search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vote"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுக்கோட்டையில் மாதிரி வாக்கு பதிவு நடைபெற்றது
    • கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் நடத்தினார்

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்கு பதிவு எந்திரம் வைப்பறையில் வைக்கப்பட்டுள்ள வாக்கு பதிவு எந்திரங்களை கொண்டு, மாதிரி வாக்கு பதிவு நடத்தி பார்க்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த மாதிரி வாக்கு பதிவை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நடத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பஞ்குடியினர் நல அலுவலர் ஸ்ரீதர், தேர்தல் தனி வட்டாட்சியர் சோனை கருப்பையா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜனநாயக முறைப்படி வாக்களித்தற்காக முதியோர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
    • தஞ்சாவூர் மாவட்டத்தில் 20 முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

    தொடர்ந்து சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற முதியோர்களுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.

    மேலும் 80 வயதுக்கு ேமற்பட்ட முதியோர்கள் ஜனநாயக முறைப்படி வாக்களித்தற்காக தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

    இதையடுத்து "இந்திய குடிமகன் குடிமகளாகிய நான், முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் எனவும், மனோரீதியாகவும் உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் எனவும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்.

    பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கெதிரான கொடுஞ்செயல்கள், வன்மு றைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதனை தடுத்திட பாடுபடுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன்."

    என்ற உறுதிமொழி வாசிக்க அனைத்து அரசு அலுவலர்களும் அதனை பின் தொடர்ந்து வாசித்தனர்.

    பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரி வித்ததாவது:-

    தமிழ்நாட்டில் அதிக ரித்து வரும் ஆதரவற்ற முதியோர்களின் எண்ணிக்கையினை கருத்தில் கொண்டு அவர்களின் நலன் காக்க சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் ஆதரவற்ற முதியோர்களுக்கான இல்லங்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 20 முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. இதுவரை 19 முதியோர் இல்லங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1 முதியோர் இல்லம் பதிவு செய்யப்பட நடவடிக்கையில் உள்ளது.

    அனைத்து முதியோர் இல்லங்களில் உள்ள முதியவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 2007ன் கீழ் 187 மனுக்கள் பெறப்பட்டு, 182 மனுக்கள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி சுதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இஸ்லாமிய மக்களின் ஒவ்வொரு உரிமைகளையும் பறித்து வருகிறது.
    • 2024 தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கு வங்கியை இவர்கள் கெடுத்து விடுவார்கள்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நிருபர்களை சந்தித்த ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஹைதர் அலி கூறியதாவது,

    இந்திய தேசம் ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் சென்று கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

    இந்திரா காந்தி அவசரகால சட்டம் கொண்டு வந்த போது கூட சில அடக்குமுறைகளை செய்தாலும் பல்வேறு நல்ல விஷயங்கள் நடைபெற்றது.

    ஆனால் இன்று அது போன்ற அவசர கால சட்டம் இல்லாமல் பல்வேறு அடக்குமுறைகளை பார்த்து வருகிறோம்.

    இந்தியா முழுவதும் 17 மாநிலங்களில் இயங்கி வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்கிற இஸ்லாமிய வெகுஜன அமைப்பை பா.ஜனதா அரசு தடை செய்துள்ளது.

    தொடர்ந்து இஸ்லாமிய மக்களின் ஒவ்வொரு உரிமைகளையும் பறித்து வருகிறது. குறிப்பாக காஷ்மீரில் அந்த மக்களுக்கு இருந்த தனி அந்தஸ்து என்கிற சட்டத்தை நீக்கியது.

    பிஎப்ஐ பல்வேறு சமூக சேவைகளை செய்து வந்துள்ளது.

    குறிப்பாக கொரோனா காலங்களிலும் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சேவைகளை செய்துள்ளனர்.

