search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசியில் கிடா வெட்டி பரிகார பூஜை செய்த போலீசார்
    X

    கோப்புபடம்.

    அவினாசியில் கிடா வெட்டி பரிகார பூஜை செய்த போலீசார்

    • குடும்பத்தகராறு, கடன் தொல்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிலர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • மோட்டார் சைக்கிளில் செல்வோர் சாலை விபத்தில் சிக்கி பலியாவது அதிகரிக்கிறது.

    அவிநாசி :

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி காவல் நிலைய எல்லைக்குட்பட்டு150க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரப்பகுதி உள்ளது.சமீப நாட்களாக குடும்பத்தகராறு, கடன் தொல்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிலர் தற்கொலை செய்து கொண்டனர்.

    கோவை- சேலம் நெடுஞ்சாலையில் அவிநாசி அமைந்துள்ள நிலையில் அடிக்கடி சாலை விபத்துகளும் ஏற்படுகிறது.குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் சாலை விபத்தில் சிக்கி பலியாவது அதிகரிக்கிறது. நகரின் உட்புற சாலைகளில் கூட அடிக்கடி விபத்து நேரிடுகிறது. இதை தவிர்க்க, ஆங்காங்கே வேகத்தடை கூட அமைக்கப்பட்டது. இதனால் அவிநாசி போலீசார் சார்பில் மங்கலம் ரோட்டில் உள்ள ஆகாசராயர் கோவிலில் கிடா வெட்டி, சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    இது குறித்து போலீசார் கூறுகையில், விபத்து, தற்கொலை உள்ளிட்டவை தினமும் நடக்கிறது. தினமும் ஒரு உடலாவது பிரேத பரிசோதனைக்கு வரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்ற அசம்பாவிதம் நடக்கக்கூடாது என்ற வேண்டுதலை முன்வைத்து, ராயர் கோவிலில் கிடா வெட்டி பூஜை செய்தோம் என்றனர்.

    Next Story
    ×