என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரேத பரிசோதனை அறிக்கை"

    • பிரேத பரிசோதனை அறையில் கைகளுக்கு க்ளவுஸ் போட்டுக்கொள்வோமே தவிர, முகத்தில் மாஸ்க் அணியமாட்டோம்.
    • நீரில் மூழ்கி உயிரிழந்து அழுகிய உடல்கள் வரும்போது, அதனை பரிசோதிப்பது சிரமமாக இருக்கும்.

    விபத்து, இரத்தம், கொலை, தற்கொலை... இதுபோன்ற சம்பவங்கள் பெண்கள், ஆண்கள் என்ற வித்தியாசமின்றி அனைவரின் மனநிலையையுமே சற்று பாதிக்கும். அதிலும் சில பெண்களுக்கு சொல்லவே வேண்டாம்... இதுபோன்ற சம்பவங்களை கடந்துவர மிகவும் சிரமப்படுவார்கள். ஆனால் இதையெல்லாம் ஆராய்வதையே தொழிலாக கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அதுபோன்ற துறைகளில் பெண்களின் எண்ணிக்கை கொஞ்சம் குறைவாகவே இருக்கும் சூழலில், தடயவியல் பிரேத பரிசோதனை அறுவை சிகிச்சை நிபுணராக தைரியத்துடன் பணியாற்றிவரும் இளம்பெண் மருத்துவரான நிவ்யாழினி, அண்மையில் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறார். அவர் சில தினங்களுக்கு முன் பேட்டி ஒன்று அளித்துள்ளார். 

    அதில் பிரேத பரிசோதனை செய்யும் போது தாங்கள் எதிர்கொள்ளும் தயக்கங்கள், அருவருப்பு, முக சுளிப்புகள், பிரேத பரிசோதனையின் போது எதிர்கொள்ளும் சவால்கள், கொலையுண்டவருக்கு எதிர்தரப்பிலிருந்து வரும் கொலைமிரட்டல்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பகிர்ந்துள்ளார் மருத்துவர் நிவ்யாழினி. தனக்கு இதுவரை கொலைமிரட்டல்கள் எதுவும் வந்ததில்லை எனவும், ஆனால் தன்னுடன் பணியாற்றிய சிலருக்கு பிரேத பரிசோதனை அறிக்கை தகவலை மாற்ற சொல்லி கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கொலைக்கும், உயிரை மாய்த்துக்கொள்வதற்கும் உள்ள வித்தியாசங்களை எவ்வாறு கண்டுபிடிப்பார்கள், சந்தேக மரண வழக்குகளில் அவை கொலை என எப்படி உறுதிப்படுத்துகிறார்கள் உள்ளிட்ட பல தகவல்களை பகிர்ந்தார். மேலும் 8 மாத குழந்தை ஒன்றின் கொலை பற்றியும் பேசியிருந்தார். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு முன், உடல்களை எப்படி கையாள்வது குறித்த தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்.


    நிகழ்ச்சி ஒன்றில் நிவ்யாழினி

    பிரேத பரிசோதனை என்றால்? என்ன செய்வீர்கள்?

    தற்கொலை செய்து உயிரிழந்த உடல் ஒன்று வருகிறது என்றால், முதலில் ஃபோட்டோ எடுப்போம். அனைத்து பக்கங்களில் இருந்தும் எடுப்போம். முதலில் ஆடையுடனும், பின்னர் ஆடைகளை நீக்கிவிட்டும் அந்த புகைப்படங்களை எடுப்போம். பின்னர் கழுத்தில் மார்க் இருக்கிறது என்றால் அதனை ஆராய்வோம். உடல் உறுப்புகள் அனைத்தையும் வெளியே எடுத்துவிட்டு ஆராய்வோம். எப்படி என்றால், கழுத்திலிருந்து தொப்புளுக்கு முன்புவரை கத்தியால் கிழித்து, உறுப்புகளை ஒவ்வொன்றாக வெளியே எடுப்போம். பின்னர் அந்த உறுப்புகளை கழுவி, அதனை வெட்டி ஆராய்ச்சி செய்வோம். இதயம், நுரையீரல், கிட்னி என அனைத்து உறுப்புகளையும் ஆராய்வோம். பின்னர் அந்த உறுப்புகள் அனைத்தையும் ஒரு கவரில் போட்டு, உடலுக்குள் வைத்து தைத்து, உடலை முழுமையாக கொடுத்துவிடுவோம். உறுப்புகளை ஆராய்ச்சி செய்ததில் கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்த நபரின் இறப்பு இயற்கையானதா? கொலையா? தற்கொலையா? என கண்டுபிடிப்போம். 

