search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உயர்மட்டம் மேம்பாலம் கட்டுமான பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு
    X

    பள்ளிபாளையத்தில் நடந்து வரும் உயர்மட்டம் மேம்பாலம் பணியை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

    உயர்மட்டம் மேம்பாலம் கட்டுமான பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு

    • பள்ளிப்பாளையத்தில் நடைபெற்று வரும் உயர்மட்டம் மேம்பாலம் கட்டுமான பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
    • மேம்பாலம் கட்டுமான பணியை தரமாகவும், விரைவாக முடிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பள்ளிப்பாளையம்:

    பள்ளிப்பாளையத்தில் ஆசிரியர் காலனி பகுதியில் இருந்து 3 கீ.மீட்டர் துாரத்திற்கு 98 பில்லருடன் உயர் மட்ட மேம்பாலம், மற்றும் சாலை விரிவாக்கம் ரூ.200 கோடியில் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    தற்போது மேம்பாலம் பணிகள் 40 சதவீதம் முடிந்து விட்டது. பில்லர் மேற்பரப்பில் நேற்று கான்கீரிட் தளம் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணியை நெடுஞ்சாலைதுறை சேலம் கோட்ட பொறியாளர் சசிகுமார் நேரில் ஆய்வு செய்தார். பணியை தரமாக நடக்க வேண்டும் எனவும், விரைவாக முடிக்க வேண்டும் என தெரிவித்தார். பின்னர் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.

    அப்போது, திருச்செங்கோடு உதவி பொறியாளர் கபில் மற்றும் திட்ட மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×