்டு வந்தால் திங்கட்கிழமை விசாரிக்கப்படும்.
    • ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைக்குமாறு நீதிபதி அறிவுறுத்தினார்.

    காவலாளி அஜித்குமார் கொலை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி த.வெ.க. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், த.வெ.க. தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    மேலும், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க என்ன அவசரம் எனவும் நீதிபதி வேல்முருகன் கேள்வி எழுப்பினார். ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கோரிய மனு எண்ணிடப்பட்டு வந்தால் திங்கட்கிழமை விசாரிக்கப்படும். மேலும் ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைக்குமாறு நீதிபதி அறிவுறுத்தினார். 

    • அஜித்குமார் வீட்டிற்கு த.வெ.க. தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
    • விரைவில் இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 28) நகை திருட்டு புகாரில் தனிப்படை போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், அஜித்குமார் குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் ஆறுதலும் தெரிவித்தும் உள்ளனர்.

    இதனிடையே, நேற்று முன்தினம் அஜித்குமார் வீட்டிற்கு த.வெ.க. தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அஜித்குமாரின் தாயாரிடம் த.வெ.க. துணையாக நிற்கும் என்று தெரிவித்தார். இதையடுத்து, நாளை மறுநாள் சென்னை சிவானந்தா சாலையில் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு, கடந்த 4 ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி கிடைக்காத நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டம் நடத்த தமிழக வெற்றிக்கழகத்தினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் காவல்துறை அனுமதி மறுத்து வேறு தேதியில் போராட்டம் நடத்த கூறியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • போலீஸ் நிலையத்துக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் அவர்கள் தகவல் சொன்னதாக கூறப்படுகிறது.
    • சுமார் 2 மணி நேரம் கடந்தும் போலீசார் யாரும் அங்கு செல்லாததால் தகவல் சொன்னவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    கொல்லப்பட்ட மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது தற்போது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. நிகிதா மீது ஏற்கனவே பல்வேறு மோசடி புகார்கள் இருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவரால் பாதிக்கப்பட்ட பலர் போலீசில் புகார் அளித்த வண்ணம் உள்ளனர்.

    இந்தநிலையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து நிகிதா கோவையில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு நிகிதா, அவரது தாயார் ஒரு காரில் டிரைவருடன் வந்துள்ளனர். பின்னர் ஓட்டலில் அமர்ந்து அவர்கள் சாப்பிட்டுள்ளனர்.

    இதைப்பார்த்து சிலர், அவர்களிடம் விசாரித்துள்ளனர். பின்னர் அவர்களை சிறைபிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீஸ்நிலையத்துக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் அவர்கள் தகவல் சொன்னதாக கூறப்படுகிறது. சுமார் 2 மணி நேரம் கடந்தும் போலீசார் யாரும் அங்கு செல்லாததால் தகவல் சொன்னவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து நிகிதாவை விடுவித்துவிட்டு அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

    நிகிதா, தனது தாயாரை அழைத்துக்கொண்டு காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார். அந்த கார் கோவையை நோக்கிச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதனால் நிகிதா கோவையில் தஞ்சம் அடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    நிகிதா, ஓட்டலில் அமர்ந்திருக்கும் காட்சி மற்றும் அவரை சிறைபிடித்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உரையாற்றிய ஆடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 

    • விசாரணை என்ற பெயரில் பத்திரகாளியம்மன் கோவில் கோ சாலைக்குள் வைத்து நகை கேட்டு பிரம்பால் தாக்குகின்றனர்.
    • வீடியோ காட்சிகளை வெளியிட்ட நபருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றிருந்த போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணமே உள்ளது.

    இந்த நிலையில், விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித்குமாரை சிறப்பு புலனாய்வு குழுவினர் அடித்து துன்புறுத்தும் கொடூரக் காட்சிகள் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    விசாரணை என்ற பெயரில் பத்திரகாளியம்மன் கோவில் கோ சாலைக்குள் வைத்து நகை கேட்டு பிரம்பால் தாக்குகின்றனர்.

    போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்து வலிப்பு ஏற்பட்டு அஜித்குமார் உயிரிழந்ததாக FIR-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், அஜித்குமாரை போலீசார் பிரம்பால் தாக்கும் வீடியோ பார்ப்போரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

    இதனிடையே, வீடியோ காட்சிகளை வெளியிட்ட நபருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 



    • பிரேத பரிசோதனை அறிக்கையை நடுவண் நீதிமன்ற நீதிபதிக்கு ஏன் இன்னும் அளிக்கவில்லை?
    • யார் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்தது என டிஜிபி பதிலளிக்க வேண்டும்.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் போலீஸ் நிலையத்தில் வைத்து கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 5 போலீஸ்காரர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார். இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அஜித்குமார் மரண வழக்கு விசாரணையை உடனடியாக தொடங்கியுள்ளனர்.

