என் மலர்
நீங்கள் தேடியது "construction work"
- கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் கட்டிட பணிகள் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- கடந்த 2 மாதத்தில் 35 சதவீதம் வரை விலை அதிகரித்துள்ளன.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட த்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு சிமெண்ட் உள்பட கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்தது. இந்நிலையில் தற்போது பிளம்பிங் தொழிலுக்கு தேவையான குழாய்கள், பைப்புகள், மின்சாதன பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளன. கடந்த 2 மாதத்தில் 35 சதவீதம் வரை விலை அதிகரித்துள்ளன.
கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் பல இடங்களில் வீட்டின் உரிமை யாளர்கள் பணிகளை நிறைவு செய்ய முடியாமல் பரிதவிப்பில் உள்ளனர்.
கடந்த 2 மாதமாக விலையேற்றம் தொடர்ந்து வருவதால் புதிய வீடு கட்ட திட்டமிட்டவர்களும் பணியினை தொடங்கு வதற்கு தயங்கி வருகின்றனர். கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் பொறியாளர்கள், பிளம்பர்கள், மக்கள் பரிதவிக்கின்றனர்.
இந்த விலை உயர்வால் வீடு கட்டுவது பலருக்கு கனவாகவே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்டுமான தொழிலை சார்ந்துள்ள கொத்தனார்கள், பிளம்பர்கள், எலெக்ட்ரி ஷியன் தொழில் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். கட்டிட பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வெள்ளப்பள்ளம் உப்பனாறு கடைமடை நீரொழுங்கி கட்டுமானப்பணியை தஞ்சாவூர் காவிரி வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் ஆய்வு செய்தார்.
- அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்குமாறு பொதுப்பணித்துறை அலுவலக பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநகரி கிராமத்தில் காவிரி உப கோட்ட சீர்காழி நீர்வளத் துறையின் மூலம் நடைபெறும் வெள்ளப்பள்ளம் உப்பனாறு கடைமடை நீரொ ழுங்கி கட்டுமானப்பணி, தென்னாம்பட்டினம் கிராமம் நாட்டு கண்ணி மண்ணி ஆற்றில் கடைமடை நீரொழுங்கி கட்டுமானப் பணி மற்றும் காவிரி உபகோட்டம் பொறையார் காலமாநல்லூர் மஞ்சளாறு ஆற்றின் கடைமடை நீரொழுங்கி ஆகிய கட்டுமான பணிகளை தஞ்சாவூர் காவிரி வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அனைத்துப் பணிகளையும் விரை வாக முடிக்குமாறுபொதுப்ப ணித்துறை அலுவலக பொறியாள ர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்ட செயற்பொ றியாளர் சண்முகம், சீர்காழி உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி செய ற்பொறியாளர் பாண்டியன் சீர்காழி உப கோட்ட உதவி பொறியாளர்கள் சரவணன், வெங்கடேசன் ,உதவி பொறியாளர் விஜயபாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
- இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் மணி மண்டபம் கட்டும் பணி நடந்து வருகிறது.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆடி,தை, பங்குனி மாதங்களில் அதிக ளவிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து அலகு குத்தி, அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திகடன் செலுத்துகிறார்கள். கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் அந்த ஆடுகள் பலியிட்டு சமைத்து சாப்பிட்டு செல்வது வழக்கம்.
கோவிலில் நேர்த்தி கடன்களை செலுத்த வசதிகள் அமைத்து தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பக்தர்களின் வசதிக்காக ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கோவில் வளாகத்தில் 20 விருந்து மண்டபங்கள் கட்டுவதற்கு 2020-21-ம் ஆண்டு சட்டமன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.
அதன் அடிப்படையில் ரூ.2 கோடியே 50 லட்சம் தொகையில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மதிப்பீடு மற்றும் ஒப்பந்தப்புள்ளி அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி பூசாரி, இருக்கன்குடி கோவில் உதவி ஆணையர் கருணாகரன், சாத்தூர் ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா கடற்கரைராஜ் ஆகியோர் ஒப்பந்ததாரரிடம் கட்டுமான வேலைக்கான பணி ஆணை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் வருகிற 14-ந்தேதி மகா மண்டபம் கட்டும் பணி தொடங்குகிறது.
- இதனை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்கிறார்.
உடன்குடி:
திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவிலில் ஒன்றாகும். இங்கு நடைபெறும் தசரா திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் திருவிழாவாகும். இக்கோவிலில் பக்தர்கள்சாமிதரிசனம் செய்வதற்காக முன் முகப்புமண்டபம் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தண்டுபத்து சண்முக நாடார்- பிச்சைமணி அம்மாள் அறக்கட்டளை சார்பில் இவர்களது மகன் ராமசாமி என்பவர் நன்கொடையாக மண்டபம் கட்டி கொடுக்கமுடிவு செய்துள்ளார். இதை யொட்டி மண்டபம் கட்டுவதற்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு, அரசு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்துசமய அறநிலையத்துறையை சேர்ந்த இணை ஆணையர் அன்புமணி, நகைசரிபார்க்கும் துணை ஆணையர் வெங்கடேஷ், ஆய்வாளர் பகவதி மற்றும் அறநிலையத் துறை அலுவலர்கள் ஆகியோர் மண்டபம் உருவாகும் இடங்களை சுற்றிப்பார்த்து ஆய்வு செய்தனர். பின்பு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளகளிடம் கூறியதாவது:-
மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான முன் மண்டபம் கட்டும் பணியை மண்டபத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் அவரது பெற்றோர்களின் அறக்கட்டளை சார்பில் கட்டிகொடுக்க முடிவு செய்துள்ளார். அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த மண்டபம் கட்டும் தொடக்க விழா வருகிற 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இக்கோவிலில் வைத்து நடைபெறுகிறது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நட்டி, முன்மண்டபம் கட்டும் பணியை தொடங்கி வைக்கிறார்.