    இவர்களைத்தான் தேச விரோத சக்திகள் என ஒன்றிய அரசு கூறி தடை செய்துள்ளது அதேபோல் இஸ்லாமியர்களை பழிவாங்கும் விதமாக சி.ஏ.ஏ என்.சி.ஆர் உள்ளிட்ட கருப்பு சட்டங்களை ஒன்றிய அரசு இயற்றியது.

    அதனை எதிர்த்து இந்தியா முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களை பி.எப்.ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளும் வெற்றிகரமாக செய்து முடித்தது என்பதை கருத்தில் கொண்டு 2024 தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கு வங்கியை இவர்கள் கெடுத்து விடுவார்கள்.

    பாசிச ஆட்சிக்கு எதிராக முஸ்லிம்கள் வாக்கு திரும்பிவிடும் என்பதாலேயே பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா என்கிற இந்த அமைப்பை வீண்பழி சுமத்தி தேச விரோதிகள் எனக்கூறி தடை செய்துள்ளனர்.

    இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

    காந்தி ஜெயந்திக்கும் ஆர்எஸ்எஸுக்கும் என்ன தொடர்பு உள்ளது? காந்தியையும் காந்தி கொள்கையையும் விமர்சித்தவர்கள் ஆங்கிலேயர் ஆட்சியை ஆதரித்தவர்கள் இந்த ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இவர்கள் காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்திலே பேரணி நடத்த உள்ளார்கள்.

    இதற்கு நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது.

    தமிழக அரசு இதில் என்ன செய்யப் போகிறது.

    ஆகவே உடனடியாக தமிழக அரசு மேல்முறையீடு செய்து இந்த பேரணியை தடுத்து நிறுத்த வேண்டும்.

    இதனால் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படும்.

    எடப்பாடி ஆட்சியில் கூட அனுமதி கிடைக்கவில்லை.

    ஆனால் தற்போது அனுமதி கிடைக்கும் என்கிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    அப்போது மாநிலத் துணைத் தலைவர் முசாஹூதீன், மாவட்டத் தலைவர் முதியுதீன், மாவட்ட செயலாளர் ஹாஜா மொய்தீன், மாவட்ட துணை செயலாளர் முகமது மசாயிக், மாநில ஊடக அணி துணை செயலாளர் ப ஷிர் அகமது, நகர தலைவர் ரபீர் ஆகிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2003ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
    • 6 நீர் மேலாண்மை திட்டங்கள் பரிந்துரைக்கு எடுக்கப்பட்டுள்ளது

    திருப்பூர் :

    மக்களின் சமூக மேம்பாட்டுக்கு பயன்தரும் வகையில், நாடு முழுக்க செயல்பட்டு வரும் தனி நபர்கள், பொது மற்றும் அரசுத்துறை நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றில் அவரவர் துறை சார்ந்து சிறப்பாக செயல்படுபவர்களுக்கு ஸ்கோச் என்ற அமைப்பு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

    கடந்த 2003ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. பல துறைகளை சேர்ந்த வல்லுனர்களை தேர்வாளர்களாக கொண்டுள்ள இந்த விருதுக்குழு தற்போது சிறந்த நீர் மேலாண்மை திட்டத்தை தேர்வு செய்து வருகிறது. இதற்கான போட்டி கடந்த 12ந் தேதி துவங்கியது. தமிழக அளவில் 6 நீர் மேலாண்மை திட்டங்கள் பரிந்துரைக்கு எடுக்கப்பட்டுள்ளது.இதில் கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி, 1,752 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும், அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டமும் இடம் பிடித்துள்ளது.

