search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "petrol bomb"

    • மாரிச்சாமி என்பவர் தனது வீட்டு முன்பு 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைத்திருந்தார்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி ரெயில் நிலையம் அருகே டி.வி.கே.கே.நகரில் செல்வ காளியம்மன் கோவில் உள்ளது. இந்த தெருவில் மாரிச்சாமி என்பவர் தனது வீட்டு முன்பு 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைத்திருந்தார். நேற்று நள்ளிரவு இந்த மோட்டார் சைக்கிள்கள் தீ பிடித்து எரிந்து கொண்டு இருந்தது.

    மேலும் பெட்ரோல் டேங்க் வெடிக்கும் சத்தமும் கேட்டுள்ளது. இதனை கேட்டு மாரிச்சாமி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது 2 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து கொண்டு இருந்ததால் தண்ணீர் ஊற்றி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இது குறித்து போடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    மோட்டார் சைக்கிள்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கலாம் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த தெருவில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் சோதனை செய்தனர்.

    அதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் ஏதோ ஒரு பொருளை வீசுவது போன்றும், தீ வைப்பது போன்றும் காட்சி பதிவாகி இருந்தது. அதன் பேரில் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே அம்பலவாணன் பேட்டை கிராமம் உள்ளது.
    • குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே அம்பலவாணன் பேட்டை கிராமம் உள்ளது. இங்கு பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அம்பேத்கர் சிலை உள்ளது. அங்கு நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தனர். அக்கும்பல் திடீரென்று அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீசியது. அந்த குண்டு அம்பேத்கர் சிலை மீது பட்டு பழைய ஊராட்சி மன்ற கட்டிட வளாகத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து, 4 பேர் கொண்ட கும்பலை பிடிக்க விரட்டினர்.

    ஆனால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இத்தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் பெருமளவில் அந்த பகுதியில் திரண்டனர். குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் தொகுதி செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் இளையராஜா, நகர செயலாளர் அம்பேத் மற்றும் நூற்றுக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் அந்த பகுதியில் மீண்டும் திரண்டனர். பெட்ரோல் குண்டு வீசியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

    இதனை தொடர்ந்து துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு பால் ஊற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அம்பேத்கர் சிலை மற்றும் பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது. அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

    • மாரிச்செல்வம் வீட்டின் முன் பகுதியில் கிடந்த பொருட்கள் சேதம் அடைந்தன.
    • ரேஷன் அரிசி கடத்தல் கும்பலின் வாகனத்தை சமீபத்தில் விருதுநகரில் வைத்து போலீசார் பிடித்துள்ளனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜு நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிச்செல்வம். இவர் வக்கீல் தொழில் செய்து வருகிறார்.

    நேற்று நள்ளிரவில் அவரது வீட்டுக்கு கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் மாரிச்செல்வம் வீட்டின் மீது அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகளை வீசியது.

    இதில் மாரிச்செல்வம் வீட்டின் முன் பகுதியில் கிடந்த பொருட்கள் சேதம் அடைந்தன. மேலும் மாரிச்செல்வம் பக்கத்து வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்த அவரது வாகனத்தையும் அந்த கும்பல் சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றது.

    மேலும் மாரிச்செல்வத்திற்கு சொந்தமான ஊத்துப்பட்டி செல்லும் சாலையில் உள்ள தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தையும் அந்த கும்பல் தீ வைத்து விட்டு தப்பி சென்றது.

    இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் மாரிச்செல்வம் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து மாரிச்செல்வத்துக்கு தொழில் ரீதியாக ஏதேனும் முன் விரோதம் ஏற்பட்டு அந்த பிரச்சனையில் யாரேனும் பெட்ரோல் குண்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரிச்செல்வத்துக்கு தெரிந்த சிறுவனை ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் ஒன்று வீடுகளில் ரேஷன் அரிசி வாங்கி தர கட்டாயப்படுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து வக்கீல் மாரிச்செல்வம் அந்த கும்பலிடம் கேள்வி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இதற்கிடையே ரேஷன் அரிசி கடத்தல் கும்பலின் வாகனத்தை சமீபத்தில் விருதுநகரில் வைத்து போலீசார் பிடித்துள்ளனர்.

