என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ் தலைவர்"

    • டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் ஜனவரி 5-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
    • மாசு கலந்த காற்று மற்றும் கடும் குளிர் ஆகியவையே உடல்நிலை மோசமடைய காரணம்

    ஆஸ்துமா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வீடு திரும்பினார். டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் ஜனவரி 5-ம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இன்று மாலை 5 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர், தொடர்ந்து வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். 

    சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாசு கலந்த காற்று மற்றும் கடும் குளிர் ஆகியவற்றின் காரணமாகவே அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும், இவையே அவருக்கு சுவாசக் கோளாறுகளைத் தூண்டியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். சிகிச்சை முறையின் ஒரு பகுதியாக அவருக்கு ஆன்டிபயாடிக்குகள் மற்றும் பிற துணை மருந்துகள் வழங்கப்பட்டன. 

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நாட்களிலேயே அவரது உடல்நிலை சீரடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் ஆஸ்துமா அதிகரிப்பு மற்றும் நெஞ்சு தொற்று தொடர்பான சுவாசக் கோளாறுகள் இருந்ததால், அவரது உடல்நிலை முன்னேறிய பிறகும் மருத்துவக் குழுவினர் அவரைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

    • அமெரிக்காவிற்கான ஏற்றுமதி மூலம் நமது நாட்டு மக்கள் ஈட்டி வந்த லாபம் இனி கிடைக்காது.
    • காங்கிரஸ் தனது இந்திய-எதிர்ப்பு மனநிலையைத் தெளிவுபடுத்துகிறது

    காங்கிரஸ் மூத்த தலைவர் பிரித்விராஜ் சவான் வெனிசுலா அதிபர் மதுரோவின் கைது குறித்து தெரிவித்த கருத்து இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரிகள் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், 

    50 சதவீத வரியுடன் வர்த்தகம் செய்வது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. நடைமுறையில், இது இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத்தை, குறிப்பாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு செய்யப்படும் ஏற்றுமதியைத் தடுப்பதற்குச் சமமாகும். முன்பு அமெரிக்காவிற்கான ஏற்றுமதி மூலம் நமது நாட்டு மக்கள் ஈட்டி வந்த லாபம் இனி கிடைக்காது. நாம் மாற்றுச் சந்தைகளைத் தேட வேண்டியிருக்கும், அதற்கான முயற்சிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன." என தெரிவித்தார்.


    பிரித்விராஜ் சவான்

    தொடர்ந்து மதுரோ கைது குறித்து பேசிய அவர், 

    "அப்படியானால் அடுத்தது என்ன என்ற கேள்வி எழுகிறது. வெனிசுலாவில் நடந்தது போன்ற ஒன்று இந்தியாவில் நடக்குமா? திரு. ட்ரம்ப் நமது பிரதமரைக் கடத்திச் செல்வாரா?" என தெரிவித்தார். 

    இவரின் இந்த கருத்துகள் விமர்சனங்களையும், கேலி, கிண்டல்களையும் பெற்றுவருகிறது. சமூக வலைதளத்தில் இவரின் இந்த கருத்துகளை பலரும் நகைச்சுவை செய்தாலும், பாஜகவினர் இந்த கருத்துக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

    "காங்கிரஸ் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கீழ்த்தரமான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது. காங்கிரஸ் தலைவர் பிருத்விராஜ் சவான் இந்தியாவின் நிலையை வெனிசுலாவுடன் வெட்கமின்றி ஒப்பிடுகிறார். 'வெனிசுலாவில் நடந்தது இந்தியாவில் நடக்குமா?' என்று கேட்பதன் மூலம், காங்கிரஸ் தனது இந்திய-எதிர்ப்பு மனநிலையைத் தெளிவுபடுத்துகிறது. ராகுல் காந்தி பாரதத்தில் குழப்பத்தை விரும்புகிறார். ராகுல் காந்தி பாரதத்தின் விவகாரங்களில் வெளிநாட்டினரின் தலையீட்டை நாடுகிறார்!" என பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    • தொடர்ச்சியாக ஏழு முறை அதே இடத்திலிருந்து எம்.பி.யாக வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
    • மும்பையில் நடந்த 26/11 பயங்கரவாதத் தாக்குதலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று 2008 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் (90) காலமானார்.

    வயது மூப்பு மற்றும் உடல்குறைவு காரணமாக நீண்ட காலமாக மகாராஷ்டிராவின் லாத்தூரில் வீட்டு பராமரிப்பில் இருந்த அவர், நேற்று காலை 6.30 மணியளவில் உயிரிழந்தார்.

    தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார் சிவராஜ் பாட்டீல்.

