என் மலர்
நீங்கள் தேடியது "elderly death"
- உளுந்தூர்பேட்டையில் மழைக்கு வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் சம்பவயிடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் கேசம்மாள் (98). இவர் மண் சுவரால் ஆன ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டரா பகுதியில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்தது. பின்னர் இரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது. மேலும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில் இரவு 12 மணியளவில் வீட்டில் தூக்கி கொண்டிருந்த மூதாட்டி கேசம்மாள் மீது வீட்டின் மண் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். மேலும் இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவயிடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டையில் மழைக்கு வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மாடுகளை ஓட்டி வர மீண்டும் காட்டுப்பகுதிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
- அஞ்செட்டி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி அடுத்துள்ள ஜேசுராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மதலை முத்து (வயது60). இவர் நேற்று தனது மாடுகளை அருகில் உள்ள சின்னமலை காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு ஓட்டி சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.
பின்னர் மாலையில் மாடுகளை ஓட்டி வர மீண்டும் காட்டுப்பகுதிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது உறவினர்கள் இன்று காலை அவரை தேடி காட்டு பகுதிக்கு சென்றபோது அங்கு மதலை முத்து யானை தாக்கி உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் அஞ்செட்டி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற அஞ்செட்டி வனத்துறையினர் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
- மூதாட்டி உயிரிழந்து 2 நாட்கள் ஆகிய நிலையில் அவரது இறுதிசடங்கு செய்து சுடுகாட்டிற்கு கொண்ட செல்ல முடியவில்லை.
- கிராமமக்கள் களக்காடு அம்பேத்கர் சிலை அருகே உயிரிழந்த மூதாட்டி உடலுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கல்லடி சிதம்பராபுரம் வேதநாயகபுரம் கிராமம் உள்ளது. இங்குள்ளவர் இறந்தால் பெருமாள்குளத்தில் உள்ள சுடுகாட்டை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் அந்த சுடுகாடு இருக்கும் இடம் தங்களுக்கு சொந்தமானது என தனியார் ஒருவர் கூறியதுடன் சுடுகாட்டை சுற்றி வேலி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தாங்கள் நீண்டகாலமாக சுடுகாடாக பயன்படுத்தி வரும் இடத்தை தங்களுக்கு மீட்டு தர வேண்டும் என கூறி அந்த கிராமமக்கள் அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வேதநாயகபுரத்தை சேர்ந்த சங்கரன் என்பவரது மனைவி இளங்காமணி (வயது70) என்ற மூதாட்டி உடல் நலக்குறைவால் இறந்தார்.
இதையடுத்து அவரது உடலை பெருமாள்குளம் சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல முடிவு செய்துள்ளனர். ஆனால் இந்த இடத்தை சொந்தம் என கூறி வரும் நபர்கள் அதற்கு அனுமதி மறுத்துள்ளனர். எனவே மூதாட்டி உயிரிழந்து 2 நாட்கள் ஆகிய நிலையில் அவரது இறுதிசடங்கு செய்து சுடுகாட்டிற்கு கொண்ட செல்ல முடியவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் களக்காடு அம்பேத்கர் சிலை அருகே உயிரிழந்த மூதாட்டி உடலுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு நாங்குநேரி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரசன்ன குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று கிராம மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தாங்கள் பயன்படுத்தி வரும் சுடுகாட்டை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
- ராணுவ வீரர் ஓட்டி சென்ற கார் மோதி முதியவர் பலியானார்.
- இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் பரமக்குடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தினைக்குளத்தை சேர்ந்தவர் போஸ் (வயது 43). இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
போஸ் தற்போது விடு முறையில் சொந்த ஊர் வந்துள்ளார். அவர் தனது காரை மதுரை - பரமக்குடி 4 வழிச்சாலையில் ஓட்டி சென்றார். வேந்தோணி விலக்கு என்ற இடத்தில் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது எதிர் திசையில் நின்று கொண்டிருந்த 2 கார்கள் மீது மோதியது.
மேலும் மேலும் அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீதும் கார் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த பொழி கால் கிராமத்தை சேர்ந்த முத்துவேல் (65) என்பவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபாக இறந்தார்.
இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் பரமக்குடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆரணி கும்மடம் தெருவில் உள்ள பவானி அம்மன் திருக்கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
- விபத்து குறித்து வரலட்சுமியின் மகள் சுசீலா நேற்று இரவு ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பஜார் வீதியில் வசித்து வந்தவர் கூலித் தொழிலாளி வரலட்சுமி(வயது58) ஆவார். இந்த மூதாட்டி நேற்று முன்தினம் காலை ஆரணி கும்மடம் தெருவில் உள்ள பவானி அம்மன் திருக்கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
பின்னர், கோவிலில் கற்பூரம் ஏற்றி வழிபட்டார்.அப்பொழுது எதிர்பாராத விதமாக இவரது சேலையில் தீப்பிடித்தது. அப்பொழுது காற்று பலமாக வீசியது. இதனால் சேலையில் தீ மளமளவென பற்றி உடல் கருகி அலறி துடித்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி நேற்று இரவு பரிதாபமாக பலியானார். இந்த விபத்து குறித்து வரலட்சுமியின் மகள் சுசீலா நேற்று இரவு ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். எனவே போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
- சிகிச்சை பிரிவில் இருந்த நாகேஸ்வரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
- பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த பங்களாபுதூர் அருகே உள்ள புஞ்சை துறையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரி(62). இவர் தனது தம்பி சுப்பிரமணியம் வீட்டில் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று நாகேஸ்வரி பங்களாபுதூர் அருகே உள்ள ஆனந்த கவுண்டர் தோட்டத்தில் தென்னை ஓலை எடுத்து வர சென்றுள்ளார். ஓலை எடுத்து வரும்போது அங்கிருந்த தென்னை மரத்தில் தேன் கூட்டில் ஓலையின் ஒரு பகுதி பட்டு தேனீக்கள் நாகேஸ்வரியை விரட்டி விரட்டி கொட்டியது.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக டி.என்.பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சையில் இருந்தவர் மருத்துவர் அறிவுறுத்தல் படி மீண்டும் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நாகேஸ்வரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிகிச்சை பலனின்றி எல்லம்மாள் பரிதாபமாக இறந்தார்.
- மூதாட்டி பலி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீஞ்சூர் அண்ணா தெரு, காலனி பகுதியை சேர்ந்தவர் எல்லம்மாள் (வயது85). இவர் வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை தெரியாமல் சாப்பிட்டுவிட்டார்.
இதில் மயங்கிய அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி எல்லம்மாள் பரிதாபமாக இறந்தார்.
- ரெயில் மோதி முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தை நேற்று காலை கடக்க முயன்ற 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், சென்னை நோக்கி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வெள்ளை நிற முழுக்கை சட்டையும், வெள்ளை நிற கட்டம் போட்ட லூங்கியும் அணிந்திருந்த அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அவரது உடலை ரெயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி தலைமையில் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமண வீட்டுக்கு வந்தவர்கள் பால்ராஜ் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
- முதியவரை காட்டு யானை மிதித்து கொன்ற சம்பவம் அந்த பகுதி மக்களை பீதியடைய செய்திருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு குண்டு மலை அருகே தென்மலா பகுதியில் தேயிலை தோட்டங்கள் இருக்கிறது. இங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கோவையை சேர்ந்த பால்ராஜ் (வயது79) என்பவர் கலந்து கொண்டார்.
நேற்று இரவு திருமண நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு அருகே காட்டு யானை புகுந்ததாக தெரிகிறது. திருமண வீட்டில் ஒலி பெருக்கி ஒலிக்கப்பட்டிருந்ததால் காட்டு யானை வருவதை யாரும் கவனிக்கவில்லை. இந்நிலையில் காட்டுயானை வருவதை பால்ராஜ் பார்த்திருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், காட்டு யானையிடம் இருந்து தப்பிக்க ஓடியிருக்கிறார். ஆனால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால் அவரால் வேகமாக ஓட முடியவில்லை. இதனால் பால்ராஜை யானை தாக்கியது. அதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை காட்டு யானை மிதித்து கொன்றது.
இந்நிலையில் காட்டு யானை தாக்கியதில் பால்ராஜ் இறந்துகிடந்ததை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்தனர். திருமண வீட்டுக்கு வந்தவர்கள் பால்ராஜ் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கும், வனத் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பால்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதியவரை காட்டு யானை மிதித்து கொன்ற சம்பவம் அந்த பகுதி மக்களை பீதியடைய செய்திருக்கிறது. முதியவரை கொன்ற யானை அந்த பகுதியில் உள்ளதா? என்று வனத்துறையினர் தேடிப் பார்த்தனர். ஆனால் காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இரவு நேரத்தில் மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
- பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த முதியவர் திடீர் என்று மயங்கி விழுந்துள்ளார்.