    மேலும் தாமிரபரணி- நம்பியாறு - கருமேனியாறு இணைப்பு திட்டம், மேட்டூர் - சரபங்கா நீரேற்று திட்டம்,திருச்சி முக்கொம்பு கதவணை திட்டம், நாகபட்டினம், ஆதனூர் -குமாரமங்கலம் கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டும் திட்டம், கரூர் அருகே காவிரியாற்றில் தடுப்பணை கட்டும் திட்டம் உள்ளிட்ட 5 திட்டங்களும் போட்டிக்கான பரிந்துரை பட்டியலில் உள்ளன.முதற்கட்டமாக இத்திட்டங்கள் சார்ந்த விரிவான அறிக்கையை நீர்வளத்துறை அதிகாரிகள், விருது கமிட்டியிடம் சமர்பித்துள்ளனர். இரண்டாம் கட்டமாக இத்திட்டங்களுக்கு பொதுமக்களின் ஆதரவை அறிந்துகொள்ளும் வகையில் இணைய வழி ஓட்டெடுப்பு நடத்தப்படுகிறது.இன்று வரை ஓட்டளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இடைத்தேர்தலில் 9 ஆயிரத்து 510 வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள்.
    • வாக்குச்சாவடி பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியல் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழகத்தில் காலியாக உள்ள 510 ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கான இடைத்தேர்தல் இன்று தொடங்கியது. காலியாக உள்ள 498 ஊரக உள்ளாட்சி பதவியிடங்கள், 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் 9 ஆயிரத்து 510 வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து பொருட்களும் நேற்று மாலை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்தனர். இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியல் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வரும் 12-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 4 மாநிலங்களில் உள்ள 16 மாநிலங்களவை இடத்துக்கு 22 பேர் போட்டியிடுவதால் தேர்தல் நடைபெறுகிறது.
    • ஏற்கனவே தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் போட்டியின்றி 41 எம்பிக்கள் தேர்வாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இன்று மாலை 4 மணி வரை நடைபெற உள்ள தேர்தலில் எம்எல்ஏக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

    மகாராஷ்டிராவில் 6, கர்நாடகா, ராஜஸ்தானில் தலா 4, ஹரியானாவில் 2 எம்.பி. இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 4 மாநிலங்களில் உள்ள 16 மாநிலங்களவை இடத்துக்கு 22 பேர் போட்டியிடுவதால் தேர்தல் நடைபெறுகிறது.

    மகாராஷ்டிராவில் 6 இடங்களில் பாஜகவுக்கு 2, காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரசிற்கு தலா ஒரு இடமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் எஞ்சிய ஒரு இடத்திற்கு கடும் போட்டி நிலவுவதால் மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது.

    இதேபோல், கர்நாடகாவில் 4 இடத்துக்கு பாஜகவில் 3, காங்கிரஸில் 2, மஜதவில் ஒருவர் என 6 பேர் போட்டியிடுகின்றனர். ராஜஸ்தானில் 4 இடத்துக்கு காங்கிரஸில் 3 பேர், பாஜகவில் ஒருவர், பாஜக ஆதரவுடன் சுயேச்சை என 5 பேர் போட்டியிடுகின்றனர். அரியானாவில் 2 இடங்களுக்கு பாஜக, காங்கிரஸில் தலா ஒருவர், பாஜக ஆதரவுடன் சுயேச்சை என 3 பேர் போட்டியிடுகின்றனர்.

    ஏற்கனவே தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் போட்டியின்றி 41 எம்பிக்கள் தேர்வாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது ஒரு சவால் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், இந்த தேர்தல் பணிகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த தேர்தலை சிறப்பாக நடத்தியதற்கு, தேர்தல் பணியாற்றிய அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் அளித்த பயிற்சி ஒரு காரணமாக இருந்தது. நாங்கள் அளித்த பயிற்சி, கீழ்நிலை பணியாளர்கள் வரை சென்று, தேர்தலை நல்லபடியாக நடத்த உதவியது. பயிற்சிக்கு மேல் பயிற்சி அளித்தால் எந்தத் தவறும் இல்லாமல் தேர்தலை நடத்திவிட முடியும் என்பதுதான் நான் கண்ட உண்மை.

    அரசியல் வட்டாரத்தில் இருந்து குற்றச்சாட்டுகள் வந்தாலும் அதில் உண்மை இருக்கிறதா? என்று பார்ப்பேன். குற்றச்சாட்டுகளை சாதகமாக எடுத்துக்கொண்டேன். இந்த தேர்தல் மூலம் பல விஷயங்களை புதிதாக படித்தேன். பத்திரிகையாளர்களின் அறிவுரைகளும் கிடைத்தன.

