search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சரக்கு வாகனம் மோதி சேலத்தை சேர்ந்த தொழிலாளி சாவு
    X

    சரக்கு வாகனம் மோதி சேலத்தை சேர்ந்த தொழிலாளி சாவு

    • மரம் வெட்டும் தொழிலாளியான இவர் தற்போது ராசிபுரம் அருகே உள்ள தொட்டிய வலசு கிராமத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.
    • நேற்று பாண்டியன், சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொட்டிய வலசு பிரிவு சாலையை கடக்க முயன்றார்.

    ராசிபுரம்:

    சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 55). மரம் வெட்டும் தொழிலாளியான இவர் தற்போது ராசிபுரம் அருகே உள்ள தொட்டிய வலசு கிராமத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். நேற்று பாண்டியன், சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொட்டிய வலசு பிரிவு சாலையை கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற சரக்கு வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது பற்றி வெண்ணந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தில் இறந்த பாண்டியனின் உடலை கைப்பற்றி ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விபத்து தொடர்பாக ெதாடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×