என் மலர்
உள்ளூர் செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி
- உளுந்தூர்பேட்டையில் மழைக்கு வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் சம்பவயிடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் கேசம்மாள் (98). இவர் மண் சுவரால் ஆன ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டரா பகுதியில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்தது. பின்னர் இரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது. மேலும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில் இரவு 12 மணியளவில் வீட்டில் தூக்கி கொண்டிருந்த மூதாட்டி கேசம்மாள் மீது வீட்டின் மண் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். மேலும் இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவயிடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டையில் மழைக்கு வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






