என் மலர்
நீங்கள் தேடியது "மேனகா காந்தி"
- தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது
- தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லியில் தெரு நாய்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. தெரு நாய்களால், தெருக்களில் நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
தெரு நாய் கடியால் டெல்லியில் நிறைய பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அமர்வு, 8 வாரங்களுக்குள் தலைநகர் டெல்லியில் சுற்றித் திரியும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இதனிடையே தெருநாய்க்கடியால் பறிபோன குழந்தைகளின் உயிர்களை விலங்கு நல ஆர்வலர்கள் திருப்பிக் கொண்டு வருவார்களா? டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கும் நடவடிக்கையை தடுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று விலங்கு நல ஆர்வலர்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து விலங்கு நல ஆர்வலர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய விலங்கு நல ஆர்வலரும் பாஜக முன்னாள் எம்.பி.யுமான மேனகா காந்தி, "டெல்லியில் லட்சக்கணக்கான தெரு நாய்கள் உள்ளன. அனைத்து வசதிகளுடன் காப்பகம் உருவாக்க ரூ.15,000 கோடி தேவைப்படும். அதற்கு சாப்பாடு போட வாரம் ரூ.5 கோடி வேண்டும். இது சாத்தியமா?. நாய் கடித்து சிறுமி உயிரிழந்ததாக ஏதோ ஒரு போலிச் செய்தியை வைத்து, உச்ச நீதிமன்றம் கோபத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளது. தெருவில் இருந்து நாய்களை எல்லாம் அகற்றி விட்டால், அடுத்து குரங்குகள் வரும். அப்போது என்ன செய்வீர்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம், சுல்தான்பூர் மக்களவைத் தொகுதியில் மேனகா காந்தி போட்டியிடுகிறார். கடந்த 14-ம் தேதி சுல்தான்பூர் தொகுதியில் உள்ள சர்கோதா கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்ட மேனகா காந்தி, தனக்கு கிடைக்கும் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் ஏ.பி.சி.டி., என வாக்காளர்கள் வகைப்படுத்தப்பட்டு, அதற்கேற்றார் போல் வளர்ச்சிப் பணிகள் நடைபெறும் என்று பேசியிருந்தார்.

மேனகா காந்தி கடந்த 11-ம் தேதி தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் பேசியிருந்தார். அதனால், பொதுக் கூட்டம், பேரணி, பேட்டி போன்ற செயல்களில் ஈடுபட தேர்தல் ஆணையம் அவருக்கு கடந்த 15-ம் தேதி 48 மணி நேரம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. #ManekaGandhi #ElectionCommission
சுல்தான்பூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் மத்திய மந்திரி மேனகா காந்தி பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தேர்தலுக்கு பின்னர் திட்டங்கள் கிடைக்கவேண்டும் என்றால் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரசாரத்தின் போது மேனகா காந்தி கூறியதாக புகார் கூறப்பட்டது. அதன் பேரில் அவருக்கு தேர்தல் கமிஷன் தடைவிதித்து இருக்கிறது.
ராம்பூர் தொகுதி சமாஜ்வாடி வேட்பாளர் அசம்கான் தன்னை எதிர்த்து பா.ஜனதா சார்பில் போட்டியிடும் ஜெயப்பிரதாவின் பெயரை குறிப்பிடாமல், அவரது உள்ளாடை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் கூறப்பட்டது. இதனால் அவர் பிரசாரம் செய்ய 72 மணி நேரம் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, தான் பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை விதித்து இருப்பதற்கு மாயாவதி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். “இந்தியா ஜனநாயக நாடு என்றும், இதுபோன்று தடை விதிப்பது ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயல் என்றும்” அவர் கூறி இருக்கிறார். #LokSabhaElections2019 #ManekaGandhi
மத்திய மந்திரி மேனகா காந்தி உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதி எம்.பி.யாக உள்ளார்.
அவர் 1996, 1998, 1999, 2004, 2014 தேர்தல்களில் அந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.
தற்போது நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் மேனகா காந்தி தொகுதி மாறுகிறார். அவர் தனது மகனுக்கு பிலிபிட் தொகுதியை விட்டுக் கொடுக்கிறார்.
வருண்காந்தி கடந்த தேர்தலில உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியை ஒட்டி சுல்தான்பூர் இருக்கிறது. அங்கு வலுவான காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் வருண்காந்தி தோல்வியை சந்திக்க நேரிடும் என்று மேனகா காந்தி அச்சப்படுகிறார்.

