search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "policemen"

    • ராமநாதபுரம் அருகே இரவு நேரங்களில் சில கும்பல் வாகன ஓட்டிகளை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளது.
    • போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள பனைக்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் பிரதான சாலையாக நதிப் பாலம்-பனைக்குளம் சாலை இருந்து வருகிறது.

    இந்த நிலையில் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகனங்களை வழிப்பறி கொள்ளையர்கள் மறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளை தாக்கி பொருட்களை கொள்ளை யடித்துச் செல்லும் சம்பவம் அடிக்கடி நடப்பதாக பொது மக்கள் புகார் தெரி விக்கின்றனர்.

    கடந்த காலங்களில் இந்த சாலையில் கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், பயணிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. போலீசாரிடம் புகார் அளித்தும் தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நதிப்பாலம்-பனைக்குளம் சாலையில் புறக்காவல் நிலையம் அமைத்து தர வேண்டும் என அந்தப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரு கின்றனர்.

    மேலும் இந்த சாலையில் இரவு நேரங்களில் போலீ சார் ரோந்து சென்று கண்காணிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர். போலீசார் தொடர்ந்து ரோந்து சென்றால் மட்டுமே வழிப்பறி சம்பவங்களை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து பனைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    பனைக்குளம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் ராமநாத புரம் நகர் பகுதியில் வேலை பார்த்து வருகின்றனர். இந்ந நிலையில் வேலைக்குச் செல்பவர்கள் இரவு நேரத்தில் ஊர் திரும்ப வேண்டியுள்ளது. அப்படி வரும் தொழிலாளர்கள், பயணிகளை குறி வைத்து இருசக்கர வாகனங்கள், கார்களை வழிமறித்து வாகன ஓட்டிகள், பயணிகளை தாக்கி வழிப்பறிகளில் ஈடுபடுகின்றனர்.

    இது தொடர்பாக ஏராளமான புகார்கள் தேவிபட்டினம் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. இருப்பினும் அந்த குற்றவாளிகள் யார்? என கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது.

    இந்த நிலையில் புறக்காவல் நிலையம் அமைத்து தொடர் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட வேண்டும். அப்போது தான் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சட்ட ஒழுங்கு பிரச்சனையால் தூரத்திலிருந்து போலீஸ்காரர்கள் அழைத்து வரபடுகிறார்கள்.
    • ‘காவலர் தங்கும் இல்லம்’ கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் போதுதொலை தூரத்திலிருந்து போலீஸ்காரர்கள் அழைத்து வரபடுகிறார்கள்.

    அப்படியே அழைத்து வரும் பட்சத்தில் இப்பகுதியில் தங்க வைப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது.

    அதனால் முத்துப்பேட்டை பகுதியில் காவலர்கள் தங்குமிடம் அமைக்க உயர் காவல் அதிகாரிகள் முடிவு செய்து அரசுக்கு பரிந்துரையித்தனர்.

    இதனை ஏற்றுக்கொ ண்ட தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் சென்ற சட்டமன்ற கூட்டத்தில் முத்துப்பே ட்டையில் ரூ.12கோடியில் காவலர்கள் தங்குமிடம் கட்ட அறிவித்தார்.

    அதன்படி முத்துப்பேட்டையில் இடம் தேர்வு பணிகள் நடந்து வந்தநிலையில் கடந்த ஆண்டு கோவிலூர் கிழக்கு கடற்கரையில் உள்ள கடலோர காவல் படை காவல் நிலையம் எதிரே இடம் தேர்வு செய்யப்பட்டது.

    இந்தநிலையில் 'காவலர் தங்கும் இல்லம்' கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

    இதற்கு திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை வகித்து கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டிதுவக்கி வைத்தார்.

    இதில் முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கட்டிட பொறியாளர்கள் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 3 நாட்கள் முத்துராம லிங்கத் தேவர் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா நடைபெறுகிறது.
    • ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை மூன்று நாட்கள் முத்துராம லிங்கத் தேவர் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா நடை பெறுகிறது. குருபூஜை விழாவை முன்னிட்டு ராம நாதபுரம் மாவட்டத்தில் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணி யில் இருக்கும் வகை யில் பாதுகாப்பு திட்டம் தயாரிக்கப்பட்டு சுமார் 12,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப டுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும், இராமநாதபுரம் மாவட்டத்தில் பிரிவு 144 தடை உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில், தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள வரும் அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் மற்றும் பொது மக்கள் காவல்துறையில் உரிய அனுமதி பெற்று தங்க ளது சொந்த வாகனங்க ளில் மட்டும் வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டும், வாடகை வாகனங்கள் மற் றும் இருசக்கர வாகனங்க ளில் வருவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

