search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elderly death"

    • பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த முதியவர் திடீர் என்று மயங்கி விழுந்துள்ளார்.
    • போலீசார் முதியவரின் சடலத்தை கைப்பற்றி அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    பொன்னமராவதி:

    புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி சென்ற அரசு பேருந்தில், குழிபிறை கிராமத்தில் முதியவர் ஒருவர் ஏறி உள்ளார். அவரை ஏற்றிக்கொண்டு குழிப்பிறை கிராமத்தில் இருந்து பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த முதியவர் திடீர் என்று மயங்கி விழுந்துள்ளார்.

    பேருந்தில் பயணித்துள்ள சக பயணிகள் முதியவரின் முகத்தில் தண்ணீரை தெளித்து அவரின் மயக்கத்தை தெளிய வைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அவரின் உடலில் அசைவு ஏற்படவில்லை. இதனால் பேருந்தின் டிரைவர் சந்திரசேகரனும், கண்டக்டர் சுந்தரும், மருத்துவமனை செல்ல முடிவு செய்து பேருந்தை வேகமாக ஓட்டி சென்றுள்ளனர். அருகில் இருந்த வெங்கமேடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பேருந்தை கொண்டு சென்று, முதியவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க கேட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த டாக்டர் அவரை பரிசோதித்த பின்னர் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    போலீசார் முதியவரின் சடலத்தை கைப்பற்றி அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தது செந்துறையை சேர்ந்த தனசாமி என்பவரின் மகன் ஆரோக்கியராஜ் என்பதும், குழிப்பிறையில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு சென்று விட்டு, பேருந்தில் வீடு திரும்பியபோது மாரடைப்பு ஏற்பட்டதும், அவருக்கு ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • திருமண வீட்டுக்கு வந்தவர்கள் பால்ராஜ் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
    • முதியவரை காட்டு யானை மிதித்து கொன்ற சம்பவம் அந்த பகுதி மக்களை பீதியடைய செய்திருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு குண்டு மலை அருகே தென்மலா பகுதியில் தேயிலை தோட்டங்கள் இருக்கிறது. இங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கோவையை சேர்ந்த பால்ராஜ் (வயது79) என்பவர் கலந்து கொண்டார்.

    நேற்று இரவு திருமண நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு அருகே காட்டு யானை புகுந்ததாக தெரிகிறது. திருமண வீட்டில் ஒலி பெருக்கி ஒலிக்கப்பட்டிருந்ததால் காட்டு யானை வருவதை யாரும் கவனிக்கவில்லை. இந்நிலையில் காட்டுயானை வருவதை பால்ராஜ் பார்த்திருக்கிறார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர், காட்டு யானையிடம் இருந்து தப்பிக்க ஓடியிருக்கிறார். ஆனால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால் அவரால் வேகமாக ஓட முடியவில்லை. இதனால் பால்ராஜை யானை தாக்கியது. அதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை காட்டு யானை மிதித்து கொன்றது.

    இந்நிலையில் காட்டு யானை தாக்கியதில் பால்ராஜ் இறந்துகிடந்ததை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்தனர். திருமண வீட்டுக்கு வந்தவர்கள் பால்ராஜ் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கும், வனத் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பால்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதியவரை காட்டு யானை மிதித்து கொன்ற சம்பவம் அந்த பகுதி மக்களை பீதியடைய செய்திருக்கிறது. முதியவரை கொன்ற யானை அந்த பகுதியில் உள்ளதா? என்று வனத்துறையினர் தேடிப் பார்த்தனர். ஆனால் காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து இரவு நேரத்தில் மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • ரெயில் மோதி முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தை நேற்று காலை கடக்க முயன்ற 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், சென்னை நோக்கி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வெள்ளை நிற முழுக்கை சட்டையும், வெள்ளை நிற கட்டம் போட்ட லூங்கியும் அணிந்திருந்த அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அவரது உடலை ரெயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி தலைமையில் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிகிச்சை பலனின்றி எல்லம்மாள் பரிதாபமாக இறந்தார்.
    • மூதாட்டி பலி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மீஞ்சூர் அண்ணா தெரு, காலனி பகுதியை சேர்ந்தவர் எல்லம்மாள் (வயது85). இவர் வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை தெரியாமல் சாப்பிட்டுவிட்டார்.

    இதில் மயங்கிய அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி எல்லம்மாள் பரிதாபமாக இறந்தார்.

    • சிகிச்சை பிரிவில் இருந்த நாகேஸ்வரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
    • பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த பங்களாபுதூர் அருகே உள்ள புஞ்சை துறையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரி(62). இவர் தனது தம்பி சுப்பிரமணியம் வீட்டில் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று நாகேஸ்வரி பங்களாபுதூர் அருகே உள்ள ஆனந்த கவுண்டர் தோட்டத்தில் தென்னை ஓலை எடுத்து வர சென்றுள்ளார். ஓலை எடுத்து வரும்போது அங்கிருந்த தென்னை மரத்தில் தேன் கூட்டில் ஓலையின் ஒரு பகுதி பட்டு தேனீக்கள் நாகேஸ்வரியை விரட்டி விரட்டி கொட்டியது.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக டி.என்.பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    அங்கு சிகிச்சையில் இருந்தவர் மருத்துவர் அறிவுறுத்தல் படி மீண்டும் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நாகேஸ்வரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆரணி கும்மடம் தெருவில் உள்ள பவானி அம்மன் திருக்கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
    • விபத்து குறித்து வரலட்சுமியின் மகள் சுசீலா நேற்று இரவு ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பஜார் வீதியில் வசித்து வந்தவர் கூலித் தொழிலாளி வரலட்சுமி(வயது58) ஆவார். இந்த மூதாட்டி நேற்று முன்தினம் காலை ஆரணி கும்மடம் தெருவில் உள்ள பவானி அம்மன் திருக்கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

