என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பரமத்திவேலூர் அருகேகாவிரி ஆற்றில் மூழ்கி சென்ட்ரிங் தொழிலாளி சாவு
- செந்தில் (வயது 34). இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார்.
- மதியம் சுமார் 1.30 மணி அளவில் செந்தில், கார்த்தி மற்றும் குடும்பத்தினர், பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி காவிரி ஆற்று தடுப்பணை பாலம் அருகே குளிக்கச் சென்றனர்.
பரமத்திவேலூர்:
ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஆப்பக்கூ டல் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் செந்தில் (வயது 34). இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார். இவருக்கு, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கொசவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (26) என்பவரின் சகோத ரியை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். செந்தில் தனது மைத்துனர் கார்த்தி வீட்டில் தங்கியிருந்து சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 1.30 மணி அளவில் செந்தில், கார்த்தி மற்றும் குடும்பத்தினர், பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி காவிரி ஆற்று தடுப்பணை பாலம் அருகே குளிக்கச் சென்றனர்.
அப்போது, காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டி ருந்த செந்தில் எதிர் திசையான பாகூர் பகுதிக்கு நீந்தி சென்றுள்ளார். பாதி வழி சென்ற அவரால், அதன் பின்னர் நீந்தி செல்ல முடியவில்லை. மேலம் காவேரி ஆற்று தண்ணீரில் மூழ்கி விட்டார்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஜேடர்பா ளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் போலீசார் வெப்படை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். பின்னர் மீனவர்கள் உதவியுடன் தீயணைப்புத் துறை வீரர்கள் அப்பகுதியில் இரு கரையிலும் செந்திலின் உடலை தேடிப் பார்த்தனர்.
இரவு சுமார் 8 மணி அளவில் செந்தில் உடல் சோழசிராமணி பகுதியில் ஒதுங்கி இருந்தது. இதை யடுத்து தீயணைப்புத் துறையினர் செந்தில் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தி லின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்