    சமூக வலைதளங்களில் என் மீது வரும் விமர்சனங்களைப் படிப்பதற்கு எனக்கு நேரம் கிடைக்கவில்லை. 12 மணி நேரம் வேலையில் ஈடுபட வேண்டியிருந்தது. எனவே விமர்சனங்களை எல்லாம் ஒரு பிரச்சினையாக பார்க்கவில்லை.

    தேர்தல்களின்போது ஓட்டுக்கு பணப்பட்டுவாடாவை தடுப்பது எங்களுக்கு ஒரு சவால்தான். சமுதாயத்தை நான் ஒருவரே திருத்திவிட முடியாது. சமுதாயத்தில் இருந்து எழும் பிரச்சினைகளுக்கு அந்த சமுதாயமே தீர்வு காணவேண்டும். பணப்பட்டுவாடாவை தவிர்க்க புதிய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகங்கள், பத்திரிகைகள் போன்றவை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    என்னிடம் தரப்பட்ட புகார்களை விசாரிக்க நான் காலம் தாழ்த்தவில்லை. உடனடி நடவடிக்கைக்கு நாங்கள் ஏற்பாடு செய்தோம். எல்லா நிகழ்வையும் நாங்கள் உன்னிப்பாக கவனித்தோம். எதையும் இலகுவாக விட்டுவிடவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஈரான் அரசின் அணு உற்பத்தி திட்டங்கள் தொடர வேண்டுமா? என்பது தொடர்பாக மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார்.
    டெஹ்ரான்:

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவால் உலகளாவிய அளவில் தங்கள் நாட்டின் மீதான நன்மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்தார்.

    அமைதியான முறையில் ஆக்கப்பூர்வமான தேவைகளுக்கு யூரேனியத்தை செறிவூட்டும் உரிமை ஈரானுக்கு உள்ளதாகவும் தெரிவித்த ரவுகானி, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம். எங்கள் நாட்டின் சுதந்திரத்தையும், இஸ்லாமிய நன்முறைகளையும் பாதுக்காக்க ஒருநாளும் தவற மாட்டோம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

    சில இடங்களில் ஈரான் அரசு ரகசியமாக அணு உலைகளை அமைத்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை குற்றம்சாட்டி வருகிறது. 

    இதற்கிடையில், அமெரிக்காவுடன் நான் செய்த ஒப்பந்தத்தை ஒழுங்கான முறையில் நிறைவேற்ற ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தவறி விட்டதாக அந்நாட்டின் முதுபெரும் தலைவரான ஹயாத்துல்லா கமேனி சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    ஹயாத்துல்லா கமேனி

    இந்நிலையில், தலைநகர் டெஹ்ரானில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி, 'கடந்த 2004-ம் ஆண்டுவாக்கில் அமெரிக்க அரசுடன் அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் கையொப்பமிடுவதற்கு முன்னதாகவே இவ்விவகாரம் தொடர்பாக நமது நாட்டு மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என நான் வலியுறுத்தி இருந்தேன். அதற்கு ஹயாத்துல்லா கமேனியும் சம்மதம் தெரிவித்தார்.

    ஆனால், அப்போது பொது வாக்கெடுப்பு நடத்தப்படாவிட்டாலும் இதைப்போன்ற ஒரு பொது வாக்கெடுப்பு என்பது எந்நேரத்திலும் நமக்கு சிறந்த தீர்வை அளிக்கக் கூடியதாக அமையும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வாக்கு எந்திரங்கள் மாற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதை அடுத்து தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக நடந்த தேர்தலில் 67.11 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    வேலூர் தவிர 542 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அந்தந்த பகுதி ஓட்டு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