மேனகா காந்தியின் இந்த வேண்டுகோளை பா.ஜனதா மேலிடம் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. வருண் காந்தி ஏற்கனவே 2009 தேர்தலில் பிலிபிட் தொகுதியில் போட்டியிட்டு 50.09 சதவீத வாக்குகள் பெற்று இருக்கிறார். இதனால் அவருக்கு கட்சி மேலிடம் அந்த தொகுதியை ஒதுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் மேனகா காந்தி அரியானா மாநிலம் கர்ணல் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
2014 தேர்தலில் இந்த தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் அஸ்வினி குமார் சோப்ரா வெற்றி பெற்று இருக்கிறார். #VarunGandhi #ManekaGandhi

தேசிய பெண் குழந்தைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கும் விழா, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் டெல்லியில் நடைபெற்றது.
இதில் மத்திய அரசின் திட்டமான ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்‘ என்ற திட்டத்தை இந்திய அளவில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட்டது. இதேபோல், மக்கள் மத்தியில் இந்த திட்டத்தை சிறப்பாக எடுத்துச் சென்றதில் முதலிடம் பெற்ற திருவண்ணாமலை மாவட்டத்துக்கும் விருது வழங்கப்பட்டது.
விருதுகளை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி வழங்கினார். அவரிடம் இருந்து தமிழக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை முதன்மை செயலாளர் மணிவாசன், திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி ஆகியோர் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில், குழந்தை பருவத்தில் தனக்கு நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியவரும், தமிழக அரசின் விருது பெற்ற குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வாளருமான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி நந்தினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
மேலும் சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி, திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி கிறிஸ்டினா டி.டார்த்தி ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய தடை உள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பல வழக்குகள் ஒன்றாக்கப்பட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப் நாரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய அமர்வு, சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு இருந்த தடையை தகர்த்து உத்தரவிட்டுள்ளது. மேலும், ‘பெண்களை தெய்வமாக வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானர்கள் அல்ல. இந்த தடை இந்து பெண்களின் உரிமைக்கு எதிரானது’ எனவும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த தீர்ப்பை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி வரவேற்றுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மேனகா காந்தி, ஒரு குறிப்பிட்ட பாலினம் அல்லது சமூகத்துக்கு மட்டுமே இந்து மதம் என்ற தடை அகற்றப்பட்டு, இந்துத்துவம் ஒரு ஜாதிக்கானது அல்ல என்பதை சபரிமலை தீர்ப்பு நிரூபித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

நீதித்துறைக்கும், உச்சநீதிமன்றத்துக்கும், சட்டவிதிகளை இயற்றிய அம்பேத்கருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ள ஜெயமாலா, தற்போதுதான் பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நாட்டின் பல்வேறு அமைப்புகளும், தலைவர்களும் வரவேற்று வரும் நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவில் தலைமை அர்ச்சகர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக கூறியுள்ளார். #Sabarimala #SabrimalaVerdict #SupremeCourt #ManekaGandhi
சிறைச்சாலைகளில் குழந்தை பெற்றெடுக்கும் தாய்கள் அல்லது குழந்தை உள்ள பெண்களை சிறையில் அடைக்கும் போது ஐந்து வயது வரை குழந்தைகளை அவர்கள் சிறைக்குள் வைத்திருக்க முடியும். ஐந்து வயதை தாண்டிய குழந்தைகள் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு குழந்தைகள் நல காப்பகங்களில் சேர்த்து விடப்படுவர்.
அவ்வாறு காப்பகங்களில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கும், சிறை நிர்வாகத்துக்கும் இடையே தொடர்பு துண்டிக்கப்படு விடுகிறது. இதன் காரணமாக, சிறை தண்டனை முடிந்து வெளியே வரும் தாயும், குழந்தையும் மீண்டும் ஒன்று சேர முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது.
தாயை பிரிந்த குழந்தைகள் தவறான பாதையை நோக்கி செல்வது அதிகரித்துள்ளது. இது தவிர சில பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்படும் அவலமும் நடைபெறுகிறது.
இதற்கெல்லாம் காரணம், சிறையில் உள்ள தாய்க்கும் குழந்தைகும் இடையே தொடர்பு இல்லாமை என சில தரவுகளின் அடிப்படையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
எனவே இதுபோன்ற செயல்களை தவிற்கும் பொருட்டு, காப்பகத்தில் உள்ள குழந்தைகள் வாரம் மூன்று முறை சிறையில் உள்ள அவர்களின் தாயை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி பரிந்துரை செய்துள்ளார். #ManekaGandhi
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி, நாடாளுமன்ற மக்களவையில், ஆள் கடத்தல் தடுப்பு மசோதா பற்றிய விவாதத்துக்கு பதில் அளித்து பேசினார். அப்போது, திருநங்கையரை பற்றி ‘மற்றொருவர்’ என்று குறிப்பிட்டார். அதற்கு எம்.பி.க்களிடையே சிரிப்பொலி எழுந்தது.
‘மற்றொருவர்’ என்று குறிப்பிட்டதற்காக, மேனகா காந்திக்கு திருநங்கைகள் தரப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. மேஜையை தட்டியபடி சிரித்த மேனகா காந்தியும், எம்.பி.க்களும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
இந்நிலையில், மேனகா காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “மற்றொருவர் என்று குறிப்பிட்டதற்காக மன்னிப்பு கோருகிறேன். நான் சிரிக்கவில்லை. திருநங்கைகள் பற்றிய அதிகாரபூர்வ சொல் எனக்கு தெரியாது. அதுவே எனக்கு தர்மசங்கடத்தை உண்டாக்கி விட்டது. இனிமேல், அதிகாரபூர்வ தகவல் தொடர்பில், திருநங்கையர் ‘டி.ஜி.’ என்று குறிப்பிடப்படுவார்கள்” என்று கூறியுள்ளார். #ManekaGandhi #OtherOnes #Transgender #Tamilnews






