search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajasthan Election"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது.
    • ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்த இடங்கள் 199 ஆகும்.

    மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

    தெலுங்கானாவில் மாலை 5 மணி நிலவரப்படி 63.94 சதவீத வாக்குப்பதிவாகியுள்ள நிலையில் மொத்த வாக்குப்பதிவு விவரம் இன்னும் வெளியாகவில்லை.

    இந்நிலையில், 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது.

    இதில், ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்த இடங்கள் 199 ஆகும். இதில், பெரும்பான்மையாக பிடிக்க வேண்டிய இடங்கள் 101.

    கருத்துக் கணிப்பு முடிவுகளின் விவரம் வருமாறு:

    ராஜஸ்தானில் பாஜக கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

    சிஎன்என் நியூஸ் 18: பாஜக- 111, காங்கிரஸ்- 74, மற்றவை-14

    ஜன் கி பாத்: பாஜக 100- 122, காங்கிரஸ் 62- 85, மற்றவை 14- 15

    பி- மார்க்யூ: பாஜக 101- 125, காங்கிரஸ் 69- 81, மற்றவை 05- 15

    பால்ஸ்டிராட்: பாஜக 100- 110, காங்கிரஸ் 90- 100, மற்றவை 05-15

    டைம்ஸ் நவ்: பாஜக 108- 128, காங்கிரஸ் 56- 72, மற்றவை 13- 21

    இதையடுத்து, ராஜஸ்தானில் பாஜக கட்சி முன்னிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

    • 100 யூட்டுகள் வரை பயன்படுத்துவோர் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை என அறிவிப்பு.
    • அரசின் இந்த அறிவிப்பு தேர்தலை குறிவைத்தது என பாஜக விமர்சனம் செய்துள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கவும், பாஜக ஆட்சியை பிடிக்கவும் வியூகம் வகுத்து வருகிறது.

    இந்நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முதல் 100 யூனிட்டுக்கு இனி கட்டணம் செலுத்த வேண்டாம் என அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அசேக் கெலாட் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், " பணவீக்க நிவாரண முகாம்களை பார்வையிட்டேன். பின்னர் பொதுமக்களிடம் பேசிய பிறகு, மின்கட்டணத்தில் சிலாப் வாரியான விலக்குகளில் சிறிது மாற்றம் செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களிடமிருந்தும் கருத்துகள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 100 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். 100 யூட்டுகள் பயன்படுத்துவோர் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை. 200 யூனிட்டுகள் வரை நிலையான கட்டணம் வசூலிக்கப்படும் மற்றும் தாமத கூடுதல் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால், அரசின் இந்த அறிவிப்பு தேர்தலை குறிவைத்தது என பாஜக விமர்சனம் செய்துள்ளது.

    தனக்கு வாக்களிக்காவிட்டால் தூக்குபோட்டு தற்கொலை செய்வேன் என்று கூறி பா.ஜனதா வேட்பாளர் வாக்கு சேகரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #RajasthanElection #BJP
    ஜெய்ப்பூர்:

    200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ந்தேதி தேர்தல் நடக்கிறது. அங்கு பா.ஜனதா ஆட்சியை தக்க வைக்கவும், காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றவும் கடுமையாக போராடி வருகிறது.



    பா.ஜனதா மந்திரியான ஸ்ரீசந்த் கிருபலானிக்கு மீண்டும் டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் நிம்பஹாரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசும்போது மக்கள் எனக்கு வாக்களிக்காவிட்டால் தூக்கில் தொங்குவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். சித்தோ கட் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் திருப்பலானி பேசும் போது நீங்கள் எனக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற செய்யவேண்டும். அப்படி எனக்கு வாக்களிக்காவிட்டால் தூக்குபோட்டு தற்கொலை செய்வேன். என்று பேசினார்.

    அவரது இந்த பிரசார யுக்தி வாக்காளர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதே போல தெலுங்கானாவில் வேட்பாளர் ஒருவர் வித்தியாசமாக வாக்கு சேகரித்தார். சுகுலா ஹனுமந்த் என்பவர் கொருட்லா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

    அவர் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்கும்போது ஒரு ஜோடி செருப்பையும் கொடுக்கிறார்.

    எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் பொது இடத்தில் வைத்து இந்த செருப்பால் அடிக்குமாறு கூறி வாக்கு சேகரிக்கிறார். #RajasthanElection #BJP
    மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. #MadhyaPradeshelection #Congress

    புதுடெல்லி:

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், தெலுங்கானா, மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்ட சபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்கிறது.

    அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் முன்னோட்டமாக இருக்கும்.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்ற லட்சியத்துடன் ராகுல் காந்தி தீவிரமாக இருக்கிறார். இதற்காக அவர் பிரதமர் பதவியையும் விட்டு கொடுக்க தயார் என்று அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் மெகா கூட்டணிக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அதிரடியான முடிவை எடுத்துள்ளார். வர இருக்கும் சட்ட சபை தேர்தலில் அவர் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக களம் இறங்கும் முடிவை எடுத்துள்ளார். சத்தீஷ்கர் மாநில தேர்தலில் அஜீத் ஜோகியின் ஜனதா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியையும், தொகுதி பங்கீட்டையும் மாயாவதி இறுதி செய்துள்ளார்.

    இந்த நிலையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    அகில இந்திய தலைமை இந்த இரு மாநில தலைமையிடம் இது தொடர்பாக மாயாவதி பற்றி எச்சரித்து உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி எதுவும் வைக்க வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளது. சத்தீஷ்கரில் அஜித் ஜோகி கட்சியுடன் கூட்டணி முடிவை மாயாவதி எடுத்தால் காங்கிரஸ் தலைமை ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் தனித்து போட்டியிடுவது என்று தீர்மானித்துள்ளது.

