search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் ரூ.7.80 கோடியில் மத்திய பேருந்து நிலைய கட்டிட பணிகள் விரைவில் தொடக்கம்
    X

    அரியலூரில் ரூ.7.80 கோடியில் மத்திய பேருந்து நிலைய கட்டிட பணிகள் விரைவில் தொடக்கம்

    • அரியலூரில் ரூ.7.80 கோடியில் மத்திய பேருந்து நிலைய கட்டிட பணிகள் விரைவில் தொடங்குகிறது
    • கடைகளை காலி செய்து கொடுக்க நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தின் தலைநகரமாக திகழும் அரியலூர் 2010 முதல் 2-ம் நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகின்றது. 18 வார்டுகளை கொண்ட நகராட்சியின் பரப்பளவு 7.62 சதுர கிலோ மீட்டர் ஆகும். 30 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட இங்கு 1975-ம் ஆண்டு சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் அமைக் கப்பட்டது.சுமார் 25 பேருந்து வழித்தடங்களில் தினசரி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்று வரு–கின்றது. சுமார்30 கி.மீ. சுற்றளவு பகுதிகளில் இருந்து தினசரி 10 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர்.

    48 ஆண்டுகால பழைய கட்டிடங்கள் என்பதால் மழைக்காலங்களில் பயணி கள் நனைய வேண்டிய நிலை ஏற்படுகிறது.அதுமட்டுமின்றி வெயில் காலங்களில் ஒதுங்ககூட போதுமான வசதிகள் இல்லாமல் இருந்தது. இங்கு சுமார் 60 கடைகள் ஏலம் விடப்பட்டாலும், 100 கடை–கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் பய–ணிகள், பொதுமக்கள் நிற்கவோ, ஒதுங்கவோ மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். எனவே மத்திய பேருந்து நிலையம் அமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து அரியலூ–ரில் மத்திய பேருந்து நிலை–யம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. இதற்காக ரூ.7.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதற்கான டெண்டர் பணிகளும் முடிவ–டைந்த நிலையில் விரைவில் கட்டுமான பணிகள் துவங்க உள்ளது.இதற்கிடையே தற்போது பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவரும் கடை–களை காலி செய்து கொடுக்க நகராட்சி நிர்வாகம் நோட் டீஸ் வழங்கியுள்ளது. அது–வரையில் தற்காலிக பேருந்து நிலையம் அரியலூர்-திருச்சி பூறவழிச்சாலை தனியார் இடத்தில் செயல்படவுள்ளது. கட்டு–மான பணிகள் முடிந்தவுடன் டெண்டர் மூலம் கடைகள் ஏலம் விடப்படும்.

    அரியலூர் நகரில் நவீன வசதிகளுடன் மத்திய பேருந்து நிலையம் அமைக் கப்படுவதற்கு பொது–மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என நக ராட்சி நிர்வாகம் சார்பில் கேட் டுக்கொள்ளப்பட்டு உள் ளது. அரியலூர் நகரில் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றப்பட்டு அரியலூர் நகரரை அழகுபடுத்தும் பணியிலும் நகராட்சி நிர் வாகம் ஈடுபட்டுள்ளது.மத்திய பேருந்து நிலை–யத்தின் கட்டுமான பணி–களுக்கான பூமி பூஜை நடைபெற்றது. வாரசந்தை பூதிய கட்டுமான பணிகளும் தொடங்கியுள்ளதால் அங்கு பழைய கட்டிடங்களை ஜேசிபி எந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி துவங்கியது.


    Next Story
    ×