    முதல்முதலில் நீங்கள் பார்த்த கேஸ் எது? அந்த அனுபவம் எப்படி இருந்தது?

    நான் முதலில் பார்த்த கேஸ், ஹேங்கிங்தான். முதல் அனுபவம் சற்று சிரமமாகத்தான் இருந்தது. அதிலும், ஸ்மெல்தான் எனக்கு கஷ்டமாக இருந்தது. வயிற்று பகுதியை ஆராயும்போது, அவர் இறுதியாக என்ன சாப்பிட்டார் என்று தெரிந்துகொள்ள, அதனை முகர்ந்து பார்க்க வேண்டும். முதலில் கஷ்டமாக இருந்தாலும், பிறகு பழகிவிட்டது. அது நான் விரும்பி ஏற்றுக்கொண்ட தொழிலல்லவா... தைரியமாக அனைத்தையும் பழகிக்கொண்டேன். ஒரு விஷயத்தை நான் இங்கு உங்களிடம் சொல்கிறேன், பிரேத பரிசோதனை அறையில் கைகளுக்கு நாங்கள் க்ளவுஸ் போட்டுக்கொள்வோமே தவிர, முகத்தில் மாஸ்க் அணியமாட்டோம். அதனால், நீரில் மூழ்கி உயிரிழந்து அழுகிய உடல்கள் வரும்போது, அதனை பரிசோதிப்பது சிரமமாக இருக்கும். 

    எப்படி இவ்வளவு தைரியம்?

    நான் ஏற்கனவே சொன்னதைப்போல ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும், இப்போது பழகிவிட்டது. கொலையானவர்களின் உறவினர்கள் அழும்போது அதனை பார்க்கும்போது கவலையாக இருக்கும். முதலில் எல்லாம், யுவனின் ஒரு பாடலை கேட்டுவிட்டுதான் நான் உடல்களை பரிசோனை செய்ய அறைக்குள் செல்வேன். இப்போது நிறைய கேஸ்களை பார்த்துவிட்டேன்.

    இந்த துறைக்கு செல்ல குடும்பத்தினர் எப்படி ஒப்புக்கொண்டார்கள்?

    பொதுவாக எல்லாவற்றுக்குமே எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். நாம்தான் அதனை சரியாக செய்து நம்மை நிரூபிக்க வேண்டும்.  இந்த துறையில் எனக்குத் தெரிந்து பெண்கள் மிகவும் திறமையாக செயலாற்றுகிறார்கள். பெண்களால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை. 

    • பல சிக்கல்கள் நிறைந்த நடைமுறையை எளிதாக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது.
    • பாதுகாப்பு கருதி ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் அனுமதி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை.

    சென்னை:

    தமிழ்நாட்டில், தற்கொலை, சாலை விபத்து, சந்தேக மரணங்களில் உயிரிழப்பவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் போலீசார் தங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேலும், ஆஸ்பத்திரியில் இருந்து கோர்ட்டுக்கும் பிரேத பரிசோதனை அறிக்கை மூடிய நிலையில் 'சீல்' வைத்து அனுப்பப்படுகிறது. போலீசார் நேராக வந்து அறிக்கையை பெற்றுக்கொள்வார்கள். இந்த பிரேத பரிசோதனை அறிக்கையை போலீசாருக்கும், கோர்ட்டுக்கும் அனுப்புவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளது.

    அறிக்கையில், பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் தான் கையொப்பமிட வேண்டும். ஒருவேளை அந்த டாக்டர் வேறு மாவட்டத்திற்கோ அல்லது வேறு ஆஸ்பத்திரிக்கோ பணி மாறுதல் பெற்று சென்றுவிட்டாலும் அவர் அறிக்கையில் கையொப்பமிட்டு பார்சல் மூலம் போலீசாருக்கு அனுப்பும் சூழல் ஏற்படுகிறது. மேலும், ஆஸ்பத்திரி தரப்பில் இந்த பிரேத பரிசோதனை அறிக்கை 24 மணி நேரத்தில் தயார் செய்யப்படுகிறது. ஆனால், போலீசார் தங்கள் பணிகளுக்கு இடையில் இந்த அறிக்கையை சென்று வாங்கி வர காலதாமதம் ஆகிறது என கூறப்படுகிறது.

