search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே பரபரப்பு செங்கல் சூளை தொழிலாளி சாவில் மர்மம்:போலீசில் புகார் :
    X

    கடலூர் அருகே பரபரப்பு செங்கல் சூளை தொழிலாளி சாவில் மர்மம்:போலீசில் புகார் :

    • தென்பெண்ணை ஆறு ஓரமாக செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். நேற்று சாமுவேல்
    • தகர செட்டில் தூக்கு போட்டு இறந்த நிலையில் இருந்தார்

    கடலூர்:

    உளுந்தூர்பேட்டை புது நண்ணாவரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் சாமுவேல் (வயது 24) கடந்த 3 வருடமாக மேல் பட்டாம்பாக்கம் தென்பெண்ணை ஆறு ஓரமாக செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார்.நேற்று சாமுவேல் திடீரென்று அங்குள்ள தகர செட்டில் தூக்கு போட்டு இறந்த நிலையில் இருந்தார். இதனை பார்த்த சாமுவேல் தம்பி ராஜவேல் அதிர்ச்சி அடைந்து நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் சாமுவேல் உடலை கைப்பற்றி முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோத னைக்காக கொண்டு சென்றனர். இது குறித்து சக்திவேல் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் சாமுவேல் இறப்பில் சந்தேகம் இருப்ப தாக புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது

    Next Story
    ×