search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "congress petition"

    • திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் தலைவர் தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
    • மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விநாயகர் சிலைகளை காங்கிரஸ் சார்பில் வைத்து பிரதிஷ்டை செய்து வழிபட அனுமதிக்க மனு அளித்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் தலைவர் தலைமையில் மண்டல தலைவர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

    நாடு முழுவதும் 31-ந் தேதி விநாகயர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் உள்ள 48 வார்டுகள், 9 ஊராட்சி பகுதிகளில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விநாயகர் சிலைகளை காங்கிரஸ் சார்பில் வைத்து பிரதிஷ்டை செய்து வழிபட உள்ளோம்.

    அதன் பின்பு இந்த சிலைகள் அனைத்தும் மும்மத தலைவர்கள் முன்னிலையில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அமைதியான முறையில் கரைக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இந்த சிலை அமைப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று எஸ்.பி. பாஸ்கரனிடம் மனு அளித்தனர்.

    மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபிஏடி கருவிகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் மனு தாக்கல் செய்துள்ளது. #Congress

    புதுடெல்லி:

    மத்திய பிரதேச மாநிலத்துக்கு இந்த வருட இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    கடந்த 15 ஆண்டுகளாக மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சி நடை பெறுகிறது. இந்த முறை எப்படியாவது இந்த மாநிலத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது.

    மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச தேர்தலை சந்திக்க, 32 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒப்புதல் அளித்துள்ளார். மாநில காங்கிரஸ் செயல் தலைவர்கள் ராம்நிவாஸ் ராவத், பாலாபட்சன், காங்கிரஸ் எம்.பி.க்கள் காந்திலால் பூரியா, விவேக்தன்கா, ராஜ்மணி பட்டேல் உள்பட 32 பேர் தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

     


    நடைபெற இருக்கும் மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில், ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதில் ஓட்டு போட்டதை உறுதி செய்யும் ஒப்புகை சீட்டு எந்திரங்கள் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பயன் படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களுடன் ஒப்புகை சீட்டு பெறும் கருவிகளும் பொருத்தப்படுகிறது. இவை பொருத்தப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்து சரிபார்க்க வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் 10 சதவீத வாக்குச் சாவடிகளில் உள்ள எந்திரங்களில் இந்த ஆய்வை நடத்த வேண்டும்.

    இவ்வாறு, அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நேற்று ஏற்றுக் கொண்டது. இதன் மீதான விசாரணை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    ×