- போலீசார் முதியவரின் சடலத்தை கைப்பற்றி அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
பொன்னமராவதி:
புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி சென்ற அரசு பேருந்தில், குழிபிறை கிராமத்தில் முதியவர் ஒருவர் ஏறி உள்ளார். அவரை ஏற்றிக்கொண்டு குழிப்பிறை கிராமத்தில் இருந்து பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த முதியவர் திடீர் என்று மயங்கி விழுந்துள்ளார்.
பேருந்தில் பயணித்துள்ள சக பயணிகள் முதியவரின் முகத்தில் தண்ணீரை தெளித்து அவரின் மயக்கத்தை தெளிய வைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அவரின் உடலில் அசைவு ஏற்படவில்லை. இதனால் பேருந்தின் டிரைவர் சந்திரசேகரனும், கண்டக்டர் சுந்தரும், மருத்துவமனை செல்ல முடிவு செய்து பேருந்தை வேகமாக ஓட்டி சென்றுள்ளனர். அருகில் இருந்த வெங்கமேடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பேருந்தை கொண்டு சென்று, முதியவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க கேட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த டாக்டர் அவரை பரிசோதித்த பின்னர் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
போலீசார் முதியவரின் சடலத்தை கைப்பற்றி அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தது செந்துறையை சேர்ந்த தனசாமி என்பவரின் மகன் ஆரோக்கியராஜ் என்பதும், குழிப்பிறையில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு சென்று விட்டு, பேருந்தில் வீடு திரும்பியபோது மாரடைப்பு ஏற்பட்டதும், அவருக்கு ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- ஊரையே அழைத்து கறி விருந்து வைத்து திருவிழா போல 110-வது பிறந்தநாள் மிக விமர்சையாக கொண்டாடினர்.
- மூதாட்டி ராசாம்பாளுக்கு நேற்று திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேலிருப்பு கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்திர படையாட்சி-ராசாம்பாள் தம்பதியினர். இவர்களுக்கு 14 பிள்ளைகள் இருந்த நிலையில் 7 பேர் இறந்து விட்டனர். கடந்த 2011-ம் ஆண்டு சந்திர படையாட்சி உடல்நிலை குறைவால் இறந்துள்ளார். இதை தொடர்ந்து கடைசி மகனான ஞானசேகரன் அவரது மனைவி தமிழ்ச் செல்வி பராமரிப்பில் ராசாம்பாள் வாழ்ந்து வந்தார். ராசாம்பாளுக்கு 110 வயதான நிலையில், அவரது பிறந்த நாளை கடைசி மகன் ஞானசேகரன் உள்ளிட்ட 7 பிள்ளைகள், மருமகள்கள், பேர குழந்தைகள், கொள்ளு பேரப் பிள்ளைகள் என அவரது உறவினர்கள் சூழ 4 தலை முறை வாரிசுகளுடன் 110-வது பிறந்த நாளை சமீபத்தில் மூதாட்டி ராசாம்பாள் கொண்டாடினார்.
ஊரையே அழைத்து கறி விருந்து வைத்து திருவிழா போல 110-வது பிறந்தநாள் மிக விமர்சையாக கொண்டாடினர். இந்த நிகழ்ச்சி அப்பகுதி மட்டுமின்றி சுற்று வட்டார மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பெற்றோர்களை ஆதரவற்றோர் இல்லத்தில் விட்டு செல்லும் பிள்ளைகளின் மத்தியில் 110 வயது வரை தனது தாயை பராமரித்து வந்து 110-வது பிறந்த நாளை கறி விருந்துடன் திருவிழா போல கொண்டாடிய ஞானசேகரன் மற்றும் அவரது உறவினர்களின் செயல் அப்பகுதி மக்களிடையே பாராட்டப்பட்டது.
இந்த நிலையில மூதாட்டி ராசாம்பாளுக்கு நேற்று திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. பண்ருட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மூதாட்டி ராசாம்பாள் உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மேலிருப்பில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
- ஜோலார்பேட்டையில் இருந்து சென்ட்ரல் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் முதியவர் மீது மோதியது.
- பெரம்பூர் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பெரம்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள முதல் நடைமேடை அருகே இன்று காலை முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து சென்ட்ரல் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் முதியவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அவருக்கு சுமார் 65 வயது இருக்கும். அவர்யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து பெரம்பூர் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள்.