    குருபூஜைக்கு வருபவர்க ளின் வசதிக்கென தேவைப் படும் கிராமங்களிலி ருந்து தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. அவ்வாறு வந்து செல்பவர்கள் விபத்து களை தவிர்க்கும் பொருட்டு, வாகனத்தின் வெளிப்பு றத்தில் தொங்குவது, மேற்கூ ரையில் அமர்வது, வெடி வெடிப்பது போன்ற விதி மீறல்களிலும் ஈடுபடக் கூடாது. குருபூஜைக்கு வந்து செல்பவர்கள் தேவையில் லாத பிரச்சினைகளை தவிர்க்கும் பொருட்டு, சமு தாய ரீதியிலான கோஷங் களை எழுப்பக்கூடாது.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் நடைபெற உள்ள தேவர் குருபூஜையை முன் னிட்டு கலந்து கொள்ள வரும் நபர்கள் 144 தடை உத்தரவில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை தவறாது பின்பற்ற கேட்டுக்கொள் ளப்படுகிறது. மேலும் விதி மீறல்களில் ஈடுபடும் நபர் களை கண்காணித்து நடவ டிக்கை எடுக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 37 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    கூடுதல் பேருந்துகளில் வருபவர்களின் நடவடிக்கை களை கண்காணிக்க ஒவ் வொரு கூடுதல் பேருந்திலும் 2 காவலர்கள் நியமிக்கப்பட்டு பயணம் செய்பவர்களின் நடவடிக்கைகளை கண்கா ணிக்கும் வகையில் 300 உடையில் அணிந்து கொள் ளும் பிரத்யேக கேமராக்கள், பேருந்துகளில் பாது காப்பு பணியில் இருக்கும் அனைத்து காவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

    பசும்பொன் மற்றும் கமுதி பகுதிகளில் முக்கிய இடங்களில் குருபூஜைக்கு வந்து செல்லும் நபர்களின் விதிமீறல் செயல்களை கண் காணித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, டிரோன் கேமராக்கள் 3, மொபைல் கேமரா வாக னங்கள் 5, மொபைல் கேமராக்கள் 9 இடங்களிலும் மற்றும் கமுதி மற்றும் பசும் பொன் பகுதிகளில் முக்கிய இடங்களில் 100 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளது.

    அத்துடன் மாவட்டம் முழுவதிலும் 57 இருசக்கரம் மற்றும் 53 நான்கு சக்கர வாகன ரோந்து தனிப்படை கள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், விதிமீ றல்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கடந்த வருடங்களில் நடை பெற்ற தேவர் குருபூஜையில் விதிமீறலில் ஈடுபட்டோர்மீது 294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 280 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

    • பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை மற்றும் ஜெயந்தி விழா வருகிற 30-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் அங்கு பாதுகாப்புக்காக வருகின்றனர்.

    திருப்பூர் :

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை மற்றும் ஜெயந்தி விழா வருகிற 30-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    விழாவிற்கு தமிழகம் முழுவதும் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்பு நிர்வாகிகள் தொண்டர்கள் தேவரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

    இதனையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் அங்கு பாதுகாப்புக்காக வருகின்றனர்.

    இந்த பாதுகாப்பு பணிக்காக திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 315 போலீசார் ராமநாதபுரம் சென்றுள்ளனர். அதன்படி திருப்பூர் மாநகரில் இருந்து 135 போலீசார், மாவட்டத்திலிருந்து 180 போலீசார் என மொத்தம் 315 பேர் ராமநாதபுரத்திற்கு பாதுகாப்பு பணிக்காக சென்று உள்ளனர்.

    • மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால் பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது.
    • போக்குவரத்தை சீர் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் நகரானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி,தாராபுரம்,காங்கயம் உள்ளிட்ட மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால் பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை உள்ளதால் போக்குவரத்தை சீர் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பல்லடத்தில் பனப்பாளையம் செக்போஸ்ட் , நால்ரோடு, பஸ் நிலையம், மாணிக்காபுரம் பிரிவு, செட்டிபாளையம் பிரிவு ஆகிய இடங்களில் அதிக போக்குவரத்து உள்ளதால் அங்கு போலீசார் இருக்க வேண்டும். இதுதவிர, மங்கலம் ரோடு, என்.ஜி.ஆர்., ரோடு, கொசவம்பாளையம் பிரிவு ஆகிய இடங்களிலும் போக்குவரத்து போலீசார் தேவைபடுகிறது.