    இவ்வாறு பல சிக்கல்கள் நிறைந்த இந்த நடைமுறையை எளிதாக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது.

    அதன்படி, கோர்ட்டு உத்தரவின் பேரில், தமிழக அரசு ஒரு புதிய வசதியை கொண்டு வர உள்ளது. அதன்படி, ஆஸ்பத்திரி சார்பில் பிரேத பரிசோதனை அறிக்கைகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த அறிக்கைகளை கோர்ட்டு மற்றும் போலீசார் மட்டும் பதிவிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது. இதன்மூலம், தாமதம், ஊழல், சட்டவிரோத செயல்கள் என அனைத்தும் தவிர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக, மருத்துவ அதிகாரிகள் கூறியதாவது:-

    பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளில் சோதனை முறையில் நடைபெற்று வருகிறது. இதற்காக, ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். விரைவில் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் உடனுக்குடன் பதிவிறக்கம் செய்யும் வசதி பயன்பாட்டுக்கு வரும். இதன்மூலம் 24 மணி நேரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை வழங்கப்படும். இந்த அறிக்கையை கோர்ட்டு மற்றும் போலீசார் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும்.

    பிரேத பரிசோதனை அறிக்கை இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவைப்பட்டால் அவர்கள் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு நேரடியாக சென்று தங்கள் சான்றிதழ்களை காண்பித்து அறிக்கையை பெற்றுக்கொள்ளலாம்.

    பாதுகாப்பு கருதி ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் அனுமதி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை. இந்த புதிய வசதியின் மூலம் பிரேத பரிசோதனை அறிக்கை பெறுவதில் உள்ள தாமதம் முற்றிலும் தவிர்க்கப்படும். இந்த வசதி நடைமுறைக்கு வந்த பிறகு தற்போது போலீசார் நேரில் வந்து பிரேத பரிசோதனை அறிக்கை வாங்கும் நடைமுறை முற்றிலும் நிறுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • விசாரணை என்ற பெயரில் பத்திரகாளியம்மன் கோவில் கோ சாலைக்குள் வைத்து நகை கேட்டு பிரம்பால் தாக்குகின்றனர்.
    • வீடியோ காட்சிகளை வெளியிட்ட நபருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றிருந்த போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணமே உள்ளது.

    இந்த நிலையில், விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித்குமாரை சிறப்பு புலனாய்வு குழுவினர் அடித்து துன்புறுத்தும் கொடூரக் காட்சிகள் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    விசாரணை என்ற பெயரில் பத்திரகாளியம்மன் கோவில் கோ சாலைக்குள் வைத்து நகை கேட்டு பிரம்பால் தாக்குகின்றனர்.

    போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்து வலிப்பு ஏற்பட்டு அஜித்குமார் உயிரிழந்ததாக FIR-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், அஜித்குமாரை போலீசார் பிரம்பால் தாக்கும் வீடியோ பார்ப்போரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

    இதனிடையே, வீடியோ காட்சிகளை வெளியிட்ட நபருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 



    • பிரேத பரிசோதனை அறிக்கையை நடுவண் நீதிமன்ற நீதிபதிக்கு ஏன் இன்னும் அளிக்கவில்லை?
    • யார் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்தது என டிஜிபி பதிலளிக்க வேண்டும்.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் போலீஸ் நிலையத்தில் வைத்து கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 5 போலீஸ்காரர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார். இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அஜித்குமார் மரண வழக்கு விசாரணையை உடனடியாக தொடங்கியுள்ளனர்.

    இதனிடையே, அஜித்குமார் மரண வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, அஜித்குமார் மரணம் தொடர்பாக நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். அதன் விவரம்:-

    * அஜித்தை எதற்காக வெளியே வைத்து விசாரணை செய்தீர்கள், ஏன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யவில்லை.

    * `ஏன் இந்த வழக்கில் காவல்துறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

    * ஒட்டுமொத்த காவல்துறையை நாங்கள் குறை சொல்லவில்லை. ஆனால் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * பிரேத பரிசோதனை அறிக்கையை அளிக்காதது ஏன்?