    இதனிடையே, அஜித்குமார் மரண வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, அஜித்குமார் மரணம் தொடர்பாக நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். அதன் விவரம்:-

    * அஜித்தை எதற்காக வெளியே வைத்து விசாரணை செய்தீர்கள், ஏன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யவில்லை.

    * `ஏன் இந்த வழக்கில் காவல்துறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

    * ஒட்டுமொத்த காவல்துறையை நாங்கள் குறை சொல்லவில்லை. ஆனால் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * பிரேத பரிசோதனை அறிக்கையை அளிக்காதது ஏன்?

    * பிரேத பரிசோதனை அறிக்கையை நடுவண் நீதிமன்ற நீதிபதிக்கு ஏன் இன்னும் அளிக்கவில்லை?

    * யார் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்தது என டிஜிபி பதிலளிக்க வேண்டும்.

    * சிவகங்கை மாவட்ட எஸ்பியை ஏன் இடமாற்றம் செய்தீர்கள்?, சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இதனிடையே, அஜித்குமாரை, சிறப்பு புலனாய்வு குழுவினர் அடித்து விசாரிக்கும் வீடியோவை நீதிபதி முன்பு காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வீடியோவை எடுத்த நபர் இன்று பிற்பகல் 3 மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

    • குற்றம் புரிவோரை கண்டறிந்து, விசாரணை நடத்தி, சட்டத்திற்குட்பட்டு உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டியது காவல் துறையினரின் கடமை.
    • காவல் நிலையத்திற்கு உள்ளேயும், காவல் நிலையத்திற்கு வெளியேயும் பாதுகாப்பு இல்லை என்ற அவல நிலை தமிழ் நாட்டில் ஏற்பட்டு இருக்கிறது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குற்றம் புரிவோரை கண்டறிந்து, விசாரணை நடத்தி, சட்டத்திற்குட்பட்டு உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டியது காவல் துறையினரின் கடமை. அதே சமயத்தில் விசாரணை என்ற போர்வையில் உயிரிழக்கும் அளவுக்கு கொடூரத் தாக்குதல் நடத்துவது என்பது சட்டத்திற்கு புறம்பான செயல். இது கடும் கண்டனத்திற்கு உரியது. காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது இனி மரணங்கள் ஏற்படாது என்று 2022-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உறுதி அளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    ஆனால், அதற்குப் பிறகு கிட்டத்தட்ட 25 மரணங்கள் ஏற்பட்டுவிட்ட நிலையில், தற்போது அஜித் குமார் உயிரிழந்து இருக்கிறார். இதுபோன்ற தொடர் மரணங்களைப் பார்க்கும்போது காவல் துறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. காவல் நிலையத்திற்கு உள்ளேயும், காவல் நிலையத்திற்கு வெளியேயும் பாதுகாப்பு இல்லை என்ற அவல நிலை தமிழ் நாட்டில் ஏற்பட்டு இருக்கிறது.

    எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு உயிரிழந்த அஜித் குமாரின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வு நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஸ்டாலின் ஆட்சியில் நடந்த 25 காவல் மரணங்களும் அப்பட்டமான மனித உரிமை மீறல்.
    • பொம்மை முதல்வரின் தறிகெட்ட ஆட்சியில் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர் தமிழ்நாட்டு மக்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த செய்திகளில், உச்சந்தலை முதல் கால்கள் வரை 18 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

    மேலும், கழுத்துப் பகுதியில் கொடுக்கப்பட்ட பெரும் அழுத்தம் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

    இது முழுக்க முழுக்க ஸ்டாலின் அரசின் காவல்துறை அராஜகத்தால் நடந்த கொலை!

    ஸ்டாலின் ஆட்சியில் நடந்த 25 காவல் மரணங்களும் அப்பட்டமான மனித உரிமை மீறல். இதனை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முன்வந்து விசாரிக்க வேண்டும்.

    இந்த நிலையில், அஜித்குமார் உயிரிழந்ததற்கு காரணம் "வலிப்பு" என FIR பதிவு செய்துள்ளது ஸ்டாலின் அரசின் காவல்துறை.

    "Deja Vu" எல்லாம் இல்லை- விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது மு.க.ஸ்டாலின் எந்த பச்சைப்பொய்யை சட்டப்பேரவையில் கூச்சமின்றி சொன்னாரோ, அதே பொய்யை அப்படியே அஜித்குமாருக்கு மீண்டும் சொல்கிறது ஸ்டாலினின் காவல்துறை.

