search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "madhya pradesh election"

    • ம.பி.யில் வரும் நவம்பர் மாதம் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது
    • கார்கே தலைமையில் காங்கிரஸ் கட்சி கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது

    இந்தியாவின் மாநிலமான மத்திய பிரதேசத்தில் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

    2018-ல் இங்குள்ள சட்டசபைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களை வென்று, கமல் நாத் தலைமையில் ஆட்சியை பிடித்தது. பா.ஜ.க.விற்கு 109 இடங்கள் மட்டுமே கிடைத்தது.

    ஆனால், மார்ச் 2020ல், காங்கிரஸ் கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கமல்நாத் அரசை எதிர்த்து தனது அணியுடன் பா.ஜ.க.வை ஆதரித்ததால், பா.ஜ.க. அரசு சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. தற்போது அங்கு அவர் தலைமையில் பா.ஜ.க.வின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ம.பி.யில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பரில் நடக்க இருக்கிறது. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் இங்கு கடுமையாக போட்டி போடுகின்றன.

    மத்திய பிரதேச பண்டல்கண்ட் பகுதியில் 6 மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் ஒன்றான சாகர் எனும் பகுதியில், ஒரு பொதுக்கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், மாநிலங்களவை எதிர்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே உரையாற்றினார்.

    காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்ற பிறகு இப்போதுதான் கார்கே முதல்முறையாக மத்திய பிரதேசத்திற்கு வந்திருக்கிறார். கார்கேயின் தலைமையில் சில மாதங்களுக்கு முன்பாக கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. இப்பின்னணியில் அவர் உரையில் மக்களுக்கு அக்கட்சி சார்பில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

    எதிர்பார்த்ததை போலவே வாக்காளர்களை ஈர்க்கும் பல சலுகைகளை அவரது உரையில் உறுதியளித்தார். அதன்படி, எல்.பி.ஜி. சிலிண்டர்கள் ரூ.500-க்கு வழங்கப்படும். பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும். முதல் 100 யூனிட்டுகள் வரை நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டாம். சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கப்படும், என்று அவர் தெரிவித்தார்.

    தேர்தல் நெருங்கும் போது இரு கட்சிகளின் சலுகைகளும் முழுவதுமாக தெரிய வரும்.

    மத்தியபிரதேசம், மிசோரம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. வரும் 28-ம் தேதி வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. #Campaigningends #MPpolls #Mizorampolls
    போபால்:

    மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலை, தலைமை தேர்தல் ஆணையம் தற்போது நடத்தி வருகிறது.

    முதலில் சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு கடந்த 12 மற்றும் 20-ந்தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. அம்மாநிலத்தில் சராசரியாக 73 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    அடுத்தகட்டமாக மத்தியபிரதேசம், மிசோரம் மாநிலங்களில் நாளை மறுநாள் (புதன்கிழமை) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மத்தியபிரதேசம் மாநிலத்தில் 230 தொகுதிகள் உள்ளன. மிசோரம் மாநிலத்தில் 40 தொகுதிகள் இருக்கின்றன.

    இந்த இரு மாநிலங்களிலும் வரும் 28-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்ற கடந்த ஒரு மாதமாக தீவிர தேர்தல் பிரசாரம் நடந்தது. இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் இரு மாநிலங்களிலும் முற்றுகையிட்டு மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்கள்.

    கடந்த ஒரு வாரமாக மத்திய பிரதேசத்திலும், மிசோரமிலும் உச்சக்கட்ட அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது. இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணியுடன் இரு மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. 28-ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறும்.

    வாக்குப்பதிவை சுமுகமாகவும், நியாயமாகவும் நடத்தி முடிக்க இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றமானவை கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் துணைநிலை ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட உள்ளனர்.

    இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவை முழுமையாக வீடியோவில் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று மாலை ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் இடங்களுக்கு எடுத்துச் சென்று பாதுகாக்கப்படும்.

    ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களில் வரும் 7-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிந்ததும் 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் டிசம்பர் 11-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும். #Campaigningends #MPpolls #Mizorampolls
    ம.பி. மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜனதா வெளியிட்டுள்ளது. அதில் 12-ம் வகுப்பு பொது தேர்வில் 75 சதவித மதிப்பெண்களுக்கு மேல் பெறும் மாணவிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டி வழங்கப்படும். என்று கூறப்பட்டுள்ளது. #MadhyaPradeshelection #bjpelectionmanifesto

    போபால்:

    230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநில சட்டசபைக்கு வருகிற 28-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    பா.ஜனதா தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை வெல்லும் வேட்கையில் இருக்கிறது.

    இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜனதா வெளியிட்டுள்ளது. மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி, முதல்- மந்திரி சிவ்ராஜ்சிங் சவுகான் ஆகியோர் இதை வெளியிட்டனர்.

    இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்து. பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    ஏழைகளுக்கு இலவச கல்வி வசதி அளிக்கப்படும். 12-ம் வகுப்பு பொது தேர்வில் 75 சதவித மதிப் பெண்களுக்கு மேல் பெறும் மாணவிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டி வழங்கப்படும்.

    மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் முன்னேற்றம் அடையும் வகையில் ஆண்டுக்கு 10 லட்சம் வேலை வாய்ப்புகள் மற்றும் சுயமாக தொழில் முனையும் வாய்ப்புகள் உருவாக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தொழில் துறை திட்டங்கள் செயல் படுத்தப்படும். 10 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வசதி செய்து தரப்படும்.

    விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.40 ஆயிரம் கோடிக்கு கடன் வழங்கப்படும். சாகுபடி நிலப்பரப்பு அடுத்த 5 ஆண்டுகளில் 80 லட்சம் ஹெக்டேர்களாக அதிகரிக்கப்படும்.

    இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர். #MadhyaPradeshelection #bjpelection manifesto

    மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் 80 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட அனுமதி அளிப்பது இல்லை என்று பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளது. #BJP #MadhyaPradeshelection

    போபால்:

    230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப்பிரதேச மாநில சட்டசபைக்கு வருகிற நவம்பர் 28-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.

    கடந்த 15 ஆண்டுகளாக முதல்-மந்திரி சவுகான் தலைமையில் மத்தியப்பிர தேசத்தில் பா.ஜனதா ஆட்சியில் இருந்து வருகிறது.அங்கு மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பா.ஜனதா செயல்பட்டு வருகிறது.

    மறுபுறம் காங்கிரசும் ஆட்சியைக் கைப்பற்ற தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜனதா ஆட்சிக்கு எதிராக நிலவும் அதிருப்தி அலையை காங்கிரஸ் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் வகையில் பிரசார வியூகம் அமைத்து செயல்படுகிறது.

    தற்போது வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. இந்த தேர்தலில் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் 80 பேருக்கு மீண்டும் தேர்தல் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என தெரிய வருகிறது.


    எம்.எல்.ஏ.க்கள் பற்றி பா.ஜனதா ரகசிய கருத்து கணிப்பு நடத்தியது. இதே போல் பிரதமர் மோடியின் ‘நமோ ஆப்’ செயலிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பற்றி ஏராளமான புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் புகாருக்கு ஆளாக எம்.எல்.ஏ.க்களுக்கும், மக்கள் மத்தியில் அதிருப்திக்கு ஆளான எம்.எல்.ஏ.க்களுக் கும் மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதி அளிப்பது இல்லை என்று பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளது.

    அதன்படி மொத்தம் 80 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதே போல சில அமைச்சர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சம்பந்தப்பட்ட எம்.எல். ஏ.க்கள் மீது மக்களிடையே அதிருப்தி நிலவுவதால் அவர்களை மீண்டும் வேட்பாளர்களாக களம் இறக்கினால் தேர்தல் வெற்றி பாதிக்கப்படும் என்றும் அதன் காரணமாகவே இந்த முடிவுக்கு பா.ஜனதா வந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இம்முறை புதுமுகங்களை வேட்பாளர்களாக களம் இறக்கலாம் என முதல்- மந்திரி சிவராஜ்சிங் சவுகான் முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. #BJP #MadhyaPradeshelection

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும் இன்று மத்திய பிரதேச மாநிலத்தில் போட்டி போட்டுக் கொண்டு பிரசாரம் செய்கிறார்கள். #Congress #BJP #RahulGandhi #AmitShah #MadhyaPradeshelection

    இந்தூர்:

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சிவராஜ்சிங் சவுகான் முதல் மந்திரியாக இருக்கிறார்.