வருகிற தசரா திருவிழாவிற்கு முன்பு இந்த மண்டபத்தை கட்டிவிடலாம் என்ற நம்பிக்கை உள்ளது. மண்டபம் கட்டுவதற்கு பக்தர்களும் பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக சுவாமி தரிசனம் செய்த அமைச்சரை கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியம், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் தாண்டவன் காடு கண்ணன் ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து கோவில் சார்பில்பூரணகும்ப மரியாதையுடன் அமைச்சரை வரவேற்றனர். அவருடன் ஏராளமான தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக வந்திருந்தனர்.
- பண்டாரவாடை ஊராட்சியில் நடைபெற்று வரும் பயணியர் நிழற்குடை கட்டுமான பணிகளை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
- நிழற்குடை கட்டுமான பணிகளை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பாபநாசம்:
பாபநாசம் ஒன்றியம் பண்டாரவாடை ஊராட்சியில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2021-2022 இன் கீழ் கட்டப்பட்டு வரும் பயணியர் நிழற்குடை கட்டுமான பணிகளை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது தி.மு.க தஞ்சை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் கோவி. அய்யாராசு, த.மு.மு.க, ம.ம.க, தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ரஹ்மத் அலி, தி.மு.க பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், ஒப்பந்ததாரர் திருமலை நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
கூடலூர் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் சேதம் அடைந்தது. இதேபோல் சில இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் சென்றது. இக்காலக்கட்டங்களில் கேரளாவிலும் கனமழை பெய்தது. இதனால் மழையின் தீவிரம் கூடலூர் பகுதியிலும் அதிகமாக இருந்தது.
இதில் கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் மலைப்பாதையில் பல இடங்களில் பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. இதனால் 15 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலையிலும் விரிசல்கள் ஏற்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் பல கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு ராட்சத பாறைகள் வெடிகள் வைத்து தகர்க்கப்பட்டு, ஒருபக்கமாக வாகனங்கள் செல்லும் வகையில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.
தொடர்ந்து மழைக்காலமாக இருந்ததால் பாறைகள் விழுந்த பகுதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும் மேலும் சாலை சேதம் அடைந்தது. இதனால் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் இருந்தது. எனவே பாறைகள் விழுந்த பகுதியை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
இதையொட்டி தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு ராட்சத தடுப்பு சுவர் கட்டும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இனி வரும் காலத்தில் வாகன போக்குவரத்து துண்டிக்காத வகையில் தடுப்பு சுவர் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி இன்னும் ஒருசில வாரங்களில் நிறைவு பெறும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனிடையே மலைப்பாதையில் கட்டுமான பணி நடைபெறுவதால் இருபுறமும் வாகன போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா எஸ்.குடிகாட்டில் இருந்து கொளக்காநத்தம் செல்லும் சாலையின் இடையில் மருதை ஆற்றின் கிளை ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் தற்போது தரைமட்ட பாலம் உள்ளது. இதனால் மழைக்காலத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது, பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் இந்த தரை மட்ட பாலத்தில் பாலம் கட்ட வேண்டும் என குன்னம் எம்.எல்.ஏ.விடம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதனை அரசு அதிகாரிகளிடம் எடுத்து கூறி நெடுஞ்சாலை துறையின் கிராம சாலை மேம்பாடு திட்டம் மூலமாக பாலம் கட்ட ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனையடுத்து பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. சந்திரகாசி எம்.பி. தலைமை தாங்கினார். தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., ஆலத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கர்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பாலம் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பெரியசாமி, கூட்டுறவு சங்க தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை சைதாப்பேடையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு 10-வது தளத்தில் பணி நடைபெற்றபோது பிரவீன் மற்றும் கோவிந்தன் ஆகிய தொழிலாளர்கள் தவறி கீழே விழுந்தனர். இதில் இருவரும் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இதுபற்றி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும்இந்த விபத்து தொடர்பாக கட்டிட பொறியாளர் பிரகாஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #LabourersDied
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உள்விளையாட்டு அரங்கம் 52 அடி நீளம், 34 அடி அகலத்துடன், மரத்தினாலான தரைத்தளம் 40 மீ நீளம், 20 மீ அகலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் கைப்பந்து, கூடைப்பந்து, கபடி, இறகுப்பந்து, கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ, டேபிள்டென்னிஸ், கேரம், செஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை விளையாடுவதற்கு மின்னொளி வசதியுடன் இந்த அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் ரூ. 1½ கோடியும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ரூ.1½ கோடியும் என மொத்தம் ரூ. 3 கோடி செலவில் உள்விளையாட்டு அரங்க கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைக்கப்பட்டு வரும் உள் விளையாட்டு அரங்கின் கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தா பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் கட்டுமானப்பணிகளின் தன்மை குறித்து கேட்டறிந்த கலெக்டர், உள் விளையாட்டு அரங்கின் கட்டுமானப்பணிகளை உயர்ந்த தரத்துடன் விரைந்து முடித்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட விளையாட்டு அதிகாரிக்கும், பொதுப்பணித்துறை அதிகாரிக்கும் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அதிகாரி ராமசுப்பிரமணியராஜா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.