என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தக்கலை போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
    X

    தக்கலை போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

    • காதலன் விக்னேசுக்கு போன் செய்து தான் வீட்டை விட்டு வெளியேறி தக்கலை வந்து விட்டதாக தெரிவித்தார்.
    • பெண்ணின் குடும்பத்தினர் காதல் திருமணத்தை ஏற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    தக்கலை:

    குமரி மாவட்டம் பத்மநாபபுரம் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 29), லேத் பட்டறை தொழிலாளி. இவருக்கும் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் நாகூர்பாளையம் பகுதியை சேர்ந்த ஜனனிஸ்ரீ (21) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் காதலாக மாற இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் ஜனனிஸ்ரீக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். அப்போது அவர் தனது காதலை தெரிவித்துள்ளார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 27-ந்தேதி வீட்டில் இருந்து வெளியேறிய ஜனனிஸ்ரீ, பஸ் மூலம் தக்கலை வந்துள்ளார்.

    பின்னர் தனது காதலன் விக்னேசுக்கு போன் செய்து தான் வீட்டை விட்டு வெளியேறி தக்கலை வந்து விட்டதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து விக்னேஷ் தக்கலை சென்று ஜனனிஸ்ரீயை சந்தித்தார். பின்னர் அவரை அழைத்துச் சென்று 28-ந் தேதி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து மறுநாள் காதல் ஜோடியினர், தக்கலை போலீஸ் நிலையம் வந்து சரண் அடைந்தனர்.

    அப்போது அவர்கள் ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள ஒரு இந்துக் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், அதனை பதிவு செய்ய இருப்பதாகவும், இதற்கு பெண் குடும்பத்தினர் எதிர்ப்பு இருப்பதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கூறினர். இதனை தொடர்ந்து இருவரது குடும்பத்திற்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் போலீஸ் நிலையம் வந்ததும் பேச்சுவார்த்தை நடந்தது.

    பெண்ணின் குடும்பத்தினர் காதல் திருமணத்தை ஏற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜனனிஸ்ரீயை போலீசார் காதல் கணவர் விக்னேசுடன் அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×