search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "triple talaq"

    உத்தரபிரதேச மாநிலத்தில் மனைவி 10 நிமிடம் காலதாமதமாக வீட்டிற்கு வந்ததால் மூன்று முறை தலாக் சொல்லி கணவர் விவாகரத்து செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. #UPtripletalaq
    எட்டா:

    முஸ்லிம் சமுதாயத்தில், மூன்று முறை ‘தலாக்’ என்று கூறி, ஆண்கள் தங்கள் மனைவியை விவகாரத்து செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இந்த முத்தலாக் நடைமுறை, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, முத்தலாக் சட்ட மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா, மக்களவையில் கடந்த டிசம்பர் மாதம் 27-ம் தேதி நிறைவேறியது. மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள எட்டா மாவட்டத்தில், செல்போன் மூலம் மூன்று முறை தலாக் கூறி கணவர் மனைவியை விவாகரத்து செய்துள்ளார். இதற்கான காரணம் குறித்து அந்தப் பெண் கூறியதாவது:

    நான் ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண். எனது அம்மாவின் வீட்டிற்கு, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பாட்டியை காண சென்றேன். எனது கணவர் அரை மணி நேரத்திற்குள் பார்த்துவிட்டு திரும்பிவிட வேண்டும் என கூறினார். அங்கிருந்து வர 10 நிமிடம் காலதாமதம் ஆனது. இதனால் எனது அண்ணனுக்கு போன் செய்து என்னிடம் மூன்று முறை தலாக் என கூறினார். இதை கேட்டவுடன் மனமுடைந்தேன்.



    மேலும் திருமணத்தின்போது வரதட்சணை கேட்டு என்னை துன்புறுத்தியுள்ளார். ஏழ்மையின் காரணமாக கணவர் வீட்டார் கேட்ட எதையும் தர இயலவில்லை. இதனிடையே கரு கலைப்பும் செய்துள்ளேன். அரசு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனக்கான நியாயம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அலிகஞ்ச் பகுதி அதிகாரி அஜய் பாதுரியா உறுதி அளித்தார்.  #UPtripletalaq
    நாடாளுமன்ற மாநிலங்களவையில் முத்தலாக் சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது. அதை தோற்கடிக்க காங்கிரஸ் தீவிரமாக உள்ளது.#TripleTalaq #RajyaSabha
    புதுடெல்லி:

    இஸ்லாமியர்களிடையே நிலவும் ‘உடனடி முத்தலாக்’ மூலம் விவாகரத்து செய்யும் முறையை கிரிமினல் குற்றமாக கருதும் மசோதா, கடந்த 17-ந் தேதி, நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதா, சில எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்கிடையே, கடந்த 27-ந் தேதி நிறைவேற்றப்பட்டது.

    மாநிலங்களவையிலும் நிறைவேறினால்தான், மசோதா சட்ட வடிவம் பெறும். எனவே, முத்தலாக் தடை மசோதாவை, மாநிலங்களவையில் இன்று மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்கிறார்.

    மாநிலங்களவையில், ஆளும் பா.ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை. 245 உறுப்பினர்களை கொண்ட சபையில், பெரும்பான்மைக்கு 123 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், பா.ஜனதா கூட்டணிக்கு 93 உறுப்பினர்கள்தான் இருப்பதாக தெரிகிறது. எனவே, எந்த அணியையும் சேராத கட்சி உறுப்பினர்களின் ஆதரவை எதிர்பார்த்து மத்திய அரசு நம்பிக்கையுடன் உள்ளது.

    மாநிலங்களவையில் மசோதாவுக்கு ஆதரவு கிடைக்கும் என்று மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் நம்பிக்கை தெரிவித்தார். சபையில் இன்று தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று பா.ஜனதா உறுப்பினர்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    ஆனால், மாநிலங்களவையில் மசோதாவை தோற்கடிப்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக உள்ளது. இதுபற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், “மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவை தோற்கடிப்பதில் மற்ற கட்சிகளுடன் கைகோர்த்து செயல்படுவோம். மக்களவையில் 10 கட்சிகள் இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. அரசுக்கு ஆதரவான அ.தி.மு.க. போன்ற கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே, தற்போதைய வடிவத்தில் மசோதாவை நிறைவேற்ற விட மாட்டோம்” என்றார்.

