search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுபோதையில் பலாப்பழம் சாப்பிட்ட தொழிலாளி உயிரிழப்பு
    X

    மதுபோதையில் பலாப்பழம் சாப்பிட்ட தொழிலாளி உயிரிழப்பு

    • முருகையன் அதியமான் கோட்டை அருகே உள்ள தடங்கம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.
    • முருகையன் நேற்றிரவு இரவு அளவுக்கு அதிகமாக மதுபோதையில் பலாப்பழத்தை சேர்த்து சாப்பிட்டார்.

    தருமபுரி:

    கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் முருகையன். இவர் தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை அருகே உள்ள தடங்கம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு நீண்ட நாட்களாக மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

    நேற்றிரவு இரவு அளவுக்கு அதிகமாக மதுபோதையில் பலாப்பழத்தையும் சேர்த்து சாப்பிட்டார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து அதியமான் கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்க ல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×