search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Postmortem"

    • தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி புதூர் ரெயில்வே கேட் அருகே உள்ள சுண்ணாம்புகார தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகள் சகுந்தலா (வயது 48). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இவர் நேற்று இரவு சக்தி நகரில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றார்.

    அப்போது புதூர் கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். ஜோலார்பேட்டையில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் சகுந்தலா மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஜோலா ர்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    சகுந்தலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செங்கம் அரசு மருத்துவமனையில் அவலம்
    • டாக்டர்களை நியமிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    புதுப்பாளையம்:

    செங்கம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மருத்துவ தேவைகளுக்காக செங்கம் தலைமை அரசு மருத்துவமனைக்கு செல்கின்றனர்.

    குறிப்பாக நாய்க்கடி, பாம்பு கடி, உள்பட அவசர சிகிச்சை பிரிவு வரை பொதுமக்கள் மருத்துவ மனைக்கு வருகின்றனர்.

    ஆனால் செங்கம் தலைமை அரசு மருத்துவ மனையில் பல்வேறு சமயங்களில் மருத்துவர் பற்றாக்குறையால் மருத்துவர்கள் வரும் வரை பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

    மேலும் செங்கம் சுற்று வட்ட பகுதிகளில் நடைபெறும் விபத்துகளில் உயிர் சேதம் ஏற்பட்டால் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யாமல் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு மருத்துவ மனையில் பரிந்துரை செய்யப்படுகிறது.

    குறிப்பாக கடந்த ஒரு வருடமாகவே செங்கம் பகுதிகளில் நடக்கும் விபத்துகளில் உயரிழந்த வர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்தும் பிரேத பரிசோதனை செய்யாமல் திருவண்ணா மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதனால் உயிரிழந்த வர்களின் உறவினர்கள் உட்பட காவல்துறையினர் என பலதரப்பட்ட மக்கள் இதனால் பாதிக்கப்ப டுகின்றனர்.

    செங்கத்திலிருந்து திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்து உடலை மீண்டும் கொண்டு வருவதற்கு 2 நாள் வரை காத்திருக்க வேண்டிய சூழலும் நிலவுகிறது.

    எனவே கூடுதல் மருத்துவர்களை நியமித்து செங்கம் அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து வசதிகளையும் உடனுக்குடன் செயல்படுத்திட வேண்டும் எனவும் பிரேத பரிசோதனைகளை செங்கம் அரசு தலைமை மருத்துவ மனையில் உடனுக்குடன் செய்து மக்களை சிரமத்திற்கு ஆளாக்காமல் இருக்க உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விரக்தி
    • ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டை சேர்ந்தவர் அசோகன் (வயது 59). இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் உள்ளனர்.

    கடந்த 3 நாட்களாக அசோகன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை குணமாகாததால் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்த நிலையில் நேற்று ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக குடும்பத்தி னரிடம் கூறிவிட்டு வெளியே சென்றார்.

    பின்னர் வாணிய ம்பாடி- விண்ண மங்கலம் இடையே உள்ள தண்டவா ளத்தில் தலை வைத்து படுத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் இவர் தலை மீது ஏறி இறங்கியது. இதில் அசோகன் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் அசோகன் உடலை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என அடையாளம் தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூரை அடுத்த செதுவாலையில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையை சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடக்கமுயன்றார்.

    அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த முதியவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலத்தை அடுத்த சந்தவாசல் சி.சி.ரோட்டில் தனி யார் திருமண மண்டபம் அருகே அந்த வழியாக நடந்து சென்ற 70 வயது மூதாட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து சந்தவாசல் போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டி உடலை பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இறந்த மூதாட்டியார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

    இது குறித்தும், விபத்துக்கு காரணமான வாகனம் மற்றும் தப்பிய டிரைவர் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நண்பரை பார்க்க சென்றபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் விக்னேஷ் (வயது 22). ஐ.டி.ஐ. முடித்துவிட்டு கட்டிட வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் பள்ளிப்பட்டு கிராமத்தில் இருந்து நண்பரை பார்க்க சின்ன வேப்பம்பட்டு வழியாக வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டி ருந்தார். திருப்பத்தூர்- வாணியம்பாடி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்த லாரி விக்னேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்: 

    திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அடுத்த மேலூரை சேர்ந்தவர் சாமந்தி (வயது 19). இவரது பெற்றோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டனர். சாமந்தி உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.