    முத்தலாக் மசோதாவை நாடாளுமன்ற கூட்டு தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. காங்கிரஸ் உறுப்பினர்கள் தவறாமல் சபைக்கு வருமாறு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே, முத்தலாக் மசோதாவுக்கு அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனிநபர் சட்ட வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன் தலைவி சாயிஸ்டா அம்பர் கூறியதாவது:-

    முத்தலாக் சட்டம், குரான் சொன்னபடி உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும். அதில், உடன்பாட்டுக்கான வாய்ப்பு இருக்க வேண்டும். பெண்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு பதிலாக, ஆண்களை தண்டிப்பதற்கே முக்கியத்துவம் அளித்தால், நாங்கள் போராட்டம் நடத்துவோம். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், குடும்பங்கள் அழிந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அமெரிக்காவில் இருந்து வாட்ஸ்அப் மெசேஜ் மூலம் மனைவிக்கு முத்தலாக் கொடுத்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மகளிர், குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி தெரிவித்தார். #ManekaGandhi #TripleTalaq
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, மக்களவையில் முத்தலாக் மசோதா வாக்கெடுப்பின் மூலம் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது.

    இதற்கிடையே, பெங்களூரை சேர்ந்த முஸ்லிம் பெண்மணி, வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் தனது கணவர் மீது புகார் கொடுத்துள்ளார்.

    அந்த புகாரில், அமெரிக்காவில் வசிக்கும் எனது கணவர் வாட்ஸ் அப் மெசேஜ் மூலம் முத்தலாக் கொடுத்துள்ளார். எனவே வெளியுறவுத்துறை  அமைச்சகம் இதில் தலையிட்டு அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த விஷயத்தில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தலையிட வேண்டும் என கோரியுள்ளார்.



    இந்நிலையில், மத்திய மகளிர், குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி, கணவனால் பாதிக்கப்பட்ட பெங்களூர் பெண்ணுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் தெரிவிக்கப்பட்டுள்ள முதல் புகார் இதுவாகும். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்றும், புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். #ManekaGandhi #TripleTalaq
    மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் சட்ட மசோதா நாளை விவாதத்திற்கு வர உள்ளதால் பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் ஆஜராகுமாறு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார். #tripletalaq #tripletalaqBill
    புதுடெல்லி:

    முஸ்லிம் மதத்தினரிடையே மனைவியை கணவர் திடீரென்று விவாகரத்து செய்யும் முத்தலாக் முறையை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் முத்தலாக் சட்ட மசோதாவை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 

    ஆனால், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் பாஜக அரசுக்கு இல்லை. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் அங்கு முடங்கிவிட்டது.

    எனவே, அவசர சட்டம் மூலம் இந்த மசோதாவுக்கு உயிரூட்டும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது. இதற்காக சில திருத்தங்கள் செய்யப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுடன் கடந்த 19-9-2018 அன்று அவசர சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால், ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட எந்தவொரு அவசர சட்டமும் ஆறுமாத காலத்துக்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெற்று சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டும். 

    எனவே, தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத் தொடரில் முத்தலாக் சட்ட மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக மக்களவையில் கடந்த வாரம் திங்கட்கிழமை முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது நாளை (27-ம் தேதி) விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில், பா.ஜ.க.வை சேர்ந்த எம்.பி.க்கள் அனைவரும் நாளை பாராளுமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என அக்கட்சியின் பாராளுமன்ற ‘கொறடா’ நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார். 

    இதைத்தொடர்ந்து, நாளை பாராளுமன்றத்தில் வெடிக்கப்போகும் சர்ச்சை என்னவாக இருக்கும்? என அரசியல் நோக்கர்கள் புருவங்களை உயர்த்தியவாறு, பரபரப்படைந்தனர். சில திருத்தங்களுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள முத்தலாக் மசோதாவின்மீது காரசாரமான விவாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்த முறையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை என்றால் இந்த அவசர சட்டத்தை மேலும் 6 மாதகாலம் நீட்டிக்குமாறு ஜனாதிபதியை மத்திய அரசு வலியுறுத்தவும் வாய்ப்புள்ளது, குறிப்பிடத்தக்கது. #tripletalaq  #tripletalaqBill #tripletalaqordinance #LokSabha
    முத்தலாக்கிற்கு இந்தியாவில் இடமில்லை என்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார். #PMModi #AmitShah #tripletalaq
    போபால் :