    இந்த முறையாவது மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற வேட்கையில் காங்கிரஸ் உள்ளது. அதே நேரத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் பா.ஜனதா இருக்கிறது.


    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பா. ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும் இன்று மத்திய பிரதேச மாநிலத்தில் போட்டி போட்டுக் கொண்டு பிரசாரம் செய்கிறார்கள்.

    மொரினாவில் நடைபெறும் பழங்குடியினர் மற்றும் விவசாயிகள் மாநாட்டில் ராகுல் காந்தி பேசுகிறார். பின்னர் ஜபல்பூர் சென்று நர்மதா நதி கரையில் நடைபெறும் பூஜையில் கலந்து கொள்கிறார். அவர் சாலையில் ஊர்வலமாக சென்று கட்சி தொண்டர்களையும், மக்களையும் சந்திக்கிறார்.

    கடந்த 20 நாட்களில் ராகுல் காந்தி 3-வது முறையாக மத்திய பிரதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

    இதே போல பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும், மத்திய பிரதேசத்தில் இன்று ஒரு நாள் பிரசாரம் செய்கிறார். இந்தூரில் உள்ள மால்வாட் நிமாட் பகுதியில் அவர் பேசுகிறார். கிருஷ்ணாபுர பகுதியில் பேரணியை தொடங்கி வைத்து சிறிது தூரம் நடந்து செல்கிறார். அமித்ஷாவுடன் மாநில முதல் மந்திரி சவுகானும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    இதேபோல பிரதமர் நரேந்திரமோடி இன்று ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். #Congress #BJP #RahulGandhi #AmitShah #MadhyaPradeshelection

    மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. #MadhyaPradeshelection #Congress

    புதுடெல்லி:

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், தெலுங்கானா, மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்ட சபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்கிறது.

    அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் முன்னோட்டமாக இருக்கும்.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்ற லட்சியத்துடன் ராகுல் காந்தி தீவிரமாக இருக்கிறார். இதற்காக அவர் பிரதமர் பதவியையும் விட்டு கொடுக்க தயார் என்று அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் மெகா கூட்டணிக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அதிரடியான முடிவை எடுத்துள்ளார். வர இருக்கும் சட்ட சபை தேர்தலில் அவர் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக களம் இறங்கும் முடிவை எடுத்துள்ளார். சத்தீஷ்கர் மாநில தேர்தலில் அஜீத் ஜோகியின் ஜனதா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியையும், தொகுதி பங்கீட்டையும் மாயாவதி இறுதி செய்துள்ளார்.

    இந்த நிலையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    அகில இந்திய தலைமை இந்த இரு மாநில தலைமையிடம் இது தொடர்பாக மாயாவதி பற்றி எச்சரித்து உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி எதுவும் வைக்க வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளது. சத்தீஷ்கரில் அஜித் ஜோகி கட்சியுடன் கூட்டணி முடிவை மாயாவதி எடுத்தால் காங்கிரஸ் தலைமை ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் தனித்து போட்டியிடுவது என்று தீர்மானித்துள்ளது.

     


    அதே நேரத்தில் சத்தீஷ்கர் மாநிலத்தில் இடது சாரிகள் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிடுகிறது.

    இங்கு காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையேயான ஓட்டு வித்தியாசம் 0.7 சதவீதமாகும் இதனால் இடது சாரிகள், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் ஆர்வத்தில் காங்கிரஸ் உள்ளது. 2013 தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக்கு 0.08 சதவீதமும் இந்திய கம்யூனிஸ்டுக்கு 0.66 சதவீதமும் தேசியவாத காங்கிரசுக்கு 0.3 சதவீதமும் ஓட்டுகள் கிடைத்தன.

    பகுஜன் சமாஜ் கட்சிக்கு 4.3 சதவீத ஓட்டுகள் கிடைத்தது. அந்த கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் பேச்சு வார்த்தை நடத்த இருந்த நிலையில் மாயாவதி இந்த முடிவு எடுத்துள்ளார். இதனால் காங்கிரஸ் அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளது.

    சட்டசபை தேர்தலில் மாயாவதி காங்கிரசுடன் கூட்டணி வைக்காமல் திடீரென முறித்துக் கொண்டதற்கு பல்வேறு நெருக்கடிதான் காரணம் என்று கூறப்படுகிறது.