    மின்னணு எந்திரங்கள் இருக்கும் அறையை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தவிர கட்சிகளின் முகவர்களும் மின்னணு எந்திரங்களின் பாதுகாப்புக்காக அங்கேயே தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். வெளியில் இருந்தபடியே ரேடியோ அலைகள் மூலம் மின்னணு எந்திரங்களில் உள்ள பதிவை மாற்ற முடியும் என்ற புதிய குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் நாடு முழுவதும் சில குறிப்பிட்ட தொகுதிகளில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக மின்னணு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. சமீபத்தில் தேனி, மதுரை தொகுதிகளில் அப்படி எந்திரங்களை மாற்ற முயற்சி நடப்பதாக எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தேர்தல் ஆணைய அதிகாரிகள் இதற்கு விளக்கம் அளித்தனர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்னணு எந்திரங்களை கொண்டு சென்று இருப்பு வைப்பதாக தெரிவித்தனர். அதன் பிறகே அமைதி திரும்பியது.

    இந்த நிலையில் வட மாநிலங்களில் பல தொகுதிகளில் மின்னணு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக நேற்று முதல் சமூக வலைதளங்களில் பரபரப்பாக தகவல்கள் பரவியபடி உள்ளன. குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் இந்த பரபரப்பு அதிகளவில் பரவி உள்ளது.

    அந்த சமூக வலைதள தகவல்களில் மின்னணு எந்திரங்களை ஒட்டு மொத்தமாக மாற்றவும் சில இடங்களில் மின்னணு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்யவும் முயற்சி நடப்பதாக படங்களுடன் தகவல்கள் பரவியது. இதனால் எதிர்க்கட்சியினர் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     


    உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள காசிப்பூர் தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் மத்திய மந்திரி மனோஜ்சின்கா, பகுஜன் சமாஜ் சார்பில் அப்சல் அன்சாரி போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதியில் பதிவான வாக்குகளை கொண்ட மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த அறைக்குள் நேற்று இரவு சிலர் செல்ல முயன்றனர்.

    அவர்கள் அங்கிருந்த மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை ஒரு வாகனத்தில் ஏற்றி செல்ல முயன்றதாக தகவல் பரவியது. இதையடுத்து ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறை முன்பு அன்சாரியும் அவரது ஆதரவாளர்களும் திரண்டு வந்து தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் காசிப்பூர் தொகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

    இதற்கிடையே உத்தர பிரதேச மாநிலம் சந்தவுலி தொகுதியிலும் ஓட்டுப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக தகவல் பரவியது. இந்த தொகுதிக்குரிய மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்துக்கு நேற்று இரவு ஒரு லாரியில் ஏராளமான எந்திரங்கள் கொண்டு வந்து இறக்கப்பட்டன.

    ஓட்டுப்பதிவு நிறைவு பெற்று 2 நாட்களுக்கு பிறகு லாரியில் இருந்து புதிதாக மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்கள் இறக்கப்பட்டதால் அந்த தொகுதி சமாஜ்வாடி தொண்டர்களுக்கு சந்தேகம் எழுந்தன. அவர்கள் அதை வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்.

    சந்தவுலி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை வெற்றி பெற செய்வதற்காக திட்டமிட்டு ஓட்டுப்பதிவு எந்திரங்களை மாற்றுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டது. ஆனால் இதை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

    இது தொடர்பாக தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “சந்தவுலி தொகுதியில் 35 மின்னணு எந்திரங்கள் முன் எச்சரிக்கையாக வைக்கப்பட்டு இருந்தன. ஏதாவது வாக்குச்சாவடியில் எந்திரங்கள் பழுதானால் அங்கு பயன்படுத்துவதற்காக இந்த 35 ஓட்டுப்பதிவு எந்திரங்களும் கையிருப்பு வைக்கப்பட்டு இருந்தன. அந்த 35 எந்திரங்களைதான் நாங்கள் லாரியில் இருந்து எடுத்து வந்து இறக்கி வைத்தோம்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

    ஆனால் இதை சமாஜ்வாடி தொண்டர்கள் ஏற்க மறுத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    உத்தரபிரதேசத்தில் டுமரியாகஞ்ச் தொகுதியிலும் மினி லாரி மூலம் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் கொண்டு வந்து மாற்றம் செய்யப்பட்டதாக பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த தொகுதியில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தது.