    இதனால் வக்கீல் மாரிச்செல்வம் தான் தகவல் கொடுத்திருக்க வேண்டும் என்று நினைத்து ஆத்திரமடைந்த அந்த கும்பல் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    எனினும் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முத்துராஜை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர்.
    • விக்ரம் வீட்டுக்கு சென்று அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாள முத்துநகர் தாய் நகரை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 24). இவர் தனது நண்பர்களான ரிஜோ (21), ஹவுசிங் போர்டு விக்னேசுவரன் (20) மற்றும் வாலிபர்கள் 2 பேருடன் சேர்ந்து கதிர்வேல்நகர் குப்பைகிடங்கு அருகில் மது குடித்தனர்.

    அப்போது அங்கு வந்த விக்ரம் (22), ராபர்ட் ஆகிய 2 பேருக்கும் முத்துராஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த விக்ரம், ராபர்ட் ஆகிய 2 பேரும் வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து வந்து முத்துராஜை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர்.

    இதில் படுகாயமடைந்த முத்துராஜ் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் முத்துராஜின் நண்பர்கள் நள்ளிரவில் பிஅன்டி காலனியில் உள்ள உள்ள விக்ரம் வீட்டுக்கு சென்று அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.

    இதில் வீட்டின் வளாக முன்பகுதியில் விழுந்த பெட்ரோல் குண்டுகள் வெடித்து தீப்பிடித்தது. வீட்டில் உள்ளவர்கள் உடனே தீயை அணைத்தனர். இதுகுறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின்பேரில், சிப்காட் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஹவுசிங் போர்டு திருமுருகன் (19), ஸ்வீட்டன் ரிஜோ (21) ராஜகோபால் நகர் சந்தோஷ் ராஜா (20) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 4 பேரை கைது செய்தனர். மேலும் மில்லர் புரத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் (20), மதன் (18) ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

    • லிங்கராஜன் வழக்கம் போல தனது பிளக்ஸ் கடையில் வேலைகளை கவனித்து கொண்டிருந்தார்.
    • போலீசார் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை அடுத்த வீரசோழன் அருகேயுள்ள ஏ.தரைக்குடி பகுதியை சேர்ந்தவர் லிங்கராஜன் (வயது 28). இவர் ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வருகிறார். மேலும் இவர் வீரசோழன் தொடக்கப்பள்ளி அருகே டிஜிட்டல் பிளக்ஸ் மற்றும் ஸ்டூடியோ கடை நடத்தி வருகிறார். தற்போது டி.புனவாசல் பகுதியில் வசித்து வருகிறார்.

    இந்தநிலையில் லிங்கராஜன் வழக்கம் போல நேற்று தனது பிளக்ஸ் கடையில் வேலைகளை கவனித்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம வாலிபர்கள் இவரது கடை மீது பெட்ரோல் குண்டு வீசி விட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலில் லிங்கராஜன் காயமின்றி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து வீரசோழன் போலீஸ் நிலையத்தில் லிங்க பாண்டியன் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் நேற்று முன்தினம் மாலை லிங்கராஜனின் ஊரைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் வீரசோழன் அரசுப்பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்கள் பள்ளி முடிந்து பஸ் ஏற வந்தபோது அங்குள்ள கடையில் பாணி பூரி சாப்பிட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த வீரசோழன் தெற்குத்தெருவை சேர்ந்த கொங்குசெல்வம் (19) என்பவர் தான் சப்பிட்டதற்கும் பணம் தருமாறு கூறியுள்ளார்.