    நீங்கள் இப்படியெல்லாம் தில்லுமுல்லு செய்வீர்கள் எனத் தெரிந்து தான், எனது அறிவுறுத்தலின்படி, மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் #JusticeForAjithkumar பதாகைகளை ஏந்தி, நீதிக்கான குரலாக ஒலித்தனர்.

    நாடு முழுக்க #JusticeForAjithkumar #NationWithAjith என பெரும் அதிர்வலைகளை இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதில் சொல்ல வேண்டிய முதல்வர் முக.ஸ்டாலின் எங்கே ஒளிந்துக் கொண்டிருக்கிறார்?

    "ஆய்வுக் கூட்டம் நடத்துகிறோம்; CBCID-க்கு மாற்றுகிறோம்" என்ற உங்கள் நாடகங்களை சில ஊடகங்கள் நம்பலாம். மக்களும் சரி, நாங்களும் சரி- துளி கூட நம்பவில்லை!

    பொம்மை முதல்வரின் தறிகெட்ட ஆட்சியில் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர் தமிழ்நாட்டு மக்கள்.

    போலீஸின் போலி FIR மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே இந்த வழக்கை CBI-க்கு மாற்ற வேண்டும்.

    இக்கொலைக்கு காவல்துறைக்கு பொறுப்பான பொம்மை முதல்வர் முழு பொறுப்பேற்று, பதில் அளிக்க வேண்டும்!

    வீடியோ ஷூட் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் ஸ்டாலின் அவர்களே? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்! என்று கூறியுள்ளார். 



    • போலீஸ்காரர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள் சில மோசமானவர்களும் இருக்கிறார்கள்.
    • போலீசாரை நான் கேட்டுக்கொள்ளும் ஒரே விஷயம் கொஞ்சம் மனுஷங்களா நடந்துக்கோங்க... மிருகமா இருக்காதீங்க...

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் தாடி பாலாஜி கண்டன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

    2 நாட்களாக மனசு ரொம்ப நெருடலா இருக்கு... ஒரு சம்பவத்தை பற்றி...

    கோவில் பாதுகாவலர் அஜித் குமார் எந்த தப்பும் செய்யவில்லை. தப்பு பண்ணியிருந்தால் நீங்கள் தண்டனை கொடுப்பது சரி.

    கோவிலுக்கு வருவதே நல்லாயிருக்கணும் என்று வேண்டிக்கொள்ள வருகிறார்கள். இவர்கள் காரில் வந்துவிட்டு பார்க் பண்ண தெரியலைன்னு அந்த தம்பி சொல்லுறாரு. அப்படி இருந்தும் நீங்க போய் சாமி கும்பிட்டுவிட்டு வாங்க.. நான் யாரையாவது வைத்து பார்க் செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

    கோவில் சென்று வந்தவர்கள் வண்டியில் இருந்த நகையை காணவில்லை என்று சொல்கிறார்கள்.

    உடனே ஏன் இவர் மேல் புகார் கொடுக்கிறார்கள்.

    நான் என்ன கேட்கிறேன் இவர் தப்பு செய்தாரா இல்லையா என்று தெரியாமல் ஒருத்தரை அடிப்பதற்கு காக்கி சட்டைக்கு என்ன ரைட்ஸ் இருக்கு...

    ஏற்கனவே சாத்தான்குளத்தில் தந்தை, மகனுக்கு நடந்தது பற்றி பதிவு செய்துள்ளேன்.

    போலீஸ்காரர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள் சில மோசமானவர்களும் இருக்கிறார்கள்.

    ஏன்ப்பா... கஞ்சி போட்டு, சட்டையை அயர்ன் பண்ணா விரைப்பா தான் இருப்பியோ...

    அடிக்கும்போது அந்த வாலிபர் கத்தி உள்ளார். வலி இருக்காதா... சக மனுஷனை போட்டு அந்த அடி அடிக்குறீங்களே... நீங்கள் எல்லாம் மனுஷங்களா... காக்கி சட்டை போட்ட எமனுங்களா... அறிவு வேண்டாம்.

    அதாவது மீதி இருக்கும் நாட்களிலாவது அரசாங்கம் இதுபோன்ற விஷயங்களை strict பண்ணி, இந்த மாதிரி விஷயத்தை encourage பண்ணாம இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

    அந்த வாலிபருக்கு நடந்த சம்பவத்தால் மனசு ரொம்ப சங்கடமாக இருக்கிறது.

    போலீசாரை நான் கேட்டுக்கொள்ளும் ஒரே விஷயம் கொஞ்சம் மனுஷங்களா நடந்துக்கோங்க... மிருகமா இருக்காதீங்க... என்று தெரிவித்துள்ளார்.

    ×