என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்தியபிரதேச தேர்தல்- ராகுல் காந்தி அடுத்த மாதம் அதிரடி பிரசாரம்
Byமாலை மலர்1 Aug 2018 8:00 AM GMT (Updated: 1 Aug 2018 8:00 AM GMT)
மத்திய பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தி அடுத்த மாதம் முதல் தீவிர பிரசாரத்தை மேற்கொள்கிறார். இது தொடர்பாக அவர் டெல்லியில் உள்ள தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார். #Congress #RahulGandhi
புதுடெல்லி:
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிகிறது.
இதனால் இந்த 3 மாநிலங்களிலும் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து 15 ஆண்டுகள் ஆகிறது. 2003, 2008, 2013 ஆகிய தேர்தல்களில் அந்த கட்சி பா.ஜனதாவிடம் தோற்றது.
மத்திய பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தி அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் தீவிர பிரசாரத்தை மேற்கொள்கிறார்.
குஜராத், கர்நாடகா சட்டசபை தேர்தல்களில் பின் பற்றியது போல அவர் பிரசாரத்தின் போது கோவில்களுக்கு செல்கிறார். ஓம் சுரேஷ்ரில் உள்ள சிவன் கோவிலில் இருந்து ராகுல் காந்தி தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து அவர் வீதிவீதியாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத், மாநில தேர்தல் பிரசார கமிட்டி தலைவர் ஜோதிரத்ய சிந்தியா, எதிர்க்கட்சி தலைவர் அஜய்சிங், முன்னாள் மத்திய மந்திரி சுரேஷ்பச்சோரி, மேல்சபை எம்.பி. விவேக் தன்கா, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பாலாபச்சார், மூத்த எம்.எல்.ஏ.வும், முன்னாள் மந்திரியுமான ராம்நிவாஸ், மாநில செயல் தலைவர் ஜீட்டு பட்வாரி, மாநில மேலிட பொறுப்பாளர் தீபக் பபாரியா உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
15 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பாக அதிரடியான வியூகம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பா.ஜனதா அரசுக்கு எதிராக வீசும் அலையை மக்களிடம் எப்படி கொண்டு செல்வது என்பது பற்றி ராகுல் காந்தி அவர்களிடம் விளக்கினார்.
ராகுல் காந்தியின் பிரசாரம் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. #Congress #RahulGandhi
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிகிறது.
இதனால் இந்த 3 மாநிலங்களிலும் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து 15 ஆண்டுகள் ஆகிறது. 2003, 2008, 2013 ஆகிய தேர்தல்களில் அந்த கட்சி பா.ஜனதாவிடம் தோற்றது.
இந்த முறை சிவராஜ்சிங் சவுகானின் பா.ஜனதா ஆட்சியை வீழ்த்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிரடியான வியூகம் அமைத்துள்ளார். கடந்த ஜூன் மாதம் அங்கு நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சித்தார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தி அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் தீவிர பிரசாரத்தை மேற்கொள்கிறார்.
குஜராத், கர்நாடகா சட்டசபை தேர்தல்களில் பின் பற்றியது போல அவர் பிரசாரத்தின் போது கோவில்களுக்கு செல்கிறார். ஓம் சுரேஷ்ரில் உள்ள சிவன் கோவிலில் இருந்து ராகுல் காந்தி தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து அவர் வீதிவீதியாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
மத்திய பிரதேச தேர்தல் பிரசாரம் தொடர்பாக ராகுல் காந்தி டெல்லியில் உள்ள தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார்.
15 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பாக அதிரடியான வியூகம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பா.ஜனதா அரசுக்கு எதிராக வீசும் அலையை மக்களிடம் எப்படி கொண்டு செல்வது என்பது பற்றி ராகுல் காந்தி அவர்களிடம் விளக்கினார்.
ராகுல் காந்தியின் பிரசாரம் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. #Congress #RahulGandhi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X