search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகாசியில் போலீஸ்காரர் மீது தாக்குதல் - 3 பேர் கைது
    X

    சிவகாசியில் போலீஸ்காரர் மீது தாக்குதல் - 3 பேர் கைது

    சிவகாசியில் போலீஸ்காரரை மது போதையில் தாக்கியதாக 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றுபவர் ராமச்சந்திரன். இவர் நேற்று இரவு சிவானந்தா காலனி பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அங்குள்ள டாஸ்மாக்கடை அருகில் போதையில் 3 பேர் நின்று தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    உடனே போலீஸ் காரர் ராமச்சந்திரன் 3 பேரையும் எச்சரித்து வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். ஆனால் அவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதத்தில் நடந்து கொண்டனர்.

    மேலும் மதுபோதையில் ராமச்சந்திரனை கம்பால் தாக்கிவிட்டு தப்பினர். படுகாயம் அடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் போலீஸ்காரர் ராமச் சந்திரனை தாக்கியது லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த சங்கர் (வயது27), அய்யம்பட்டி ராஜ்குமார் (27), பிரபு (29) என தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். #tamilnews
    Next Story
    ×