    ஆனால் மாணவர்கள் பணம் கொடுக்க மறுத்த நிலையில் ஆத்திரமடைந்த கொங்குசெல்வம், சசிகுமார் மற்றும் சாரதி ஆகிய இருவரையும் ராக்கிங் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன பள்ளி மாணவர்கள் லிங்கராஜனிடம் சென்று அழுதுகொண்டே நடந்ததை கூறியுள்ளனர். இதற்கிடையில் கொங்கு செல்வமும் மாணவர்களை பின் தொடர்ந்து பிளக்ஸ் கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்களை லிங்கராஜன் கண்டித்து அனுப்பியுள்ளார். இந்தநிலையில் தான் கொங்குசெல்வம் தனது கூட்டாளியுடன் சேர்ந்து லிங்கராஜனுக்கு சொந்தமான பிளக்ஸ் கடை மீது பெட்ரோல் குண்டை வீசி தாக்குதலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

    எந்நேரமும் ஆள் நடமாட்டமுள்ள வீரசோழன்-அபிராமம் சாலையில் பிளக்ஸ் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் வீரசோழன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    • பெட்ரோல் குண்டு வீட்டு வாசல் முன்பு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி தீப்பிடித்தது.
    • கிச்சா என்கிற பிரவீன், சூர்யா என்கிற ஜூட் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    புது வண்ணாரப்பேட்டை தேசிய நகர் 6-வது தெருவில் வசித்து வருபர் சிவா (34).நேற்று இரவு இவரது வீட்டு வாசல் முன்பு நின்றபடி 3 வாலிபர்கள் கஞ்சா புகைத்து கொண்டு இருந்தனர்.

    இதனை கவனித்த சிவாக அவர்களை கண்டித்தார். மேலும் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால் வேறு இடத்திற்கு செல்லுமாறு கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் 3 வாலிபர்களும் அங்கிருந்து சென்று விட்டனர்.

    இந்தநிலையில் நள்ளிரவு 12 மணியளவில் வந்த மர்ம கும்பல் திடீரென பெட்ரோல் குண்டை சிவாவின் வீட்டின் மீது வீசினர். இதில் அந்த பெட்ரோல் குண்டு வீட்டு வாசல் முன்பு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி தீப்பிடித்தது.

    சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வெளியே வந்ததும் பெட்ரோல் குண்டை வீசிய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிவா போலீஸ் கட்டுப்பாட்டு அறிக்கைக்கு தகவல் தெரிவித்தார். புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் 3 வாலிபர்கள் பெட்ரோல் குண்டை வீசுவது பதிவாகி இருந்தது.

    இதனை வைத்து அதே பகுதி வெங்கடேசன் தெருவை சேர்ந்த மனோஜ் குமார் என்கிற மாயாண்டி என்வரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 8 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்டதால் சிவாவின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசி இருப்பது தெரியவந்தது.

    இதில் தொடர்புடைய கிச்சா என்கிற பிரவீன், சூர்யா என்கிற ஜூட் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • வெடிக்காமல் இருந்த மீதமுள்ள 2 பெட்ரோல் குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்தவர் தமிழருவி. இவர் வாணியம்பாடி பஸ் நிலையத்தில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் கடையை திறந்து வியாபாரம் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு பேக்கரியில் ஒரு ஊழியர் மற்றும் வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது 3 பேர் கொண்ட கும்பல் பைக்கில் வந்தனர். திடீரென மது பாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி, அதனை பற்ற வைத்து பேக்கரியில் வீசினர். அதில் ஒரு பாட்டில் மட்டும் வெடித்து சிதறியது. இதில் கடையில் தீ பிடித்து எரிந்தது. கடையில் இருந்த பொருட்கள் தீயில் கருகியது. மேலும் தீ மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    இதனை கண்ட ஊழியர் அதிர்ச்சி அடைந்து தீயை அணைக்க முயன்றார். அப்போது அவருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. மர்ம கும்பல் கடைக்குள் புகுந்து ஊழியரை மிரட்டி தாக்க முயன்றனர். அவர் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். சுதாரித்து கொண்ட மர்ம கும்பல் அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அங்கிருந்து பைக்கில் தப்பி சென்றனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் வாணியம்பாடி டவுன் போலீசாருக்கும் மற்றும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கடையில் மேலும் தீ பிடிக்காமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    அங்கு வெடிக்காமல் இருந்த மீதமுள்ள 2 பெட்ரோல் குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசி, ஊழியரை மிரட்டி சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    • 24 மணி நேரமும் மது குடித்துக் கொண்டே இருந்தேன்.
    • சிகிச்சைக்காக அனுமதிக்க கேட்டபோது மருத்துவ மனையில் சேர்க்க இயலாது என தெரிவித்து விட்டனர்.

    சென்னை:

    சென்னை பாரிமுனை கொத்தவால் சாவடியில் வீரபத்திரசாமி கோவிலில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான முரளி கிருஷ்ணன் போலீஸ் காவலில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான். அதன் விவரம் வருமாறு:-

    மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில் மனரீதியாக மிகுந்த பிரச்சினைகள் இருந்ததால் மதுவிற்கு அடிமையாகி தினம்தோறும் குடித்து வருகிறேன். அடிக்கடி எனது காதில் வீட்டின் மேலே இருந்து குதித்து விடு, தற்கொலை செய்து கொள், எப்படி யாவது இறந்து விடு என ஒரு குரல் கேட்டுக் கொண்டே உள்ளது.

    அதனை மறக்க 24 மணி நேரமும் மது குடித்துக் கொண்டே இருந்தேன். இதுகுறித்து மருத்துவ மனைக்கு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்க கேட்டபோது மருத்துவ மனையில் சேர்க்க இயலாது என தெரிவித்து விட்டனர்.

    எனக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு மருத்துவர்கள் உதவ முன்வராததால் உயிரிழந்து விடலாம் என பெட்ரோலை வாங்கி உதவி செய்யாத வீரபத்திரர் மீது வீசி விட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்தபோது கோவில் பூட்டி இருந்ததால் மறைத்து வைத்திருந்ததேன். மறுநாள் காலை பல நாட்களாக வழிபட்டு வரும் எனக்கு எந்த உதவியும் வீரபத்திரன் அளிக்கவில்லை என ஆத்திரத்தில் பீர் பாட்டிலை மது போதையில் இருந்த போது வீசிவிட்டு தற்கொலை செய்து கொள்ள நினைத்த போது அருகில் இருந்தவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்து விட்டனர்.

    இவ்வாறு வாக்கு மூலம் அளித்துள்ளான்.

    • பெட்ரோல் குண்டை வீசியதாக கைதான முரளி கிருஷ்ணன் வாக்குமூலம் அளித்தார்.
    • போலீசார் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்கிற சந்தேகம் ஏற்பட்டது.

    ராயபுரம்:

    சென்னை பாரிமுனை கொத்தவால்சாவடி கோவிந்தப்பன் நாயக்கன் தெரு சந்திப்பில் ஸ்ரீ வீரபத்ர சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் மீது கடந்த 10-ந்தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் கொத்தவால் சாவடி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சவுகார் பேட்டை ஆதியப்ப நாயக்கன் தெருவை சேர்ந்த வியாபாரி முரளி கிருஷ்ணா என்பவர் பெட்ரோல் குண்டுகளை வீசியது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பீர்பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி கோவில் மீது அவர் வீசியது தெரியவந்தது. தினமும் சாமி தரிசனம் செய்து வந்த போதிலும் எனக்கு கடவுள் அருள் தரவில்லை என்று கூறி பெட்ரோல் குண்டை வீசியதாக கைதான முரளி கிருஷ்ணன் வாக்குமூலம் அளித்தார்.

