என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி மழை"

    • தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • மன்னார்புரம், கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் ஓடியது.

    திருச்சி:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.அதன்படி திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. மாநகரில் நேற்று பகல் முழுவதும் வெயில் வாட்டி எடுத்த நிலையில் மாலை 5 மணிக்கு பின்னர் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன.

    பின்னர் இரவு 7 மணிக்கு மழை பெய்யத் தொடங்கி இரவு 8:30 வரை நீடித்தது. இதனால் மாநகரில் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திருச்சி மத்திய பஸ் நிலையம், ஜங்ஷன், பாரதியார் சாலை, மன்னார்புரம், கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் ஓடியது.

    இதேபோன்று மாவட்டத்தின் புறநகர் பகுதியிலும் மழை கொட்டியது. ஒரே நாளில் நேற்று மாவட்டம் முழுவதும் 316.2 மில்லி மீட்டர் மழை பதிவானது அதிகபட்சமாக பொன்னணி ஆறு அணைக்கட்டுப் பகுதியில் 44.4 மீட்டர்

    மாவட்டத்தின் இதர பகுதிகளான லால்குடி 22.4 ,தேவி மங்கலம் 5.4, சமயபுரம் 9 ,சிறுகுடி 3.6 ,வாத்தலை அணைக்கட்டு 6.6 , மணப்பாறை 5, கோவில்பட்டி 38.2 ,மருங்காபுரி 28.2, முசிறி 3 , புலிவலம் 2 ,நவலூர் கொட்டப்பட்டு 26.5 ,துவாக்குடி 1.5, கொப்பம்பட்டி 12 ,பொன்மலை 12.8, திருச்சி ஏர்போர்ட் 21.2 ,திருச்சி ஜங்ஷன் 36.4 ,திருச்சி டவுன் 38 என மழை பதிவானது. இந்த மழையினால் நேற்று இரவு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

    • மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
    • தொடர் மழையினால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 395 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    நேற்று வழக்கம்போல் பகலில் வெயில் அடித்தது. பின்னர் மாலை இடி மின்னலுடன் கூடிய மழை தொடங்கியது.

    தொடர்ந்து இரவு 8 மணி அளவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. அதன் பின்னர் அதிகாலை 3 மணி வரை சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது.

    இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் காரணமாக மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

    இதேபோன்று புறநகர் பகுதிகளான லால்குடி சமயபுரம் மணப்பாறை மருங்காபுரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

    இந்த மழையின் காரணமாக இரவு வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது. தொடர் மழையினால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1060.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பகுதி வாரியாக மழை அளவு விபரம் வருமாறு;-

    கல்லக்குடி 107.4, லால்குடி 30.4, நந்தியாறு அணைக்கட்டு 67.4, புள்ளம்பாடி 116, தேவி மங்கலம் 20.2 சமயபுரம் 36.4, சிறுகுடி 40, வாத்தலை அணைக்கட்டு 11.8, மணப்பாறை 24.4, பொன்னணியாறு அணை 4, கோவில்பட்டி 52.4, மருங்காபுரி 43.4 முசிறி 15, புலிவலம் 8, தாப்பேட்டை 20, நவலூர் கொட்டப்பட்டு 31, துவாக்குடி 14, கொப்பம்பட்டி 27, தென்பர நாடு 40, துறையூர் 52, பொன்மலை 77.2, திருச்சி ஏர்போர்ட் 96.6, திருச்சி ஜங்ஷன் 66, திருச்சி டவுன் 60.

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் 208.20 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
    • அதிகபட்சமாக பொன்னமராவதியில் 100 மி.மீ. மழை பெய்துள்ளது.

    கரூரில் கடந்த 2 நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியில் அதிகபட்சமா க 50 மி.மீ. மழை பெய்துள்ளது. கிருஷ்ணராயபுரத்தில் 45 மி.மீ., பஞ்சபட்டியில் 47 மி.மீ., மயிலம்பட்டியில் 23 மி.மீ .மழையும், கடவூரில் 12 மி.மீ., குளித்தலையில் 16 மி.மீ. , அணைப்பாளையம் பகுதியில் 16 மி.மீ. மழையும், குறைந்தபட்சமாக கரூரில் 11.2 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

    இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் பெய்த மழையினால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் 94 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக வேப்பந்தட்டையில் 26 மி.மீ. மழை பெய்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் 36 மி.மீ. மழை பெய்துள்ளது. நள்ளிரவில் பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 208.20 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக பொன்னமராவதியில் 100 மி.மீ. மழை பெய்துள்ளது. இதேபோல் புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, மீமிசல், திருமயம் உள்ளிட்ட பகுதிகளிலும் நள்ளிரவில் நல்ல மழை பெய்துள்ளது.

    திருச்சி மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக அக்னி நட்சத்திரத்தை மிஞ்சும் அளவுக்கு வெயிலின் தாக்கம் பகல் நேரங்களில் அதிகமாக இருந்தது. இதனால் இரவில் மக்கள் புழுக்கத்தில் தவித்தனர். மேலும் அவ்வப்போது மாலை மற்றும் இரவு நேரத்தில் பெய்யும் சாரல் மழை உஷ்ணத்தை அதிகரித்தே வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்தது. நள்ளிரவு சுமார் 12.15 மணிக்கு சாரலுடன் தொடங்கிய மழை சிறிது நேரத்தில் வெளுத்து வாங்கியது. மாவட்டம் முழுவதும் 487.70 மி.மீ. மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக பொன்னணியாறு அணை பகுதியில் 74.80 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

    இதற்கு அடுத்தபடியாக வாத்தலை அணைக்கட்டு பகுதியில் 73.60, திருச்சி டவுனில் 51.30, தா.பேட்டையில் 35, மருங்காபுரியில் 24 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்த பலத்த மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்தது.

    ×