    1980 ஆம் ஆண்டு முதல் முறையாக லத்தூரில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் தேசிய அரசியலில் நுழைந்தார். தொடர்ச்சியாக ஏழு முறை அதே இடத்திலிருந்து எம்.பி.யாக வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

    அன்றிலிருந்து 1999 வரை, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அரசாங்கங்களில் பாதுகாப்பு, வணிகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து போன்ற பல முக்கிய துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார்.

    2004 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் மத்திய உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சிவராஜ் பாட்டீல், மும்பையில் நடந்த 26/11 பயங்கரவாதத் தாக்குதலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று 2008 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    பின்னர் 2010 முதல் 2015 வரை பஞ்சாப் ஆளுநராகவும் அவர் பணியாற்றினார்.

    இந்நிலையில் அவரது மறைவுக்கு பிரதமர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர். இன்று, சிவராஜ் பாட்டீலின் உடல் அவரது சொந்த ஊரான வர்வந்தி கிராமத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    வர்வந்தி கிராமத்தில் அவருக்கு சொந்தமான பண்ணையில் சிவராஜ் பாட்டீலின் உடல் அமர்ந்து தியானம் செய்யும் நிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    இந்த இறுதிச் சடங்கில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சாவன் உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.  

    • அவரது காரை வழிமறித்து துப்பாக்கியால் நான்கு முறை சுட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
    • சி.பி.ஐ (கம்ம்யூனிஸ்ட்) மாநில கவுன்சில் உறுப்பினர் கே. சந்து நாயக் (47) கொல்லப்பட்டார்.

    தெலுங்கானாவில் மேடக் மாவட்டத்தில் காங்கிரஸ் பட்டியலின பிரிவு செயலாளர் எம். அனில், காரில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    திங்கள்கிழமை இரவு, அவரை இரு கார்களில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், அவரது காரை வழிமறித்து துப்பாக்கியால் நான்கு முறை சுட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    அனில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டதால், பண தகராறு காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இதற்கு ஒரு நாள் முன்னதாக, மாலக்க்பேட்டில் காலை நடைப்பயிற்சி சென்ற சி.பி.ஐ (கம்ம்யூனிஸ்ட்) மாநில கவுன்சில் உறுப்பினர் கே. சந்து நாயக் (47), அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

    நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட பகையால் இக்கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், ஒரு துப்பாக்கி மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தவர் காமராஜ்.
    • காங்கிரஸ் கட்சியில் உட்கட்சித் தேர்தல் ஜனநாயக ரீதியாக நடைபெறவில்லை.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தவர் காமராஜ். இவர் இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் ஜனநாயக ரீதியாக நடைபெறவில்லை என்று கூறி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியை கண் டித்து பதவி விலகியதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் இன்று கோவில்பட்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியில் உட்கட்சித் தேர்தல் ஜனநாயக ரீதியாக நடைபெறவில்லை. பணம் வாங்கிக் கொண்டு பொறுப்புக்கள் போடப்பட்டுள்ளது. மாவட்ட தலைவர்களுக்கு தெரியாமல், கலந்து ஆலோசிக்கமால் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த 15-ந் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடந்த பிரச்சினை தொடர்பாக மாவட்ட தலைவர்களிடம் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல், கட்சியின் பொருளாளர் ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளனர்.

    ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து ஒரு அறிக்கை கூட மாநில தலைவர் வெளியிடவில்லை. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தன்னுடைய கோரிக்கை மட்டும் பெரிது என்று நினைக்கிறார்.

    கட்சி வளர்ச்சி தொடர்பாக கேட்க வரும் கட்சி தொண்டர்களை அடிக்கும் நிலை காங்கிரஸ் கட்சியில் உள்ளது.

    எனவே காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பதவியில் நான் தொடர விரும்பவில்லை. எனது ராஜினாமா தொடர்பாக மாநிலத் தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    காமராஜ் ராஜினாமா செய்தது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காங்கிரஸ் வழிநடத்துதல் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
    • மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் சோனியாகாந்தி உள்ளிட்டோர் ஆலோசனை.

    கடந்த அக்டோபர் மாதம் காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே பொறுப்பேற்ற பிறகு, கட்சியின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு பதிலாக வழி நடத்தல் குழு உருவாக்கப்பட்டது. இந்த குழுவின் முதல் கூட்டம் கார்கே தலைமையில டெல்லியில் இன்று நடைபெற்றது.

    முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், மூத்த தலைவர்கள் ப சிதம்பரம், ஆனந்த் சர்மா, மீரா குமார், அம்பிகா சோனி மற்றும் மாநிலங்களுக்கான கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். பாத யாத்திரையில் பங்கேற்றுள்ளதால் ராகுல் காந்தி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. 


    இதில் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளதாவது: வெறுப்பு விதைகளை விதைத்து, பிரிவினையின் பலனை அறுவடை செய்யும் ஆளும் கட்சிக்கு எதிராகப் போராடுவது நமது கடமை. ராகுல் காந்தியின் தலைமையில் நடைபெறும் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை, புதிய வரலாற்றை எழுதி, தேசிய இயக்கமாக உருவெடுத்துள்ளது.

    அடுத்த 30 முதல் 90 நாட்களுக்குள் மக்கள் பிரச்னைகளில் கட்சியின் நடவடிக்கை குறித்து மாநில பொறுப்பாளர்கள் அறிக்கை அளிக்க வேண்டும். உயர்மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை கட்சியின் பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். கடமையை நிறைவேற்ற முடியாதவர்கள், அடுத்தவருக்கு வழிவிட வேண்டும். காங்கிரஸ் வலுவாகவும், பொறுப்பாகவும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட்டால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்று நாட்டு மக்களுக்கு சேவை செய்ய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் மக்களை அவர்கள் பிரிக்கிறார்கள்.
    • அனைவரும் ஒன்று கூடி அரசியலமைப்பை, ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்.

    மும்பை:

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 138வது நிறுவன நாளையொட்டி மும்பையில் உள்ள சோமையா மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளதாவது:

    இளைஞர்கள், பெண்கள், தலித்துகள், பிராமண சமூகத்தினருக்கு நான் விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகிறேன். நாம் ஒன்று கூடி நமது அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும். பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் அரசியல் சாசனத்தை அழிக்கிறார்கள், சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிக்கிறார்கள். நாங்கள் உங்கள் ஆதரவை விரும்புகிறோம், நீங்கள் எங்களை ஆதரிக்கவில்லை என்றால் ஜனநாயகம் ஆபத்தில் சிக்கும்.

    ஜனநாயகத்தை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் வெறுப்புச் சூழலுக்கு எதிராக போராடும் முயற்சியாகும். கொரோனா காரணமாக பாத யாத்திரை செல்ல கூடாது என்று அவர்கள் (பாஜக) ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்புகிறார்கள். ஆனால் பிரதமர் பல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மத்தியில் ஆளும் அரசு பொய்யர்களின் அரசாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • வரும் 15-ந் தேதி மாலை 4 மணிக்கு ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.
    • ராகுல் படத்துடன் எனது வீடு ராகுல் வீடு என்ற பதாகை காங்கிரஸ் நிர்வாகிகள் வீடு முன்பு வைக்கப்படும்.

    பல்லடம் :

    பல்லடத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபி நிருப ர்களிடம் கூறியதாவது :- காங்கிரஸ் கட்சி முன்னா ள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி.பதவி பறிப்பு சம்பவத்தை கண்டித்தும் அவருக்கு நியாயம் கிடைக்கும் வரையிலும் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அறவழியில் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். முதல் கட்டமாக வரும் 15-ந் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு திருப்பூர் ெரயில் நிலையத்தில் ெரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். 16ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ராகுல் படத்துடன் எனது வீடு ராகுல் வீடு என்ற பதாகை காங்கிரஸ் நிர்வாகிகள் வீடு முன்பு வைக்கப்படும். 20ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு பல்லடம் தபால் அலுவலகத்தின் முன்பு முற்றுகை போரா ட்டம் நடத்தப்படும். 24ந் தேதி (திங்கள்கிழமை) காலை 10மணிக்கு பல்லடம் தபால் அலுவலகத்தில் இருந்து பிரதமருக்கு கண்டன கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தப்படும். இதைத்தொடர்ந்து 2ம் கட்ட போராட்டங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவி த்தார்.

    பேட்டியின் போது பல்லடம் நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்டார தலைவர்கள் புண்ணிய மூர்த்தி, கணேசன், மாவட்ட பொது செயலாளர் நரே ஷ்குமார், நகர ஆலோசகர் மணிராஜ், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • சென்னிமலை வட்டார காங்கிரஸ் தலைவர் மாநில தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    • குடும்பச்சூழல் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கொள்றேன்.