    இந்தநிலையில் பல்லடம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். கடந்த மூன்று மாத காலமாக 2 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. போக்குவரத்து போலீசார் பற்றாக்குறையால், சட்டம்-ஒழுங்கு போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில்ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்து மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். போக்குவரத்து போலீசாரும் உரிய விடுமுறை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே திருப்பூர் மாவட்ட போலீஸ் நிர்வாகம், உடனடியாக பல்லடம் போக்குவரத்து போலீசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி போக்குவரத்தை சீர் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.
    • தலை , உதடு, மற்றும் கையில் காயம் ஏற்பட்டது.

    கோவை

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி பத்திரகாளி யம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 31).


    இவர் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் பணியில் இருந்த போது ஜோதி நகரில் மூதாட்டி ஒருவர் இறந்து விட்டதாகவும், அவரது மகன் பாபு என்பவர் மது குடித்து விட்டு தகராறு செய்வதாகவும் தகவல் வந்தது. இனையடுத்து போலீஸ்காரர் ராஜபாண்டி தகவல் வந்த இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.


    அப்போது அங்கு குடிபோதையில் நின்று கொண்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி மாசானி (41) என்பவர் தகாத வார்த்தைகள் பேசி கைகளால் தாக்கினார். இந்த தாக்குதலில் போலீஸ்காரர் ராஜபாண்டிக்கு தலை , உதடு, மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அங்கு இருந்தவர் போலீஸ்காரரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.


    இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீ சார் போலீஸ்கா ரரை தாக்கிய மாசானியை கைது செய்தனர். அவர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மாசானியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    • குடும்பத்தகராறு, கடன் தொல்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிலர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • மோட்டார் சைக்கிளில் செல்வோர் சாலை விபத்தில் சிக்கி பலியாவது அதிகரிக்கிறது.

    அவிநாசி :

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி காவல் நிலைய எல்லைக்குட்பட்டு150க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரப்பகுதி உள்ளது.சமீப நாட்களாக குடும்பத்தகராறு, கடன் தொல்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிலர் தற்கொலை செய்து கொண்டனர்.

    கோவை- சேலம் நெடுஞ்சாலையில் அவிநாசி அமைந்துள்ள நிலையில் அடிக்கடி சாலை விபத்துகளும் ஏற்படுகிறது.குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் சாலை விபத்தில் சிக்கி பலியாவது அதிகரிக்கிறது. நகரின் உட்புற சாலைகளில் கூட அடிக்கடி விபத்து நேரிடுகிறது. இதை தவிர்க்க, ஆங்காங்கே வேகத்தடை கூட அமைக்கப்பட்டது. இதனால் அவிநாசி போலீசார் சார்பில் மங்கலம் ரோட்டில் உள்ள ஆகாசராயர் கோவிலில் கிடா வெட்டி, சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    இது குறித்து போலீசார் கூறுகையில், விபத்து, தற்கொலை உள்ளிட்டவை தினமும் நடக்கிறது. தினமும் ஒரு உடலாவது பிரேத பரிசோதனைக்கு வரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்ற அசம்பாவிதம் நடக்கக்கூடாது என்ற வேண்டுதலை முன்வைத்து, ராயர் கோவிலில் கிடா வெட்டி பூஜை செய்தோம் என்றனர்.

    வியாபாரியிடம் பணம் பறித்ததாக கூறப்பட்ட புகாரின்பேரில் திருவல்லிக்கேணி சப்-இன்ஸ்பெக்டர், 3 போலீசாரை சஸ்பெண்டு செய்து கிழக்கு மண்டல இணை கமி‌ஷனர் ஜெயகவுரி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    திருவல்லிக்கேணியில் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை செய்து வருபவர் சாகுல் அமீது.

    இவரை மிரட்டி சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர், தலைமை காவலர் அனந்த ராஜ், அசோக்குமார், சன்னி லாய்டு ஆகியோர் ரூ.80 ஆயிரம் பறித்ததாக புகார் கூறப்பட்டது.