    * பிரேத பரிசோதனை அறிக்கையை நடுவண் நீதிமன்ற நீதிபதிக்கு ஏன் இன்னும் அளிக்கவில்லை?

    * யார் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்தது என டிஜிபி பதிலளிக்க வேண்டும்.

    * சிவகங்கை மாவட்ட எஸ்பியை ஏன் இடமாற்றம் செய்தீர்கள்?, சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இதனிடையே, அஜித்குமாரை, சிறப்பு புலனாய்வு குழுவினர் அடித்து விசாரிக்கும் வீடியோவை நீதிபதி முன்பு காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வீடியோவை எடுத்த நபர் இன்று பிற்பகல் 3 மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

    • அஜித்குமார் மரண வழக்கு பிரேத பரிசோதனை அடிப்படையில் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
    • இவ்வழக்கு தொடர்பாக 6 காவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் 5 காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றிருந்த போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில், அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

    கைதான காவலர்களான பிரபு, ஆனந்த், கண்ணன், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அஜித்குமார் மரண வழக்கு பிரேத பரிசோதனை அடிப்படையில் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கு தொடர்பாக 6 காவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் 5 காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • வலது கை மூட்டுக்கு மேலேயும், வலது கை மணிக்கட்டுக்கு கீழேயும் சிராய்ப்பு காயங்கள் இருந்தன.
    • தவறி விழுந்தபோது வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றிருந்த போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணமே உள்ளது.

    இந்த நிலையில், அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அதில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த அஜித்குமாரின் உடலில் 18 காயங்கள் கண்டறியப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வலது கை மூட்டுக்கு மேலேயும், வலது கை மணிக்கட்டுக்கு கீழேயும் சிராய்ப்பு காயங்கள் இருந்தன. இடதுபக்க காதில் ரத்தம் வடிந்த நிலையிலும், வலது பக்க காதில் உள்பக்கம் ரத்தம் உறைந்த நிலையிலும் இருந்தது. இடதுபக்க தோள்பட்டை முதல் முழங்கை மூட்டு வரை கன்றிய காயங்கள் இருந்தன.

    இடதுபக்க இடுப்பு, வலதுபக்க பின் முதுகில் சிராய்ப்புகள் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதனிடையே, தவறி விழுந்தபோது வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    • தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து நேற்று சிறுமி லியா லட்சுமி உயிரிழந்தார்.
    • சிறுமி உயிரிழந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தனியார் பள்ளியில் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து நேற்று சிறுமி லியா லட்சுமி உயிரிழந்தார்.

    இதையடுத்து பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், சிறுமி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் குற்றம்சாட்டிய பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிறுமி உயிரிழந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தனியார் பள்ளியில் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு நிறைவடைந்த நிலையில் சிறுமி லியாவின் உடல் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்நிலையில், பிரேத பரிசோதனை முடிவில் மாணவி லியா லட்சுமியின் நுரையீரலில் தண்ணீர் புகுந்ததால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

    கழிவு நீர் தொட்டியில் விழுந்ததன் காரணமாகவே சிறுமி உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், இதுவரை பிரேத பரிசோதனை அறிக்கை காவல் துறைக்கு மருத்துவக் கல்லூரியில் இருந்து வழங்கப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • குற்றவாளிகளை கைது செய்ய கோரி மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியல்.
    • மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தாயார் பேட்டி.

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (16), கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் அதிகாலை மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இறந்த மாணவியின் உடல் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.

    மாணவி ஸ்ரீமதி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும், மாணவியின் உடைகளிலும் ரத்த கறைகள் இருந்தன என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியின் இதயம் உள்ளிட்ட 5 உறுப்புகள், தடயவியல் துறை ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் தமது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், கற்பழித்து கொலை செய்யப் பட்டு இருக்கலாம் அல்லது நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் மாணவியின் ஸ்ரீமதியின் தாயார் குற்றம் சாட்டி உள்ளார்.

    தனியார் பள்ளி மாணவி மர்மமான உயிரிழப்புக்கு நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விருத்தாசலம் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

    முன்னதாக மாணவியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கள்ளக்குறிச்சியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பேரணியாக செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போர் களம் போல்  காணப்பட்டது.

    ×