    இருப்பினும் போலீசார் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்கிற சந்தேகம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து வியாபாரி முரளி கிருஷ்ணனை காவலில் எடுக்க முடிவு செய்தனர். இதன்படி கோர்ட்டில் மனுதாக்கல் செய்து இன்று 7 நாட்கள் காவலில் எடுத்தனர். பெட் ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    "கடவுள் எனக்கு அருள் தரவில்லை. அதனால் பெட்ரோல் குண்டை வீசினேன்" என்று முரளிகிருஷ்ணன் வாக்குமுலம் அளித்திருந்தாலும், வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என்பது பற்றி விசாரணை நடத்துவதற்காகவே முரளி கிருஷ்ணனை காவலில் எடுத்துள்ளோம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவில்தான் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • சென்னை கமிஷனர் ஆபீசுக்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
    • அதில், கோவையில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என தெரிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேற்று இமெயில் வந்துள்ளது. அந்த இமெயிலில் மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து கோவையின் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. செல்போன் எண்ணுடன் இசக்கி என்பவர் பெயரில் இந்த இமெயில் வந்துள்ளது.

    இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், போலி இமெயில் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    இமெயில் மூலம் வந்த பெட்ரோல் குண்டுவீச்சு மிரட்டல் ஒரு வதந்தி என போலீசார் தெரிவித்தனர். மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையடுத்து, கோவை முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என கோவை காவல் ஆணையர் தெரிவித்தார்.

    • பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
    • ஆட்சியாளர்கள் மீது கடுங்கோபத்துடனும் இருந்து வருகின்றனர்.

    சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெரு அருகே உள்ள வீரபத்ர சாமி தேவஸ்தானத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெட்ரோல் குண்டு வீசிய முரளி கிருஷ்ணா என்பவர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த நிலையில், கோயில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், "சென்னை பாரிமுனை, ஶ்ரீ வீரபத்ரசாமி திருக்கோவில் உட்பிரகாரத்துக்கு உள்ளேயே, பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த கொடுஞ்செயலை வன்மையாக கண்டிப்பதுடன், இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறேன்."

    "நான் ஏற்கனவே பலமுறை எச்சரித்தும் இந்த விடியா திமுக அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் மீண்டும் மீண்டும் முழுத்தோல்வி அடைந்திருப்பதன் எடுத்துக்காட்டே இந்த சம்பவம்."

    "முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில், ஆளுநர் மாளிகை தொடங்கி ஆலயங்கள் வரை எங்கு பார்த்தாலும் வெடிகுண்டு கலாச்சாரம் பரவி வருவதை கண்டு மக்கள் அச்சத்துடனும் இந்த ஆட்சியாளர்கள் மீது கடுங்கோபத்துடனும் இருந்து வருகின்றனர்."

    "எதிலும் அக்கறையின்றி செயல்படும் இந்த விடியா அரசின் பொம்மை முதல்வர் வெறும் வாய்ச்சவடால் இன்றி இனியேனும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • சாமி தனக்கு எதுவும் செய்யவில்லை என்ற கோபத்தில் பீர் பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாக தகவல்.
    • உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறையின் கீழ் செயல்படும் டிரஸ்டின் கீழ் இந்த கோயில் உள்ளது.

    சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெரு ஜங்ஷனில் உள்ள வீரபத்ர சுவாமி தேவஸ்தானத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

    பெட்ரோல் குண்டு வீசிய முரளி கிருஷ்ணா என்பவர் கோவில் அருகே ஜிகே டிரேடர்ஸ் என்ற கடை நடத்தி வருகிறார்.

    விசாரணையில், சாமி தனக்கு எதுவும் செய்யவில்லை என்ற கோபத்தில் பீர் பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கோவிலில் வீசியது தெரிய வந்தது.

    இதையடுத்து, பெட்ரோல் குண்டு வீசிய முரளிகிருஷ்ணாவை கொத்தவால் சாவடி போலீசார் கைது செய்தனர். மேலும் முரளி கிருஷ்ணா மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் பீர் பாட்டில்கள் சிதறி கொட்டிய இடத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி நிரஞ்சன் நேரில் ஆய்வு செய்துகின்றனர். உடன் தடவியல் நிபுணர்களும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறையின் கீழ் செயல்படும் டிரஸ்டின் கீழ் இந்த கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×