    இதையடுத்து அவர்கள் 4 பேரும் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள் மீதான புகார் குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. அதில் பணம் பறித்தது ஊர்ஜிதமானது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர், தலைமை காவலர் ஆனந்த ராஜ், அசோக்குமார், சன்னிலாய்டு ஆகிய 4 பேரையும் சஸ்பெண்டு செய்து கிழக்கு மண்டல இணை கமி‌ஷனர் ஜெயகவுரி உத்தரவிட்டுள்ளார்.

    சிவகாசியில் போலீஸ்காரரை மது போதையில் தாக்கியதாக 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றுபவர் ராமச்சந்திரன். இவர் நேற்று இரவு சிவானந்தா காலனி பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அங்குள்ள டாஸ்மாக்கடை அருகில் போதையில் 3 பேர் நின்று தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    உடனே போலீஸ் காரர் ராமச்சந்திரன் 3 பேரையும் எச்சரித்து வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். ஆனால் அவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதத்தில் நடந்து கொண்டனர்.

    மேலும் மதுபோதையில் ராமச்சந்திரனை கம்பால் தாக்கிவிட்டு தப்பினர். படுகாயம் அடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் போலீஸ்காரர் ராமச் சந்திரனை தாக்கியது லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த சங்கர் (வயது27), அய்யம்பட்டி ராஜ்குமார் (27), பிரபு (29) என தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். #tamilnews
    பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு 14 டி.எஸ்.பி.க்கள் உள்பட 104 போலீசாரை நியமித்து டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். #PonManickavel
    சென்னை:

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரியான பொன். மாணிக்கவேல் ஓய்வு பெற்றதையடுத்து அவரை ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அவருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி 14 டி.எஸ்.பி.க்கள் உள்பட 104 போலீசாரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நியமித்து டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

    இதில் கூடுதல் டி.எஸ்.பி. ஒருவரும் இடம் பெற்றுள்ளார். 14 இன்ஸ்பெக்டர்கள், 43 சப்-இன்ஸ்பெக்டர்களும் புதிய குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் பொன்.மாணிக்கவேலுக்கு கீழ் பணியாற்றுவார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக போலீசார் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் தெரிவித்து இருந்தனர்.

    இதனைத்தொடர்ந்து இதனை காரணம் காட்டி, பணி நீட்டிப்பை ரத்துசெய்யக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்தநிலையில் தான் டி.ஜி.பி ராஜேந்திரன் புதிய போலீசாரை பொன். மாணிக்கவேலுக்கு கீழ் பணியாற்ற நியமித்துள்ளார்.

    பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்பான தகவல்களை அரசுக்கு முறையாக தெரிவிப்பது இல்லை என்று தமிழக அரசின் சார்பில் கோர்ட்டில் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

    பொன்.மாணிக்கவேல் பொறுப்பேற்ற பின்னர் சிலை கடத்தல் விவகாரத்தில் பல்வேறு முக்கிய பிரமுகர்களை கைது செய்தார். தொடர்ந்து நடவடிக்கையும் எடுத்து வருகிறார். ஒருசில கருத்து வேறுபாடுகள் காரணமாக பொன். மாணிக்கவேலுக்கும் தமிழக அரசுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. #PonManickavel

    மத்திய பிரதேசத்தில் போலீசாருக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டதையடுத்து நேற்று 400 போலீசார் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர். #Madhyapradesh #Policemen #Holiday
    போபால்:

    மத்தியபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து முதல்-மந்திரியாக கமல்நாத் பதவி ஏற்றுக்கொண்டார். அவர் தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.



    பதவி ஏற்றதும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தற்போது மத்திய பிரதேசத்தில் போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது போலீசாருக்கு வார விடுமுறை அளிக்கப்படும் என்பதை முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் பிரசாரம் செய்தது.

    இதை அப்போதே போலீசாரின் குடும்பத்தினர் வரவேற்று இருந்தனர். இந்த நிலையில் மத்தியபிரதேச மாநிலத்தில் பணியாற்றும் போலீசாருக்கு புத்தாண்டு பரிசாக வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி நேற்று 400 போலீசார் வார விடுமுறை எடுத்து மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர். மாநிலத்தில் மொத்தம் 1 லட்சம் போலீசார் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    போலீசார் ஏற்கனவே ஈட்டிய விடுப்பு உள்பட மற்ற விடுமுறைகளை எடுத்து வந்தாலும் வார விடுமுறை மட்டும் அனுபவிக்காமல் இருந்தனர். அவர்களுக்கு தற்போது வார விடுமுறை அளிக்கப்பட்டதால் மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவித்தனர்.