    சென்னிமலை:

    சென்னிமலை வட்டார காங்கிரஸ் தலைவராக உள்ள சி.சி.ராஜேந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக மாநில தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்

    இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழகிரிக்கு சி.சி.ராஜேந்திரன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் 1996-ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், விவசாய பிரிவில் மாநில கொள்கை பரப்பு செயலாளர், ஈரோடு தெற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர்,

    திருப்பூர் வடக்கு மாவட்ட பொது செயலாள ராகவும், மாநில பேச்சாளர், சென்னி மலை வட்டார காங்கிரஸ் தலைவர் உட்பட பல்வேறு பொறுப்பு களில் கடந்த 28 ஆண்டு காலம் பணியாற்றி வந்துள்ளேன்.

    தற்போது குடும்பச்சூழல் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கொள்றேன்.

    இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

    • அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கவுரவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர்.
    • நிலத்தகராறு காரணமாக தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தகவல்.

    ராஜஸ்தான் மாநிலம் பரான் மாவட்டத்தில் டெல் ஃபேக்டரி பகுதியைச் சேர்ந்த காஸ்கிரஸின் பரான் நகரப் பிரிவுத் தலைவர் கவுரவ் சர்மா (43) தலவாரா சாலையில் வீட்டு மனை காண சென்றுக் கொண்டிருந்தார். அப்போது ராஜூ என்கிற ராஜேந்திர மீனா என்பவர் கவுரவ் சர்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

    இருவருக்கிடையே நடந்த பேச்சுவார்த்தை சண்டையாக மாறியது. அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கவுரவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த கவுரவ் சுருண்டு விழுந்தார்.

    பின்னர், கவுரவை மீட்டு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், நிலத்தகராறு காரணமாக தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

    • பிரதமர் மோடியை சந்திக்க கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
    • சந்திப்பின்போது தேர்தல் அறிக்கை மற்றும் வாக்குறுதிகளை செயல்படுத்துவது குறித்து எங்களுடன் விவாதிக்கவுள்ளனர்.

    காங்கிரஸ் தலைவர் எம்.மல்லிகார்ஜுன் கார்கே, கட்சியின் உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்பதற்காக முழு மாநில அமைச்சரவையையும் டெல்லிக்கு அழைத்துள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, வரும் 21ம் தேதி அனைத்து அமைச்சர்களும் டெல்லி செல்லவுள்ளனர்.

    மேலும், பிரதமர் மோடியை சந்திக்க கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், சித்தராமைய்யாவும், டி.கே.சிவக்குமாரும் பிரதமரை சந்திப்பது குறித்த உறுதியான தகவலை அவர் தெரிவிக்கவில்லை.

    இந்த பயணத்தின் போது அவர்கள் மத்திய அமைச்சர்களை தனித்தனியாக சந்தித்து மாநிலத்தின் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

    இதுகுறித்து கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியதாவது:-

    அமைச்சர்களில் சிலர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே மற்றும் ராகுல் காந்தியை சந்திக்கவில்லை. அதனால், காங்கிரஸ் தலைவரின் அழைப்பின்பேரில் வரும் 21ம் தேதி அன்று அனைத்து அமைச்சர்களும் டெல்லிக்கு செல்கிறோம்.

    அங்கு, தேர்தல் அறிக்கை மற்றும் வாக்குறுதிகளை செயல்படுத்துவது குறித்து எங்களுடன் விவாதிக்கவுள்ளனர். அரசாங்கமாக எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசனை வழங்கவே எங்களை அழைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கே.எஸ். அழகிரியை மாற்ற வேண்டும் என்று கடந்த ஓர் ஆண்டாக மூத்த தலைவர்கள் மேலிடத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
    • கர்நாடக சட்டமன்ற தேர்தலின்போது அவரது பங்களிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழுவின் புதிய தலைவருக்கான அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது.

    இந்த தருணத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவராக முன்னாள் ஐ.ஏ.ஐ சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக காங்கிரஸ் மேலிட வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வருகின்றன.

    தற்போது தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரி 4 ஆண்டுகளாக தலைவர் பொறுப்பில் இருக்கிறார். கே.எஸ். அழகிரியை மாற்ற வேண்டும் என்று கடந்த ஓர் ஆண்டாக மூத்த தலைவர்கள் மேலிடத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக சசிகாந்த் செந்தில் அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸில் இணைந்த இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில், கர்நாடக சட்டமன்ற தேர்தலின்போது அவரது பங்களிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. சுமார் ஒரு வருடம் அங்கேயே தங்கி இருந்து தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்து கட்சி வென்ற பிறகு தமிழகத்துக்கு திரும்பினார். இதனால், கட்சி மேலிடத்தில் சசிகாந்த் மீது நன்மதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால், பாஜகவின் மாநில தலைவரான முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலைக்கு போட்டியாக, முன்னாள் ஐ.ஏ.எஸ்-ஆன சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    ×