search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவர் ஜெயந்தியையொட்டி திருப்பூரில் இருந்து பாதுகாப்பு பணிக்காக 315 போலீசார் பயணம்
    X

    கோப்புபடம்.

    தேவர் ஜெயந்தியையொட்டி திருப்பூரில் இருந்து பாதுகாப்பு பணிக்காக 315 போலீசார் பயணம்

    • பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை மற்றும் ஜெயந்தி விழா வருகிற 30-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் அங்கு பாதுகாப்புக்காக வருகின்றனர்.

    திருப்பூர் :

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை மற்றும் ஜெயந்தி விழா வருகிற 30-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    விழாவிற்கு தமிழகம் முழுவதும் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்பு நிர்வாகிகள் தொண்டர்கள் தேவரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

    இதனையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் அங்கு பாதுகாப்புக்காக வருகின்றனர்.

    இந்த பாதுகாப்பு பணிக்காக திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 315 போலீசார் ராமநாதபுரம் சென்றுள்ளனர். அதன்படி திருப்பூர் மாநகரில் இருந்து 135 போலீசார், மாவட்டத்திலிருந்து 180 போலீசார் என மொத்தம் 315 பேர் ராமநாதபுரத்திற்கு பாதுகாப்பு பணிக்காக சென்று உள்ளனர்.

    Next Story
    ×