    மாயாவதியின் சகோதரர் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தீவிர கண்காணிப்பில் உள்ளார். இதற்கு பயந்து தான் அவர் காங்கிரசுடன் கூட்டணி வைக்கவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சில காரணங்களால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். #MadhyaPradeshelection #Congress

    மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபிஏடி கருவிகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் மனு தாக்கல் செய்துள்ளது. #Congress

    புதுடெல்லி:

    மத்திய பிரதேச மாநிலத்துக்கு இந்த வருட இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    கடந்த 15 ஆண்டுகளாக மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சி நடை பெறுகிறது. இந்த முறை எப்படியாவது இந்த மாநிலத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது.

    மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச தேர்தலை சந்திக்க, 32 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒப்புதல் அளித்துள்ளார். மாநில காங்கிரஸ் செயல் தலைவர்கள் ராம்நிவாஸ் ராவத், பாலாபட்சன், காங்கிரஸ் எம்.பி.க்கள் காந்திலால் பூரியா, விவேக்தன்கா, ராஜ்மணி பட்டேல் உள்பட 32 பேர் தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

     


    நடைபெற இருக்கும் மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில், ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதில் ஓட்டு போட்டதை உறுதி செய்யும் ஒப்புகை சீட்டு எந்திரங்கள் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பயன் படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களுடன் ஒப்புகை சீட்டு பெறும் கருவிகளும் பொருத்தப்படுகிறது. இவை பொருத்தப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்து சரிபார்க்க வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் 10 சதவீத வாக்குச் சாவடிகளில் உள்ள எந்திரங்களில் இந்த ஆய்வை நடத்த வேண்டும்.

    இவ்வாறு, அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நேற்று ஏற்றுக் கொண்டது. இதன் மீதான விசாரணை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தி அடுத்த மாதம் முதல் தீவிர பிரசாரத்தை மேற்கொள்கிறார். இது தொடர்பாக அவர் டெல்லியில் உள்ள தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார். #Congress #RahulGandhi
    புதுடெல்லி:

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிகிறது.

    இதனால் இந்த 3 மாநிலங்களிலும் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து 15 ஆண்டுகள் ஆகிறது. 2003, 2008, 2013 ஆகிய தேர்தல்களில் அந்த கட்சி பா.ஜனதாவிடம் தோற்றது.

    இந்த முறை சிவராஜ்சிங் சவுகானின் பா.ஜனதா ஆட்சியை வீழ்த்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிரடியான வியூகம் அமைத்துள்ளார். கடந்த ஜூன் மாதம் அங்கு நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சித்தார்.



    மத்திய பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தி அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் தீவிர பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

    குஜராத், கர்நாடகா சட்டசபை தேர்தல்களில் பின் பற்றியது போல அவர் பிரசாரத்தின் போது கோவில்களுக்கு செல்கிறார். ஓம் சுரேஷ்ரில் உள்ள சிவன் கோவிலில் இருந்து ராகுல் காந்தி தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

    செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து அவர் வீதிவீதியாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    மத்திய பிரதேச தேர்தல் பிரசாரம் தொடர்பாக ராகுல் காந்தி டெல்லியில் உள்ள தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார்.

    மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத், மாநில தேர்தல் பிரசார கமிட்டி தலைவர் ஜோதிரத்ய சிந்தியா, எதிர்க்கட்சி தலைவர் அஜய்சிங், முன்னாள் மத்திய மந்திரி சுரேஷ்பச்சோரி, மேல்சபை எம்.பி. விவேக் தன்கா, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பாலாபச்சார், மூத்த எம்.எல்.ஏ.வும், முன்னாள் மந்திரியுமான ராம்நிவாஸ், மாநில செயல் தலைவர் ஜீட்டு பட்வாரி, மாநில மேலிட பொறுப்பாளர் தீபக் பபாரியா உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    15 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பாக அதிரடியான வியூகம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பா.ஜனதா அரசுக்கு எதிராக வீசும் அலையை மக்களிடம் எப்படி கொண்டு செல்வது என்பது பற்றி ராகுல் காந்தி அவர்களிடம் விளக்கினார்.

    ராகுல் காந்தியின் பிரசாரம் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. #Congress #RahulGandhi
    ×