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் சட்டப்பேரவை ஆயுட்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவடைவதை தொடர்ந்து அம்மாநிலத்திற்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதனால், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஆளும் பாரதிய ஜனதா கட்சியும், 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் கட்சியும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் சாட்னா தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றிய பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் அமித் ஷா கூறியதாவது:-

    இஸ்லாமிய சகோதரிகளின் நலனில் காங்கிரஸ் கட்சி ஆர்வம் காட்டவில்லை. முத்தலாக் போன்ற விவகாரங்களை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு தைரியம் கிடையாது. பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னுரிமையை பற்றி பேசுவதோடு மட்டும் இல்லாமல் அவர்களுக்கான நலத்திட்டங்களையும் பாஜக செய்து வருகிறது.  

    மத்திய அமைச்சரவையில் சுஷ்மா சுவராஜ் , நிர்மலா சீதாராமன் என உயரிய பொறுப்புகளில் பெண்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சரவையில் மட்டும் 9 பெண் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். #PMModi #AmitShah #triple talaq         
    உடனடி முத்தலாக் முறையை சட்டவிரோதமாக அறிவிக்கும் மத்திய அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. #TripleTalaqBill #TripleTalaqOrdinace #SupremeCourt
    புதுடெல்லி:

    இஸ்லாமியர்களின் திருமண முறிவு முறையான முத்தலாக் நவீன காலங்களில் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. செல்போன்களிலும், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப் போன்றவற்றிலும் முத்தலாக் கூறி கணவன் மனைவியை விவாகரத்து செய்து வருகின்றனர்.

    இதனை தடுக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான சட்ட மசோதா கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் நிறைவேற்ற கடும் முயற்சி மேற்கொண்டும் முடியாமல் போனதால் அவசர சட்டம் மூலம் உடனடி முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்து அதற்கான ஒப்புதலை பெற்றது.



    இந்நிலையில், இந்த புதிய சட்டத்தை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த சமஸ்தா கேரளா ஜமிய்யத் உல் உலமா என்ற இஸ்லாமிய அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

    முன்னதாக, மும்பையைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் மசூத் அன்சாரி உள்ளிட்ட 3 பேர் இணைந்து மும்பை உயர்நீதிமன்றத்தில் முத்தலாக் தடை சட்டத்தை எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. #TripleTalaqBill #TripleTalaqOrdinace #SupremeCourt
    உடனடி முத்தலாக் முறையை சட்டவிரோதமாக அறிவிக்கும் மத்திய அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #TripleTalaqBill #TripleTalaqOrdinace #MumbaiHC
    மும்பை:

    இஸ்லாமியர்களின் திருமண முறிவு முறையான முத்தலாக் நவீன காலங்களில் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. செல்போன்களிலும், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப் போன்றவற்றிலும் முத்தலாக் கூறி கணவன் மனைவியை விவாகரத்து செய்து வருகின்றனர்.

    இதனை தடுக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான சட்ட மசோதா கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் நிறைவேற்ற கடும் முயற்சி மேற்கொண்டும் முடியாமல் போனதால் அவசர சட்டம் மூலம் உடனடி முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்து அதற்கான ஒப்புதலை பெற்றது.

    இந்நிலையில், இந்த புதிய சட்டத்தை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் கவுன்சிலர் மசூத் அன்சாரி, அரசு சாரா அமைப்பான ரைசிங் வாய்ஸ் பவுண்டேசன் மற்றும் ஒரு வழக்கறிஞர் இணைந்து இந்த மனுவை அளித்துள்ளனர்.

