என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
- கடன் தொல்லையால் விபரீதம்
- போலீசார் விசாரணை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பேரூராட்சிக்கு உட்பட்ட மூலப்பட்டு கிராமம் காந்தி சாலை யில் வசித்து வருபவர் அன்பு (வயது 25). இஸ்திரி தொழில் செய்து வந்தார். இவருக்கு நந்தினி என்ற மனைவியும், நிதிஷ், சாம் என்ற 2 மகன்களும் உள்ளனர்.
அன்பு, நெமிலி தட்டார தெருவில் தன் குடும்பத்தினரோடு வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு நந்தினி அம்பத் தூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
இதனால் அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது மாடி படிக்கட்டில் ரத்தம் வழிந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெமிலி போலீசார் அன்புவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் கடன் தொல்லையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