    போராட்டங்கள் வலுத்ததால் மினி லாரியில் கொண்டு வரப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்து எடுத்து வேறு பகுதிக்கு கொண்டு சென்றனர்.

    ஜான்சி தொகுதியிலும் ஓட்டுப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சி நடந்ததாக சமூக வலைதளங்களில் நேற்று முதல் பரபரப்பு தகவல் வெளியானது. பஞ்சாப், அரியானா, பீகார் மாநிலங்களிலும் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    பீகாரில் மகாராஜ் கஞ்ச், சரண் தொகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களுடன் லாரிகள் சுற்றி வருவதை லாலு பிரசாத் கட்சி தொண்டர்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

    இதனால் பீகாரிலும் பல இடங்களில் இன்று போராட்டம் நடைபெற்றது. வட மாநிலங்களில் சுமார் 20 தொகுதிகளில் மின்னணு எந்திரங்களை மாற்ற முயற்சி நடந்ததாக எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுகளை தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிரடியாக மறுத்துள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    உத்தரபிரதேசத்தில் சில தொகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மாற்றப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி உள்ள தகவல்களில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. தேவையில்லாமல் வதந்தியை பரப்பும் வகையில் இதை யாரோ செய்துள்ளனர். திட்டமிட்டு இத்தகைய சதியில் யாரோ ஈடுபட்டுள்ளனர்.

    எந்த ஒரு தொகுதி வாக்குகளும் தில்லுமுல்லு செய்து மாற்றப்படவில்லை. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் உரிய முறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த எந்திரங்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கின்றன.

    நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்களும், ஒப்புகை சீட்டு எந்திரங்களும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் முன்னிலையில்தான் சீல் வைத்து மூடப்பட்டன. அப்படி சீல் வைக்கப்பட்டது முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சீல் வைக்கப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்பு படையினர் ஒவ்வொரு ஓட்டு எண்ணும் மையம் முன்பும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இத்தகைய பலத்த பாதுகாப்பை மீறி யாரும் உள்ளே சென்று விட முடியாது.

    தேர்தல் ஆணையம் செய்துள்ள பாதுகாப்பை தவிர வேட்பாளர்களும் தங்களது முகவர்கள் மூலம் மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை முன்பு பாதுகாப்பில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் 24 மணி நேரமும் அங்குதான் இருக்கிறார்கள்.

    இவற்றையெல்லாம் மீறி எப்படி மின்னணு எந்திரங்களை கடத்தி சென்று விட முடியும். எனவே அடிப்படை ஆதாரமே இல்லாத இத்தகைய குற்றச்சாட்டுகளை யாரும் நம்ப வேண்டாம்.

    உத்தரபிரதேசத்தில் சில தொகுதிகளில் பயன்படுத்தாத அதாவது கையிருப்பு வைக்கப்பட்டு இருந்த மின்னணு எந்திரங்களை கொண்டு சென்றபோது தான் அதுபற்றி தெரியாமல் வதந்தியை பரப்பி விட்டனர். அத்தகைய இடங்களில் மின்னணு எந்திரம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    அதை அனைத்துக் கட்சியினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனால் பிரச்சினை தீர்ந்துள்ளது. பயன்படாத மின்னணு எந்திரங்களை கொண்டு செல்வது தொடர்பாக இப்போது நாங்கள் உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம்.

    ஜான்சி தொகுதியிலும் பயன்படாத மின்னணு எந்திரங்களை கொண்டு சென்றதால்தான் கட்சி தொண்டர்கள் சந்தேகத்தில் வதந்தியை பரப்பிவிட்டனர். தற்போது அங்கும் உரிய விளக்கம் அளித்த பிறகு பிரச்சினை தீர்ந்துள்ளது.

    இவ்வாறு அந்த தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp