search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி சாவு
    X

    அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி சாவு

    • கார்த்திக் (வயது 34). தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
    • குடிப்ப ழக்கம் உடைய கார்த்திக், கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மது அருந்திய தாக கூறப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் காவேட்டிப் பட்டி பகுதி யைச் சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் கார்த்திக் (வயது 34). தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் குடிப்ப ழக்கம் உடைய கார்த்திக், கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மது அருந்திய தாக கூறப்படுகிறது. இத னால் உடல் நலம் பாதிக்கப் பட்ட அவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் போலீ சார், அவரை மீட்டு நாமக் கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    குடிபோதையில் இறந்த அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத னர். மேலும் இந்த சம்பவம் குறித்து நாமக்கல் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×