பாஜகவால் நாட்டில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது- மல்லிகார்ஜுன கார்கே

சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் மக்களை அவர்கள் பிரிக்கிறார்கள்.அனைவரும் ஒன்று கூடி அரசியலமைப்பை, ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்.
மல்லிகார்ஜூன கார்கே
மல்லிகார்ஜூன கார்கே
Published on

மும்பை:

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 138வது நிறுவன நாளையொட்டி மும்பையில் உள்ள சோமையா மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளதாவது:

இளைஞர்கள், பெண்கள், தலித்துகள், பிராமண சமூகத்தினருக்கு நான் விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகிறேன். நாம் ஒன்று கூடி நமது அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும். பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் அரசியல் சாசனத்தை அழிக்கிறார்கள், சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிக்கிறார்கள். நாங்கள் உங்கள் ஆதரவை விரும்புகிறோம், நீங்கள் எங்களை ஆதரிக்கவில்லை என்றால் ஜனநாயகம் ஆபத்தில் சிக்கும்.

ஜனநாயகத்தை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் வெறுப்புச் சூழலுக்கு எதிராக போராடும் முயற்சியாகும். கொரோனா காரணமாக பாத யாத்திரை செல்ல கூடாது என்று அவர்கள் (பாஜக) ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்புகிறார்கள். ஆனால் பிரதமர் பல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மத்தியில் ஆளும் அரசு பொய்யர்களின் அரசாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com