    சாமந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திடீரென்று விஷம் குடித்து சாமந்தி மயங்கிய நிலையில் கிடந்தார்.

    இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக சாமந்தி இறந்தார்.

    இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாமந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக புகார்
    • வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த குரும்பூரை சேர்ந்தவர் சம்பத் (வயது 48).டிரைவர். மனைவி தமிழ்ச்செல்வி, இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

    இந்த நிலையில் சம்பத் பைக்குக்கு பெட்ரோல் போடுவதற்காக காஞ்சிபுரம்- வந்தவாசி சாலையில் நெடுங்கல் கூட்ரோட்டில் பஸ் நிறுத்தம் அருகே நேற்று சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் ஓட்டி சென்ற பைக் மீது மோதியது.

    இதில் சம்பத் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் அனக்காவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சம்பத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் நெடுங்கல் கூட்ரோட்டில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • வாணாபுரம் அருகே ஓடையில் மூழ்கி தொழிலாளி பலியானார்.
    • இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி அலைந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா ஓடியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் மகன் அன்பரசன் (வயது 33). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியில் சென்றார். மாலை வெகுநேரமாகியும் அன்பரசன் வீட்டுக்கு திரும்பவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி அலைந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் அமைந்துள்ள அய்யனார் கோவில் அருகில் உள்ள ஓடையில் அன்பரசன் பிணமாக மிதந்த தகவல் உறவினர்களுக்கு தெரியவந்தது.

    இது குறித்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் கை, கால்களை கழுவுவதற்காக ஓடைக்கு அன்பரசன் சென்றதும், எதிர்பாராத விதமாக அவர் ஓடைக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து அன்பரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    • பாளைய ஏகாம்பரநல்லூர் கூட்ரோடில் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் அருகே கன்னிகாபுரம் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் கந்தசாமி (54).நேற்று 13ம்தேதி காலை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்று மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

    அப்போது திருவண்ணாமலை செல்லும் ரோட்டில் பாளைய ஏகாம்பர நல்லூர் கூட்ரோடில் சாலையோரம் இருந்த புளிய மரம் வேரோடு சாய்ந்து,கந்தசாமி சென்ற மோட்டார் சைக்கிள் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது சம்பந்தமாக தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கந்தசாமி பிணத்தை பிரேத பரிசோதனைக்கு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 4 மணி நேரம் போராடி மீட்டனர்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார்(வயது 19), கல்லூரி மாணவன். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரெட்டிமாங்குப்பம் பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றார். ஏரியில் குளிக்கும்போது அஜித்குமார் திடீரென மூச்சுத்திணறி தண்ணீரில் மூழ்கினார். உடனே, அவரது நண்பர்கள் தண்ணீரில் தேடிப் பார்த்தும் அஜித்குமார் கிடைக்கவில்லை.

    இதனையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக, விரைந்து வந்த ஆம்பூர் தீயணைப்புத் துறையினர் ஏரியில் மூழ்கிய அஜித் குமாரின் சடலத்தை சுமார் 4 மணி நேரம் போராடி மீட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மேல்பட்டி போலீசார் அஜித் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவி போலீசில் புகார்
    • வழக்கு பதிவு செய்து விசாரணை

    காட்பாடி:

    காட்பாடி அருகே உள்ள உண்ணாமலை சமுத்திரத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 44), கூலித் தொழிலாளி.

    இவர், 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே உள்ள விவசாய நிலம் வழியாக நடந்து சென்றார்.

    அப்போது, நிலைதடுமாறி அங்கிருந்த கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். இது குறித்து விருத்தம் பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் தண்டபாணி உடலை மீட்டனர். மேலும் பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை அடுக்கம்பாறை அரசு மருத்துவ மைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரது மனைவி சுமதி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×