search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bengaluru woman"

    ஆண்மை குறைபாடு சிகிச்சைக்கு பணம் கொடுக்க மறுத்ததால் பெண்ணின் ஆபாச வீடியோவை, கணவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து முகநூலில் பதிவிட்டுள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெங்களூரு:

    பெங்களூரு பி.டி.எம். லே-அவுட்டில் வசித்து வருபவர் பிரஜா(வயது 32, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் 26 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் பிரஜாவுக்கு ஆண்மை குறைபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த அவருடைய மனைவி தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக கூறி கணவர் பிரஜா மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. மாறாக பிரஜாவின் சகோதரர் மற்றும் நண்பருடன் உடலுறவில் ஈடுபடும்படி அவர்கள் அந்த பெண்ணிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. இதற்கு அந்த பெண் மறுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் கோபமடைந்த பிரஜா மற்றும் அவருடைய குடும்பத்தினர் உணவில் மயக்க மருந்து கலந்து அந்த பெண்ணுக்கு கொடுத்தனர். அதை சாப்பிட்ட அந்த பெண் மயங்கினார். இந்த வேளையில் அவர்கள் இளம்பெண்ணை ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

    இதன் தொடர்ச்சியாக பிரஜாவின் ஆண்மை குறைபாட்டை சரிசெய்வதற்கான சிகிச்சைக்கு தந்தையிடம் இருந்து பணம் வாங்கி வரும்படி கூறி அவர்கள் அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்தனர். இதனால் மனம் உடைந்த அந்த பெண் தனது தாய் வீட்டுக்கு வந்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த பிரஜா மற்றும் அவருடைய குடும்பத்தினர் அந்த பெண்ணின் முகநூல்(பேஸ்புக்) பக்கத்தை முடக்கி, ஆபாச வீடியோ, படங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். அத்துடன் அந்த பெண் விபசார தொழிலில் இருப்பதாக கூறி முகநூல் வழியாக பிறருக்கு அவர்கள் குறுஞ்செய்தி அனுப்பியதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்து மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான அந்த பெண் சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்டமாக முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆபாச வீடியோ, படங்களை அழிக்கும் முயற்சியில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    அமெரிக்காவில் இருந்து வாட்ஸ்அப் மெசேஜ் மூலம் மனைவிக்கு முத்தலாக் கொடுத்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மகளிர், குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி தெரிவித்தார். #ManekaGandhi #TripleTalaq
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, மக்களவையில் முத்தலாக் மசோதா வாக்கெடுப்பின் மூலம் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது.

    இதற்கிடையே, பெங்களூரை சேர்ந்த முஸ்லிம் பெண்மணி, வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் தனது கணவர் மீது புகார் கொடுத்துள்ளார்.

    அந்த புகாரில், அமெரிக்காவில் வசிக்கும் எனது கணவர் வாட்ஸ் அப் மெசேஜ் மூலம் முத்தலாக் கொடுத்துள்ளார். எனவே வெளியுறவுத்துறை  அமைச்சகம் இதில் தலையிட்டு அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த விஷயத்தில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தலையிட வேண்டும் என கோரியுள்ளார்.



    இந்நிலையில், மத்திய மகளிர், குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி, கணவனால் பாதிக்கப்பட்ட பெங்களூர் பெண்ணுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் தெரிவிக்கப்பட்டுள்ள முதல் புகார் இதுவாகும். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்றும், புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். #ManekaGandhi #TripleTalaq
    ×