     


    அதே நேரத்தில் சத்தீஷ்கர் மாநிலத்தில் இடது சாரிகள் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிடுகிறது.

    இங்கு காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையேயான ஓட்டு வித்தியாசம் 0.7 சதவீதமாகும் இதனால் இடது சாரிகள், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் ஆர்வத்தில் காங்கிரஸ் உள்ளது. 2013 தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக்கு 0.08 சதவீதமும் இந்திய கம்யூனிஸ்டுக்கு 0.66 சதவீதமும் தேசியவாத காங்கிரசுக்கு 0.3 சதவீதமும் ஓட்டுகள் கிடைத்தன.

    பகுஜன் சமாஜ் கட்சிக்கு 4.3 சதவீத ஓட்டுகள் கிடைத்தது. அந்த கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் பேச்சு வார்த்தை நடத்த இருந்த நிலையில் மாயாவதி இந்த முடிவு எடுத்துள்ளார். இதனால் காங்கிரஸ் அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளது.

    சட்டசபை தேர்தலில் மாயாவதி காங்கிரசுடன் கூட்டணி வைக்காமல் திடீரென முறித்துக் கொண்டதற்கு பல்வேறு நெருக்கடிதான் காரணம் என்று கூறப்படுகிறது.

    மாயாவதியின் சகோதரர் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தீவிர கண்காணிப்பில் உள்ளார். இதற்கு பயந்து தான் அவர் காங்கிரசுடன் கூட்டணி வைக்கவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சில காரணங்களால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். #MadhyaPradeshelection #Congress

    ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலுக்காக மக்களிடம் ஆன்லைன் மூலம் நிதி திரட்டும் பிரசாரத்தை மாநில காங்கிரஸ் இளம் தலைவர் சச்சின் பைலட் தொடங்கி வைத்தார். #Congress #RajasthanElection
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அங்கு சட்டசபை பதவிக்காலம் முடிவடைகிறது.

    200 தொகுதிகளை கொண்ட அந்த மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்கிறது.

    ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பா.ஜனதாவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் இப்போதே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

    ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி, தேர்தல் பிரசாரத்துக்கு நிதி இல்லாமல் தவிக்கிறது. இதனால் மக்களிடம் ஓட்டு கேட்பது மட்டுமல்லாமல் நிதியும் கேட்கிறது. ஆன்லைன் மூலம் நிதி திரட்டும் பிரசாரத்தை மாநில காங்கிரஸ் இளம் தலைவர் சச்சின் பைலட் தொடங்கி வைத்தார்.

    அவர் கூறும்போது, ‘‘அரசியல் நிதியில் வெளிப்படை தன்மையை கொண்டு வரும் நோக்கில் நாங்கள் செயல்பட உள்ளோம். இதனால் ராஜஸ்தான் காங்கிரஸ் நிதி பிரசாரத்துக்கு அனைத்து தரப்பினரும் உதவ வேண்டும்’’ என்றார்.

    முதல் நாளில் 168 ஆதரவாளர்களிடம் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.2.47 லட்சம் வசூலாகி உள்ளது. அதிகபட்சமாக ஒருவர் ரூ.25 ஆயிரம் நிதி வழங்கியுள்ளார். குறைந்த பட்சமாக ரூ.100 கிடைத்துள்ளது.

    பா.ஜனதாவின் பண பலத்துக்கு ஈடுகொடுக்க மாநில காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளது. #Congress #RajasthanElection
    ராஜஸ்தானில் தேர்தலுக்கு முன் முதல்-மந்திரி வேட்பாளர் பெயரை அறிவிக்கும் திட்டம் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது. #congress #Rajasthanelection

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்த தேர்தல் நடைபெறுவதால் இது, மினி பாராளுமன்ற தேர்தலாக கருதப்படுகிறது.

    தேர்தல் தேதி அறிவிப்புக்கான ஆயத்த பணிகளை தேர்தல் கமி‌ஷன் தொடங்கி இருக்கிறது. அதே போல் அனைத்து கட்சிகளும் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.

    ராஜஸ்தானில் ஆளும் கட்சியாக பாரதிய ஜனதா உள்ளது. அங்கு வலுவான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது.

    அந்த மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தல்கள் பலவற்றிலும், உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கிறது.


    எனவே, காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதுகின்றனர்.

    அதே நேரத்தில் எல்லா மாநிலத்திலும் நிலவுவது போலவே ராஜஸ்தான் மாநில காங்கிரசிலும் கடுமையான கோஷ்டி பூசல் நிலவுகிறது.

    சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால யார் முதல்-மந்திரி என்பதில் உறுதியான முடிவுகள் எதுவும் எடுக்கப் படவில்லை.

    முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் மற்றும் சில தலைவர்கள் முதல்-மந்திரி பதவி போட்டியில் உள்ளனர்.

    அங்கு பாரதிய ஜனதாவில் வசுந்தரராஜேவை மீண்டும் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்துள்ளனர். அதே போல் காங்கிரஸ் கட்சியிலும் முதல்-மந்திரி வேட்பாளர் பெயரை முன்கூட்டி அறிவிக்க வேண்டும் என்ற கோ‌ஷம் எழுந்துள்ளது.

    ஆனால், முதல்-மந்திரி வேட்பாளர் பெயரை முன் கூட்டி அறிவிக்கும் திட்டம் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளரும், ராஜஸ்தான் மாநில பொறுப்பாளருமான அவினேஷ் பாண்டே கூறும்போது, கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளர் பெயரை முன்கூட்டி அறிவிக்க மாட்டோம்.

    ராகுல் காந்தி தலைமையில் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணிகளை கூட்டாக செய்வோம். முதல்-மந்திரி யார்? என்பது தேர்தலுக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று கூறினார். #congress #Rajasthanelection

    ×