என் மலர்
நீங்கள் தேடியது "கட்சியில் இருந்து விலகல்"
- அதிமுக சிறுபான்மையினர் பிரிவு நகர செயலாளர் கே.எஸ். முகமது கனி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
- பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகுவதாக முகமது கனி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி போட்டியிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.
அதிமுக- பாஜக கூட்டணி, அதிமுகவில் சலசலப்பை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டை அதிமுக சிறுபான்மையினர் பிரிவு நகர செயலாளர் கே.எஸ். முகமது கனி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகுவதாக முகமது கனி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசி என சி. விஜயபாஸ்கருக்கு எழுதிய கடிதத்தில், நகர சிறுபான்மை பிரிவு செயலாளர், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- சென்னிமலை வட்டார காங்கிரஸ் தலைவர் மாநில தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
- குடும்பச்சூழல் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கொள்றேன்.
சென்னிமலை:
சென்னிமலை வட்டார காங்கிரஸ் தலைவராக உள்ள சி.சி.ராஜேந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக மாநில தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழகிரிக்கு சி.சி.ராஜேந்திரன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நான் 1996-ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், விவசாய பிரிவில் மாநில கொள்கை பரப்பு செயலாளர், ஈரோடு தெற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர்,
திருப்பூர் வடக்கு மாவட்ட பொது செயலாள ராகவும், மாநில பேச்சாளர், சென்னி மலை வட்டார காங்கிரஸ் தலைவர் உட்பட பல்வேறு பொறுப்பு களில் கடந்த 28 ஆண்டு காலம் பணியாற்றி வந்துள்ளேன்.
தற்போது குடும்பச்சூழல் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கொள்றேன்.
இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
- கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட நபருக்கு புதிதாக பொறுப்பு வழங்கியதால் நிர்வாகிகள் அதிருப்தி என தகவல் வெளியாகியுள்ளது.
- மாநில தலைமையின் முடிவில் உடன்பாடு இல்லாததால், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட பாஜக தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட நபருக்கு புதிதாக பொறுப்பு வழங்கியதால் நிர்வாகிகள் அதிருப்தி என தகவல் வெளியாகியுள்ளது.
மாநில தலைமையின் முடிவில் உடன்பாடு இல்லாததால், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.