    இந்த மனுவில், இஸ்லாமிய ஆண்களின் அடிப்படை உரிமைகள் இந்த சட்டத்தின் மூலம் மறுக்கப்படுவதால் உடனடி முத்தலாக் தடை சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த மனு வருகிற 28-ம் தேதி மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #TripleTalaqBill #TripleTalaqOrdinace #MumbaiHC
    முத்தலாக் பிரச்சனைக்கு அவசர சட்டம் கொண்டு வந்தது போல ராமர் கோவில் கட்டவும் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என மத்திய பாஜக அரசுக்கு சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது. #BJP #ShivSena
    மும்பை:

    முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவியை உடனடியாக விவாகரத்து செய்ய வகை செய்யும் முத்தலாக் நடைமுறைக்கு எதிரான அவசர சட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்தது. இவ்விவகாரத்தை குறிப்பிட்டு சிவசேனா, முத்தலாக் விவகாரத்தை போல ராமர் கோவிலை கட்டவும் அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

    சிவசேனா அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில், முஸ்லிம் பெண்கள் சுதந்திரமாக வாழ மத்திய அரசு வழிவகை செய்துள்ளது. இதற்காக முத்தலாக் நடைமுறைக்கு எதிராக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் திருமணமான முஸ்லிம் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளது. இதை சிவசேனா வரவேற்கிறது. ஆனால், மத்திய அரசு இந்த ஒரு நடவடிக்கையுடன் நின்று விடக்கூடாது. இதே வேகத்தை அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதிலும் காட்ட வேண்டும். இதற்காகவும் அவசர சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். 

    என குறிப்பிடப்பட்டுள்ளது. 
    பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் அமல்படுத்தப்பட்ட முத்தலாக் அவசர சட்ட மசோத இஸ்லாமிய பெண்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது என்று ராமதாஸ் கூறியுள்ளார். #TripleTalaq #TripleTalaqOrdinance
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இஸ்லாமியப் பெண்களின் திருமண உறவை பாதுகாப்பதற்காக முத்தலாக் முறையை தடை செய்யும் அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்திருக்கிறது. ஆனால், இஸ்லாமியப் பெண்களின் கண்ணியம் மற்றும் கவுரவத்தைப் பாதுகாக்க மத்திய அரசின் அவசரச் சட்டம் எந்த வகையிலும் பயனளிக்காது.

    உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக செயல்படுத்துவதற்கு ஏற்ற கருவி அல்ல. இது இஸ்லாமியப் பெண்களுக்கு எதிரானதாகவே அமையும்.


    மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்தின்படி முத்தலாக் கூறி இஸ்லாமியப் பெண்களுடனான திருமண உறவை முறித்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றமாக மாற்றப்பட்டுள்ளது. இது பிணையில் வெளிவரக்கூடிய குற்றம் தான் என்றாலும் கூட, காவல் நிலையத்தில் பிணை பெற முடியாது; நடுவர் நீதிமன்றத்திற்கு சென்று தான் பிணை பெற முடியும் என்று சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது.

    இந்த அம்சங்கள் இஸ்லாமிய இணையரிடையே இணக்கத்தை ஏற்படுத்துவதற்கு மாறாக பிணக்கை பெருக்கி விடும். அவ்வாறு பிணக்கு ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் கிடைக்க வழியின்றி போய்விடும். அத்தகைய சூழலில் இஸ்லாமியப் பெண்களின் கண்ணியத்தை எவ்வாறு காக்க முடியும்?

    இப்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர சட்டத்தை ரத்து செய்துவிட்டு, இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்துடன் ஆலோசனை நடத்தி புதிய சட்ட முன் வரைவை உருவாக்கி நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முத்தலாக் என்ற பெயரில் முஸ்லிம் பெண்கள் மீது தனக்கு கரிசனம் உள்ளது என்ற கயமை நாடகம் ஆடி, நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அவசரக் கோலத்தில் மக்களவையில் இச்சட்டத்தை நிறைவேற்றி தற்போது அதற்கு அமைச்சரவை மூலம் ஒப்புதல் பெற்றுள்ளது.

    உரிமையியல் தொடர்பான பிரச்சினையைக் குற்றவியல் சட்டமாக மாற்றும் இந்த அவசர சட்டம் முஸ்லிம்களை பழிவாங்குவதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது.

    அதிக அளவில் முஸ்லிம்களை சிறையில் அடைக்க வேண்டும் என்ற பா.ஜ.க.வின் எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் இச்சட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தலையீடு நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் தரப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு நேர் எதிரானதாகவும் அமைந்துள்ளது.

