search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Merchant money robbery"

    வியாபாரியிடம் பணம் பறித்ததாக கூறப்பட்ட புகாரின்பேரில் திருவல்லிக்கேணி சப்-இன்ஸ்பெக்டர், 3 போலீசாரை சஸ்பெண்டு செய்து கிழக்கு மண்டல இணை கமி‌ஷனர் ஜெயகவுரி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    திருவல்லிக்கேணியில் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை செய்து வருபவர் சாகுல் அமீது.

    இவரை மிரட்டி சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர், தலைமை காவலர் அனந்த ராஜ், அசோக்குமார், சன்னி லாய்டு ஆகியோர் ரூ.80 ஆயிரம் பறித்ததாக புகார் கூறப்பட்டது.

    இதையடுத்து அவர்கள் 4 பேரும் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள் மீதான புகார் குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. அதில் பணம் பறித்தது ஊர்ஜிதமானது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர், தலைமை காவலர் ஆனந்த ராஜ், அசோக்குமார், சன்னிலாய்டு ஆகிய 4 பேரையும் சஸ்பெண்டு செய்து கிழக்கு மண்டல இணை கமி‌ஷனர் ஜெயகவுரி உத்தரவிட்டுள்ளார்.

    மதுரையில் வியாபாரியை தாக்கி பணம்-செல்போன் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை எல்லீஸ் நகர் 2-வது பால்பூத் தெருவைச் சேர்ந்தவர் குமார் (வயது46). இவர் மொத்தமாக செருப்புகளை கொள்முதல் செய்து வியாபாரம் செய்து வருகிறார்.

    இவர் சம்பவத்தன்று ஊழியர்களுக்கு சம்பளத்தை கொடுத்து விட்டு மீதி இருந்த ரூ.61 ஆயிரத்தை பையில் வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். வீட்டின் அருகே வந்தபோது 2 மர்ம நபர்கள் அவரை வழிமறித்தனர்.

    அவர்கள் பேசுவதற்கு செல்போன் தருமாறு கேட்டு உள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக மர்ம நபர்கள் குமாரை அடித்து கீழே தள்ளி விட்டு பையில் இருந்த ரூ.61 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.2½ லட்சம்- நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    வந்தவாசி காதர் மீரா தெருவைச் சேர்ந்தவர் நிஜாமுதீன். கோரை பாய் வியாபாரி. இவர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து விட்டு பின்னர் வந்தவாசி திரும்புவதற்காக கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்து பஸ்சில் ஏறி அமர்ந்தார்.

    அப்போது அருகே உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்த இரண்டு வாலிபர்கள் ரூபாய் நோட்டுகளை கீழே போட்டு அதை எடுத்து தருமாறு நிஜாமுதீனிடம் கூறினார்கள்.

    அவர் குனிந்து பணத்தை எடுத்தபோது 2 வாலிபர்களும் நிஜாமுதீன் வைத்திருந்த பையை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். அதில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பணம், 12 பவுன் நகை இருந்தது.

    இதுகுறித்து நிஜாமுதீன் கோயம்பேடு பஸ் நிலையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகிறார்கள்.



    பெங்களூரில் இருந்து புதுவைக்கு பஸ்சில் வந்த வியாபாரியின் பணம் திருட்டு போனது. #Robberycase

    புதுச்சேரி:

    டெல்லியை சேர்ந்தவர் சந்தீப் ஜெயின் (வயது 48). வியாபாரி. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வியாபார வி‌ஷயமாக பெங்களூர் சென்றார். பின்னர் நேற்று புதுவை வெங்கட்டா நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு பஸ்சில் வந்தார்.

    புதிய பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் உறவினர் வீட்டுக்கு வந்தார். அங்கு தான் கொண்டு வந்த கைப்பையை திறந்து பார்த்த போது, அவர் வைத்திருந்த ரூ.48 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் நகைகள் மாயமாகி இருந்ததை கண்டு திடுக்கிட்டார்.

    பெங்களூரில் இருந்து புதுவைக்கு பஸ்சில் வந்த போது யாரோ மர்ம நபர்கள் கைப்பையில் வைத்திருந்த பணம்- நகையை திருடி உள்ளது தெரிய வந்தது.

    இதுகுறித்து சந்தீப் ஜெயின் பெரியக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Robberycase

    ×