search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "commit suicide"

    • ஒரு மாதமாக அரவிந்தசாமி வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
    • கணவன் மனைவி இருவரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஓரைக்கால்பாளையத்தை சேர்ந்தவர் அரவிந்தசாமி (வயது 28). இவரது மனைவி சந்தியா (25). 2 பேரும் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஓரைக்கால்பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர். ஒரு மாதமாக அரவிந்தசாமி வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று சந்தியா தனது கணவரை மாதம்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று வரலாம் என அழைத்தார். அதற்கு அரவிந்தசாமி தற்போது கையில் பணம் இல்லை. எனவே பிறகு போகலாம் என கூறினார்.

    அப்போது சந்தியா தனது கணவரிடம் இப்போதே வரவில்லை என்றால் நான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என கணவரை மிரட்டினார். உடனடியாக அரவிந்தசாமி நீ மட்டும் தான் விஷம் குடிப்பாயா, நானும் குடிக்கிறேன் என கூறி அங்கு இருந்த விஷத்தை எடுத்து குடித்தார். இதனை பார்த்த சந்தியா தனது கணவரிடம் இருந்து விஷத்தை வாங்கி அவரும் குடித்தார்.

    சிறிது நேரத்தில் 2 பேரும் மயங்கினர். கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்து மயங்கி கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அரவிந்தசாமி, சந்தியா ஆகியோரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஈஸ்வரி சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கினார்.
    • வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை,

    கோவை போத்தனூர் அருகே உள்ள நஞ்சுண்டா புரத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி ஈஸ்வரி (வயது65). சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இவர் அரளி விதையை அரைத்து குடித்தார்.

    சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கினார். இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக ஈஸ்வரியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சின்னியம்பாளையம் அருகே உள்ள கமலா நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (27) திருமணமாகவில்லை. சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட ஜெயக்குமாரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடனை திருப்பி செலுத்த முடியாததால் விரக்தி
    • பணத்தை வேகமாக திருப்பி செலுத்துமாறு அறிவுரை கூறினார்.

    கோவை :

    பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் ரோடு நடராஜ் மணியகாரர் காலனியை சேர்ந்தவர் அய்யப்பா (வயது 23). சுமை தூக்கும் தொழிலாளி.

    இவருக்கும் கமலி (20) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமண செலவுக்காக அய்யப்பா அருகில் உள்ளவர்களிடம் ரூ.28 ஆயிரம் வாங்கி உள்ளார்.அதனை அவரால் சரியான நேரத்தில் திருப்பி செலுத்த முடியவில்லை என தெரிகிறது.

    இது அவரது தாயாருக்கு தெரியவந்தது.

    உடனே அவர் அய்ப்பாவிடம் பணத்தை வேகமாக திருப்பி செலுத்துமாறு அறிவுரை கூறினார்.இதனால் அய்யப்பா கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு கொண்டார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் அங்கு வந்தார்.

    அவர் அய்யப்பா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அய்யப்பாவை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.இதையடுத்து பொள்ளாச்சி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

    .இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    ஒடிசாவில் திருமணம் செய்து கொண்ட இரண்டு இளம்பெண்கள் தங்களை பிரிக்க முயன்றால் ஒன்றாக தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.
    கட்டாக்:

    ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சபித்ரி பரிடா (வயது 27), மோனலிசா நாயக் (28) ஆகிய 2 பெண்கள் வேலைபார்த்து வந்தனர். கல்லூரி படிக்கும் போதே தோழிகளாக இருந்த இவர்கள் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்தனர். இணைபிரியா தோழிகளான இருவரும் கட்டாக்கில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

    பின்னர், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டே ஓரினச்சேர்க்கை தவறில்லை என்று தீர்ப்பளித்து உள்ளது. இதையடுத்து சபித்ரியும், மோனலிசாவும் அரசு வக்கீல் முன்னிலையில் பதிவுத்திருமணம் செய்து கொண்டனர்.

    இதை அவர்களின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எங்களை பிரிக்க முயன்றால் ஒன்றாக தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். 
    விஷம் குடிப்பதை முகநூலில் நேரலையாக பதிவேற்றிய பெண் சமூக ஆர்வலரை, நண்பர்கள் துரிதமாக செயல்பட்டு போலீசார் உதவியுடன் மீட்டனர். #Maharashtra #CommitSuicide #Live #SocialMedia
    மும்பை:

    மராட்டிய மாநிலம் லாத்தூர் பகுதியை சேர்ந்த விருசாலி காம்லே (வயது 30) என்ற பெண், ‘பதான் சேனா’ என்ற அமைப்பில் இணைந்து சமூக ஆர்வலராக பணியாற்றி வந்தார். இந்த அமைப்பில் அவருடன் பணியாற்றி வந்த சிலர், விருசாலிக்கு தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

    இதனால் விரக்தி அடைந்த அவர் சமீபத்தில் அந்த அமைப்பில் இருந்து விலகினார். ஆனாலும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த அவர் தற்கொலை செய்துகொள்ளும் விபரீத முடிவை எடுத்தார். மேலும் அதை முகநூலில் நேரலையாக பதிவிடவும் எண்ணினார்.

    அதன்படி நேற்று முன்தினம் தனது முகநூல் மூலமாக நேரலையில் பேசினார். அதில், தான் வாழ்க்கையில் விரக்தி அடைந்ததால் கொசு மருந்தை குடித்து தற்கொலை செய்துகொள்ள போவதாக தெரிவித்தார். பின்னர் திடீரென நேரலையிலேயே அதை குடிக்கவும் செய்தார்.

    அப்போது அவரது முகநூல் கணக்கில் இருந்த நண்பர்கள் பலர் இதைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அதில் சிலர் துரிதமாக செயல்பட்டு அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்து, விருசாலியை மீட்குமாறு வேண்டிக்கொண்டனர்.

    அதன்பேரில் உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார் விருசாலியின் வீட்டை கண்டறிந்து அங்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் வீட்டில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் போலீசார் சேர்ந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தற்கொலைக்கு முயன்ற பெண் சமூக ஆர்வலர் முகநூல் நேரலை பதிவு காரணமாக காப்பாற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தனக்கு வாக்களிக்காவிட்டால் தூக்குபோட்டு தற்கொலை செய்வேன் என்று கூறி பா.ஜனதா வேட்பாளர் வாக்கு சேகரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #RajasthanElection #BJP
    ஜெய்ப்பூர்:

    200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ந்தேதி தேர்தல் நடக்கிறது. அங்கு பா.ஜனதா ஆட்சியை தக்க வைக்கவும், காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றவும் கடுமையாக போராடி வருகிறது.



    பா.ஜனதா மந்திரியான ஸ்ரீசந்த் கிருபலானிக்கு மீண்டும் டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் நிம்பஹாரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசும்போது மக்கள் எனக்கு வாக்களிக்காவிட்டால் தூக்கில் தொங்குவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். சித்தோ கட் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் திருப்பலானி பேசும் போது நீங்கள் எனக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற செய்யவேண்டும். அப்படி எனக்கு வாக்களிக்காவிட்டால் தூக்குபோட்டு தற்கொலை செய்வேன். என்று பேசினார்.

    அவரது இந்த பிரசார யுக்தி வாக்காளர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதே போல தெலுங்கானாவில் வேட்பாளர் ஒருவர் வித்தியாசமாக வாக்கு சேகரித்தார். சுகுலா ஹனுமந்த் என்பவர் கொருட்லா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

    அவர் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்கும்போது ஒரு ஜோடி செருப்பையும் கொடுக்கிறார்.

    எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் பொது இடத்தில் வைத்து இந்த செருப்பால் அடிக்குமாறு கூறி வாக்கு சேகரிக்கிறார். #RajasthanElection #BJP
    சத்தியமங்கலம் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உண்மை காரணத்தை கண்டறிய வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
    ஈரோடு:

    கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:-

    டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பயின்று வந்த ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, அவரது அறையில் இறந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்து ஐஏஎஸ் ஆக வேண்டுமென்ற கனவுடன் டெல்லிக்கு சென்ற மாணவி ஸ்ரீமதி. தன்னம்பிக்கையுள்ள, படிப்பில் ஆர்வமுள்ள, சாதிக்க துடிக்கும் மாணவர்கள் தான் தொலை தூரமென்றாலும் மற்ற மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் கல்வி கற்க விரும்பி செல்கிறார்கள்.

    ஆனால் அப்படி மற்ற மாநிலங்களுக்கு பயில செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது. டெல்லியில் பயிலும் தமிழக மாணவர்கள் இறப்பதும் தொடர்கதையாகிவிட்டது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவகல்லூரியில் மருத்துவ மேற்படிப்பை பயின்று வந்த திருப்பூரை சேர்ந்த சரவணன் என்ற மாணவன் 2016-ம் ஆண்டு ஜூலை மாதமும், டெல்லி யூசிஎம்எஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பை படித்து வந்த திருப்பூரை சேர்ந்த சரத்பிரபு என்ற மாணவன் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதமும் மர்மமான முறையில் இறந்து சடலமாக மீட்கப்பட்டதை நாம் அறிவோம்.

    டெல்லியில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பும், உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல்தான் நிலவி வருகிறது. மற்ற மாநிலங்களுக்கு பயில செல்லும் தமிழக மாணவர்கள் இறப்பதற்கான காரணங்களை கண்டறிந்து களையாமல் இத்தகைய உயரிழப்புகளை தடுக்க முடியாது.

    தமிழக அரசு எப்போதும் போல ஸ்ரீமதி இறப்பையும் கடந்து செல்லாமல் உரிய விசாரணையை நடத்தி இறப்பிற்கான காரணத்தை வெளிக்கொணர வேண்டும். மற்ற மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை மத்திய அரசும், தமிழக அரசும் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். #Student #commitsuicide
    டெல்லியில் தற்கொலை செய்த ஐ.ஏ.எஸ். மாணவியின் உடல் இன்று அதிகாலை சத்தியமங்கலம் ஆலாம்பாளையத்துக்கு கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. #Student #commitsuicide

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலாம்பாளைத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 45). இவரது மகள் ஸ்ரீமதி (20).

    கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முடித்த மாணவி ஸ்ரீமதிக்கு கலெக்டர் ஆக விருப்பம் ஏற்பட்டது. மகளின் ஆசையை நிறைவேற்ற அவரது தந்தையும் அவரை ஐ.ஏ.எஸ். படிக்க வைத்தார்.

    டெல்லியில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் ஸ்ரீமதி ஐ.ஏ.எஸ். படித்து வந்தார். அருகே உள்ள விடுதியில் தங்கி இருந்தார். அவருடன் நெல்லையை சேர்ந்த ஒரு மாணவியும் தங்கி இருந்தார்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் மாணவி ஸ்ரீமதி தனது அறையில் தூக்குப்போட்டு திடீரென தற்கொலை செய்து கொண்டார். உடன் இருந்த நெல்லை மாணவி தன் தோழி தற்கொலை செய்து தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து டெல்லி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.


    போலீசார் மாணவி ஸ்ரீமதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவியின் தற்கொலை செய்தி சத்தியமங்கலத்தில் உள்ள அவரது பெற்றோருக்கு தெரிவிககப்பட்டது. கதறி அழுதபடி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

    அங்குள்ள மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். பெற்றோர் மற்றும் தனது தம்பி வருண்ஸ்ரீ மீது அதிக பாசம் கொண்ட ஸ்ரீமதிக்கு அவர்களை பிரிந்து தனியாக இருக்க முடியவில்லை. மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் படிப்பிலும் அவரால் அதிக ஆர்வம் காட்ட முடியவில்லை.

    இந்த நிலையில்தான் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஸ்ரீமதியின் உடல் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் மாணவியின் உடலை பெற்றுக் கொண்டு புறப்பட்டனர்.

    இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3 மணிக்கு மாணவியின் உடல் சத்தியமங்கலம் ஆலாம்பாளையத்துக்கு வந்தது. அவரது உடலை பார்த்து உறவினர்களும் ஊர்மக்களும் கதறி அழுத காட்சி மிகவும் உருக்கமாக இருந்தது.

    ஸ்ரீமதி தற்கொலை செய்வதற்கு முன் பெற்றோருக்கு போன் செய்து உள்ளார். ‘‘தீபாவளிக்கு ஊருக்கு வருகிறேன்’’ என்று கூறினார்.

    அவரது உயிரற்ற உடலைப்பார்த்த உறவினர்கள் ‘‘தீபாவளிக்கு வருவேன் என்று சொன்னீயே இப்போது பிணமாக வந்துள்ளாயே’’ என்று கூறி கதறி அழுதனர். அவரது தந்தை ‘‘நீ ஆசைப்பட்டபடிதானே அம்மா ஐ.ஏ.எஸ். படிக்க வைத்தேன். இப்படி பார்க்கவா டெல்லிக்கு அனுப்பினேன்’’ என்று கதறி துடித்தார்.

    இந்த உருக்கமான காட்சி அங்கிருந்தவர்களின் கண்களை குளமக்கியது.

    தொடர்ந்து இன்று அதிகாலை 3.30 மணி அளவில் அப்பகுதியில் மாணவி ஸ்ரீமதியின் உடல் தகனம் செய்யப்பட்டது. #Student #commitsuicide

    டெல்லியில் உள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் தங்கி படித்து வந்த தமிழக மாணவி ஸ்ரீமதி (20) விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Student #commitsuicide
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆதாம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் சத்தியமங்கலத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் பூ வியாபாரியாக உள்ளார்.

    இவரது ஒரே மகள் ஸ்ரீமதி. கலெக்டர் ஆக வேண்டும் என விருப்பப்பட்ட மகளை அவரது தந்தை ஐ.ஏ.எஸ். படிக்க வைத்தார். ஸ்ரீமதி டெல்லியில் தங்கி ஐ.ஏ.எஸ் படித்து வந்தார். அங்குள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஸ்ரீமதி தங்கி உள்ள விடுதியில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற காரணம் உடனடியாக தெரியவில்லை.

    ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது பெற்றோருக்கு டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் இன்று காலை கோவை சென்று அங்கிருந்து விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

    ஐ.ஏ.எஸ் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சத்தியமங்கலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையில் உயிரிழந்த ஸ்ரீமதி கடந்த சில நாட்களாக மன உளைச்சலுக்கு உள்ளானவர்போல் காணப்பட்டதாக டெல்லி போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



    பிரேத பரிசோதனை முடிந்து ஸ்ரீமதியின் உடல் அவரது உறவினர்களிடம் இன்று பிற்பகல் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து பதப்படுத்துவதற்காக (எம்பால்மிங்) எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

    எம்பால்மிங் முடிந்த பின்னர் ஸ்ரீமதியின் உடல் தமிழ்நாட்டில் உள்ள அவரது சொந்த ஊருக்கு இன்றிரவுக்குள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Student #commitsuicide
    சேந்தமங்கலம் அருகே, குடும்ப தகராறில் பெண் தனது 3 மகள்களுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்றார். அவர்களுக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    சேந்தமங்கலம்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள சிவியாம்பாளையத்தை சேர்ந்தவர் வனராஜ் (வயது 56). இவர் நாமக்கல் நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மகாலட்சுமி (48). இவர்களுடைய மகள்கள் கீதா (20), புனிதா (17), தேன்மொழி (15).

    கடந்த சில நாட்களாக வனராஜூக்கும், இவரது மனைவி மகாலட்சுமிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த மகாலட்சுமி தனது மகள்கள் 3 பேருக்கும் விஷத்தை கொடுத்து தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் 4 பேரும் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தனர்.

    இதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்கள் 4 பேரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சேந்தமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. 
    நீட் தேர்வு காரணமாக மருத்துவ கனவு கலைந்ததால் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கோயம்பேடு:

    சேலையூர், மகாலட்சுமி நகர், புறநானூறு தெருவை சேர்ந்தவர் எட்வர்ட். தாம்பரம் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.

    இவரது மகள் ஏஞ்சலின் சுருதி (வயது 19). செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று காலை அவர் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே தனது அறையில் இருந்தார். நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து சென்றனர்.

    அப்போது அங்குள்ள படுக்கை அறையில் ஏஞ்சலின் சுருதி உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவரது தலையில் பாலித்தீன் கவர் மாட்டப்பட்டு, செல்போன் வயர் கட்டப்பட்டு இருந்தது. அவர் தற்கொலைக்கு முயன்று இருப்பது தெரிந்தது.

    இதனை கண்டு பதறிய பெற்றோர் ஏஞ்சலின் சுருதியை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஏஞ்சலின் சுருதி பரிதாபமாக இறந்தார். இதனை கண்டு பெற்றோர் கதறி துடித்தனர்.

    இது குறித்து சேலையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ‘நீட்’ தேர்வு எழுதியும் மருத்துவ சீட் கிடைக்காததால் ஏஞ்சலின் சுருதி தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    ஏஞ்சலின் சுருதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ‘நீட்’ தேர்வில் பங்கேற்றார். இதில் அவர் குறைவான மதிப்பெண் எடுத்ததாக தெரிகிறது. இதனால் அவருக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை. எனினும் மீண்டும் நீட் தேர்வு எழுதி மருத்துவம் படிக்க ஏஞ்சலின் சுருதி ஆசையாக இருந்தார்.

    ஆனால் அவரை என்ஜினீயரிங் படிப்பில் சேர பெற்றோர் வற்புறுத்தி செம்மஞ்சேரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்த்தனர்.

    மருத்துவ படிப்பில் நாட்டம் இருந்த ஏஞ்சலின் சுருதிக்கு என்ஜினீயரிங் படிக்க ஆசையில்லை. இதனால் அவர் அடிக்கடி கல்லூரிக்கு செல்லாமல் இருந்தார்.

    மேலும் மருத்துவ படிப்பு குறித்து அவர் அடிக்கடி உடன்படிக்கும் மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் கூறி வந்தார். அவரை அவர்கள் சமாதானப்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மனவேதனையில் இருந்த ஏஞ்சலின் சுருதி முகத்தில் பாலித்தீன் கவரை கட்டி தற்கொலை செய்து உள்ளார்.

    அவரது தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    நீட் தேர்வால் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காததால் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா ஏற்கனவே தற்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.

    இதற்கிடையே நீட் தேர்வால் தற்போது ஏஞ்சலின் சுருதியும் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வில்லியனூர் அருகே டி.வி. பார்த்ததை தாய் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே வடமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரி.

    இவர் திருபுவனையில் உள்ள தனியார் மாத்திரை கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் (வயது 16). இவர் அரியூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சந்தோஷ் அதிக சத்தத்துடன் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது தாய் புஷ்பா பாடம் படிக்காமல் ஏன் டி.வி. பார்த்துக்கொண்டு இருக்கிறாய்? என்று சந்தோசை கண்டித்தார்.

    இதனால் மனமுடைந்த சந்தோஷ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் படுக்கை அறை கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டு மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார்.

    அறை கதவு வெகு நேரமாக திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த புஷ்பா ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து சந்தோசை மீட்டு வில்லியனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால், வழியிலேயே சந்தோஷ் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திர சேகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×