என் மலர்
செய்திகள்

உடனடி முத்தலாக் தடை சட்டத்தை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
உடனடி முத்தலாக் முறையை சட்டவிரோதமாக அறிவிக்கும் மத்திய அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #TripleTalaqBill #TripleTalaqOrdinace #MumbaiHC
மும்பை:
இஸ்லாமியர்களின் திருமண முறிவு முறையான முத்தலாக் நவீன காலங்களில் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. செல்போன்களிலும், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப் போன்றவற்றிலும் முத்தலாக் கூறி கணவன் மனைவியை விவாகரத்து செய்து வருகின்றனர்.
இதனை தடுக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான சட்ட மசோதா கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் நிறைவேற்ற கடும் முயற்சி மேற்கொண்டும் முடியாமல் போனதால் அவசர சட்டம் மூலம் உடனடி முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்து அதற்கான ஒப்புதலை பெற்றது.
இந்நிலையில், இந்த புதிய சட்டத்தை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் கவுன்சிலர் மசூத் அன்சாரி, அரசு சாரா அமைப்பான ரைசிங் வாய்ஸ் பவுண்டேசன் மற்றும் ஒரு வழக்கறிஞர் இணைந்து இந்த மனுவை அளித்துள்ளனர்.
இந்த மனுவில், இஸ்லாமிய ஆண்களின் அடிப்படை உரிமைகள் இந்த சட்டத்தின் மூலம் மறுக்கப்படுவதால் உடனடி முத்தலாக் தடை சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனு வருகிற 28-ம் தேதி மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #TripleTalaqBill #TripleTalaqOrdinace #MumbaiHC
இஸ்லாமியர்களின் திருமண முறிவு முறையான முத்தலாக் நவீன காலங்களில் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. செல்போன்களிலும், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப் போன்றவற்றிலும் முத்தலாக் கூறி கணவன் மனைவியை விவாகரத்து செய்து வருகின்றனர்.
இதனை தடுக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான சட்ட மசோதா கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் நிறைவேற்ற கடும் முயற்சி மேற்கொண்டும் முடியாமல் போனதால் அவசர சட்டம் மூலம் உடனடி முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்து அதற்கான ஒப்புதலை பெற்றது.
இந்நிலையில், இந்த புதிய சட்டத்தை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் கவுன்சிலர் மசூத் அன்சாரி, அரசு சாரா அமைப்பான ரைசிங் வாய்ஸ் பவுண்டேசன் மற்றும் ஒரு வழக்கறிஞர் இணைந்து இந்த மனுவை அளித்துள்ளனர்.
இந்த மனுவில், இஸ்லாமிய ஆண்களின் அடிப்படை உரிமைகள் இந்த சட்டத்தின் மூலம் மறுக்கப்படுவதால் உடனடி முத்தலாக் தடை சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனு வருகிற 28-ம் தேதி மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #TripleTalaqBill #TripleTalaqOrdinace #MumbaiHC
Next Story