    பின்னர், கோவிலில் கற்பூரம் ஏற்றி வழிபட்டார்.அப்பொழுது எதிர்பாராத விதமாக இவரது சேலையில் தீப்பிடித்தது. அப்பொழுது காற்று பலமாக வீசியது. இதனால் சேலையில் தீ மளமளவென பற்றி உடல் கருகி அலறி துடித்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி நேற்று இரவு பரிதாபமாக பலியானார். இந்த விபத்து குறித்து வரலட்சுமியின் மகள் சுசீலா நேற்று இரவு ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். எனவே போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    • ராணுவ வீரர் ஓட்டி சென்ற கார் மோதி முதியவர் பலியானார்.
    • இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் பரமக்குடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தினைக்குளத்தை சேர்ந்தவர் போஸ் (வயது 43). இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

    போஸ் தற்போது விடு முறையில் சொந்த ஊர் வந்துள்ளார். அவர் தனது காரை மதுரை - பரமக்குடி 4 வழிச்சாலையில் ஓட்டி சென்றார். வேந்தோணி விலக்கு என்ற இடத்தில் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது எதிர் திசையில் நின்று கொண்டிருந்த 2 கார்கள் மீது மோதியது.

    மேலும் மேலும் அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீதும் கார் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த பொழி கால் கிராமத்தை சேர்ந்த முத்துவேல் (65) என்பவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் பரமக்குடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் புது தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 74). இவர் அதே பகுதியில் உள்ள பஸ் நிலையம் முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக கணேசன் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய சொக்கநாதன் புத்தூரை சேர்ந்த யோகராஜ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ஆம்பூர் அருகே ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    ஆம்பூர் அருகே உள்ள பச்சக்குப்பம் மேல்பட்டி இடையேயான தண்டவாளத்தில் 55 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் உடலை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர் அருகே பஸ் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். (வயது 88). தொழிலாளி.

    இன்று காலை அவர் அதே பகுதியில் சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது கோயம்பேட்டில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென்ற முருகேசன் மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து நடந்த போது டிரைவர் திடீர் பிரோக் போட்டதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி முழுவதும் நொறுங்கியது. பஸ்சில் இருந்த பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    பின்னர் அவர்கள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து மாணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஊத்துக்கோட்டை அருகே வெயில் கொடுமையால் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. 10-க்கும் மேற்பட்ட நகரங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது.

    இதேபோல் ஊத்துக்கோட்டை பகுதியிலும் வெயில் வறுத்தெடுக்கிறது. இதனால் பொது மக்களும் வாகன ஓட்டிகளும் வெப்பத்தின் தாக்கத்தால் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஊத்துக்கோட்டை அருகே வெயிலின் கொடுமையால் மூதாட்டி ஒருவர் பலியாகி உள்ளார். ஊத்துக்கோட்டை அருகே உள்ள ராஜபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமய்யா. இவரது மனைவி செங்கம்மாள் (வயது 70). நேற்று சுட்டெரிக்கும் வெயிலில் அல்லிகுழியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.

    அப்போது வெயில் கொடுமை தாங்காமல் சாலையில் சுருண்டு விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செங்கம்மாள் இறந்தார். இது குறித்து பென்னாலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணை நடத்தி வருகிறார்.

    ராணிப்பேட்டை அருகே 3 குடிசை வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் மூதாட்டி உடல் கருகி பலியானார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வாலாஜா:

    ரணிப்பேட்டை அடுத்த காரை பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 70) குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகள் சுகுணா (42). மகன் ராஜ்குமார் (35).

    சுகுணாவிற்கு திருமணமாகி சாந்தி வீட்டின் அருகிலேயே வசித்து வருகிறார். இவரது வீட்டில் மின் இணைப்பு இல்லாத காரணத்தால் தாய் சாந்தி வீட்டில் இருந்து ஒயர் மூலம் மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வந்தார்.

    இந்நிலையில் நேற்றிரவு சுகுணா வீட்டிற்கு சென்ற மின் ஒயரில் திடீரென தீபிடித்து எரிந்து சாந்தியின் குடிசை வீட்டில் தீ பற்றியது காற்று அதிகமாக வீசியதால் தீ அருகில் இருந்த சுகுணா மற்றும் வினோத்குமார் வீடுகளிலும் மளமளவென பரவியது.

    சாந்தியால் வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை. இதனால் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார். தீ பற்றி எரிவதை கண்டு வெளியே ஓடிவந்த ராஜ்குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

    இது குறித்து ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு அலுவலர் கமலக்கண்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    ராணிப்பேட்டை டி.எஸ்.பி. கலைசெல்வன், மற்றும் போலீசார் சாந்தியின் உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீகாயமடைந்த ராஜ்குமாரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்த்திரியில் சேர்த்தனர். பின்னர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இன்று காலை தீ விபத்து நடந்த வீடுகளை காந்தி எம்.எல்.ஏ. பார்வையிட்டு பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

    ×