search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை அருகே பாலம் கட்டுமான பணியால் போக்குவரத்து மாற்றம்
    X

    செங்கோட்டை அருகே பாலம் கட்டுமான பணியால் போக்குவரத்து மாற்றம்

    • பிரானூர் பார்டர் பகுதியில் உள்ள வாய்க்கால் பாலம் அருகே பழமையான பாலம் ஒன்று உள்ளது.
    • பணிகள் நடைபெறுவதால் பாலத்தின் மற்றொரு பகுதி வழியாக இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்று செல்கின்றன.

    செங்கோட்டை:

    செங்கோட்டையை அடுத்த பிரானூர் பார்டர் பகுதியில் உள்ள வாய்க்கால் பாலம் அருகே பழமையான பாலம் ஒன்று உள்ளது.

    புதிய பால பணி

    கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய இணைப்பு பாலமாக அமைந்துள்ள இந்த பாலம் சேதமடைந்து காணப்பட்டதால் அதனை இடித்துவிட்டு புதிதாக கட்டுவதற்கு கோரிக்கை வலுத்தது.


    இதையடுத்து அந்த பாலத்தின் ஒரு பகுதியை இடித்துவிட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு பகுதி வழியாக இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்று செல்கின்றன.

    இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தினமும் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பிரானூர் பார்டர் வழியாக செல்லும் வாகனங்கள், கனரக லாரிகள், அய்யப்ப பக்தர்களின் கார்கள் அனைத்தும் ெசங்கோட்டை வனத்துறை சோதனை சாவடி, கணக்கப்பிள்ளை வலசை, தேன்பொத்தை, பண்பொழி, குத்துக்கல்வலசை வழியாக வழியாக செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதனால் பிரானூர் பார்டர் பாலம் பகுதியில் போக்குவரத்து ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு இன்று முதல் போக்குவரத்து சீராக நடைபெற்றது.

    Next Story
    ×