என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இளைஞர் மரண வழக்கு: கைதான 5 காவலர்களும் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு
    X

    இளைஞர் மரண வழக்கு: கைதான 5 காவலர்களும் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு

    • அஜித்குமார் மரண வழக்கு பிரேத பரிசோதனை அடிப்படையில் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
    • இவ்வழக்கு தொடர்பாக 6 காவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் 5 காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றிருந்த போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில், அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

    கைதான காவலர்களான பிரபு, ஆனந்த், கண்ணன், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அஜித்குமார் மரண வழக்கு பிரேத பரிசோதனை அடிப்படையில் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கு தொடர்பாக 6 காவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் 5 காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×