    எனவே, மத்திய அரசு சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு எதிராகக் கொண்டு வந்துள்ள இந்தச் சட்டத்தை உடனே திரும்பப் பெறவேண்டும் எனவும், இல்லையேல் இந்த அவரச சட்டம் ரத்து செய்யப்படும் வரை ஜனநாயக சக்திகளுடன் இணைந்து மக்களைத் திரட்டி தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சி போராடும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #TripleTalaq #TripleTalaqOrdinance #Ramadoss
    பாராளுமன்ற மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவை ஓட்டுவங்கி அரசியலுக்காக காங்கிரஸ் முடக்கியதாக மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர பிரசாத் இன்று குறிப்பிட்டுள்ளார். #TripleTalaqBill #TripleTalaq #votebankpolitics #RaviShankarPrasad
    புதுடெல்லி:

    முத்தலாக் முறைய தண்டனைக்குரிய குற்றமாக கருதும் அவசர சட்டத்திற்கு மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்ட மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    முத்தலாக் முறையை உலகில் உள்ள 22 நாடுகள் ஒழுங்குப்படுத்தி, திருத்தியுள்ளன. ஆனால், இந்த பாலின சமத்துவத்தை இந்தியாவில் உள்ளவர்கள் ஓட்டுவங்கி அரசியலுக்காக கடைபிடிக்க மறுக்கின்றனர்.  காங்கிரஸ் கட்சியின் மரியாதைக்குரிய பெண் தலைவராக இருந்த சோனியா காந்தி காட்டுமிராண்டித்தனமான, மனிதாபிமானமற்ற முத்தலாக் ஒழிப்புக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டார்.

    முத்தலாக் ஒழிப்பு மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற ஓட்டுவங்கி அரசியலுக்காகவே  காங்கிரஸ் ஒத்துழைக்க மறுத்து விட்டது. சோனியா காந்தி, மாயாவதி, மம்த பானர்ஜி ஆகியோர் பாலின சமூகநீதிக்காக இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுகொள்கின்றேன்.
      

    முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யும் முறை தொடர்ந்து பெருகி வருவதால் இதை தடுப்பதற்காக அவசர சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.

    தற்போது இயற்றப்பட்டுள்ள அவசர சட்டத்தில் பாதிக்கப்பட்ட மனைவியோ, அவரது மிக நெருங்கிய உறவினர்களோ காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும், பாதிக்கப்பட்ட அல்லது விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கு அவரது குழந்தையை வளர்க்கும் உரிமையும், உள்ளூர் மாஜிஸ்திரேட்டின் உத்தரவுப்படி தனக்கும் தனது குழந்தைக்கும் ஜீவனாம்சம் பெறும் உரிமையையும் இந்த அவசர சட்டம் பெற்றுதரும். #TripleTalaqBill #TripleTalaq #votebankpolitics #RaviShankarPrasad  
    உத்திரப்பிரதேச மாநிலத்தில் ரொட்டியை தீய்த்து தந்ததாக மனைவியை முத்தலாக் கூறி விவாகரத்து செய்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. #tripletalaq
    லக்னோ :

    உத்திரப்பிரதேசம் மாநிலம், மஹோபா மாவட்டத்தில் உள்ள பக்ரேதா எனும் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர், ரொட்டியை தீய்த்து தந்ததற்காக முத்தலாக் கூறி தனது கணவர் விவாகரத்து செய்து விட்டதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

    மேலும், முத்தலாக் கூறியதால் வீட்டை விட்டு வெளியே செல்ல வற்புறுத்தி, சிகரெட்டை கொண்டு உடலில் சூடு வைத்து துன்புறுத்தியதாகவும் புகார் மனுவின் அப்பெண் குறிப்பிட்டுள்ளார். இவ்விகாரம் தொடர்பாக அந்நபரின் மீது குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவில் முத்தலாக் முறை மூலம் மனைவியரை விவாகரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்த நிலையிலும் இதுபோல் சில்லரை பிரச்சனைகளுக்கு மனைவியை விவாகரத்து செய்யும் பழக்கம் இன்னும் தொரடந்து கொண்டு தான் இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாகும். #tripletalaq
    ×