    போபால் சப்-இன்ஸ்பெக்டர் மிஸ்ரா கூறுகையில், நான் 1981-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தேன். இதுவரை வார விடுமுறை எடுக்காமல் பணியாற்றினேன். இப்போது 38 ஆண்டுக்குப்பின் வார விடுமுறை கிடைத்துள்ளது. எனது குடும்பத்துடன் பொழுதை கழித்தேன். சொந்த பணிகளையும் கவனிக்க முடிந்தது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராகேஷ் சர்மா கூறுகையில், ‘‘நான் முதல்முறையாக வார விடுமுறை எடுத்ததும் எனது குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் சென்றேன். மாலையில் திரும்ப அழைத்து வந்தேன். மற்ற நேரங்களில் குடும்பத்துடன் சந்தோ‌ஷமாக இருந்தேன். முதல் முறையாக 24 மணிநேரமும் குடும்பத்தினருடன் பொழுதை கழித்தேன்’’ என்றார். #Madhyapradesh #Policemen #Holiday

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 5-ந்தேதி மீண்டும் திறக்கப்பட இருப்பதால் வருகிற 5, 6-ந்தேதிகளில் பாதுகாப்பு பணிக்கு 700 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். #Sabarimala #SabarimalaTemple
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17-ந்தேதி ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறந்த நாளில் இருந்து நடை அடைக்கப்பட்ட 21-ந்தேதி வரை சபரிமலை போராட்டக்களமாக காட்சி அளித்தது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்துவருகிறார்கள். நேற்று வரை 3305 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் 529 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 5-ந்தேதி மீண்டும் திறக்கப்பட இருக்கிறது. கேரளாவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் ஸ்ரீசித்திரை திருநாள் பிறந்தநாள் விழாவுக்காக நடை திறக்கப்படுகிறது.

    அன்று மன்னர் குடும்பத்தினர் தரிசனம் செய்த பின்னர் பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 6-ந்தேதி இரவு கோவில்நடை அடைக்கப்பட இருக்கிறது.

    வருகிற 6-ந்தேதி தீபாவளி திருநாளாகும். எனவே ஐயப்பனை தரிசிக்க அதிக அளவில் பக்தர்கள் கோவிலுக்கு வர வாய்ப்புள்ளது. மேலும் ஒருநாள் மட்டுமே நடை திறக்கப்பட்டிருக்கும் என்பதால் உள்ளூர் மக்களே அதிகளவில் வருவார்கள் என்று கூறப்படுகிறது.

    சபரிமலையில் போராட்டங்கள் ஓய்ந்திருக்கும் நிலையில் இப்போது மீண்டும் நடை திறக்க இருப்பதால் சபரிமலையில் மீண்டும் பிரச்சினை ஏற்படலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    இதையடுத்து சபரிமலையில் வருகிற 5 மற்றும் 6-ந்தேதிகளில் பாதுகாப்பு பணிக்கு 700 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். சன்னிதானம், பம்பை, நிலக்கல் மற்றும் பத்தினம் திட்டை பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    போலீசாருடன் வனத்துறை ஊழியர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். எருமேலியில் இருந்து வனப்பாதை வழியாக யாரும் சபரிமலைக்குள் சென்று விடாமல் இருக்க அங்கு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் பக்தர்கள் போர்வையில் போராட்டக்காரர்கள் ஊடுருவி விடாமல் இருக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 18-ந்தேதி நடந்தது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 5-ந்தேதி திறக்கப்பட்டு 6-ந்தேதி மூடப்படும். அதன் பிறகு 10 நாட்களுக்கு பிறகு மண்டல பூஜை விழாவிற்காக மீண்டும் 16-ந்தேதி நடை திறக்கப்படும். அதன் பிறகு டிசம்பர் மாதம் 27-ந்தேதி 41 நாட்கள் நடை திறந்திருக்கும். 27-ந்தேதி மண்டல பூஜைக்கு பிறகே நடை அடைக்கப்படும்.

    3 நாட்களுக்கு பிறகு டிசம்பர் 30-ந்தேதி மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் நடை திறக்கப்படும். அதன் பிறகு ஜனவரி மாதம் 14-ந்தேதி வரை நடை திறந்திருக்கும். #Sabarimala #SabarimalaTemple

    ×