என் மலர்
நீங்கள் தேடியது "mega alliance"
- திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- மார்ச் 1-ந்தேதி மதுரையில் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்.
தமிழக சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து சந்திக்க உள்ளது. மேலும், இந்த மெகா கூட்டணியில் பா.ம.க., அ.ம.மு.க., ஐ.ஜே.கே., புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கடந்த மாதம் 23ந்தேதி முதலாவது பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் பிரதமர் மோடி பங்கேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன், ஜி.கே.வாசன், டாக்டர் அன்புமணி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, அடுத்தகட்டமாக பிரதமர் மோடி தமிழகத்தில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசார பொதுக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளார். அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்து, மார்ச் 1-ந்தேதி மதுரையில் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்.
அப்போது, திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, மார்ச் 7-ந்தேதி வேலூரில் நடக்கும் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளில் பா.ஜ.க., அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர் மோடியின் மதுரை மற்றும் வேலுார் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மார்ச் 11-ந்தேதி திருச்சியில் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனை ஒருங்கிணைக்க பா.ஜ.க. சார்பில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்டத்திற்கான இடம் குறித்து தேர்வு நடைபெற்றது. திருச்சியை அடுத்த மாத்தூர் சுற்றுச் சாலை பகுதி, திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலைய பகுதியில் உள்ள காலி மனை மற்றும் ஜி கார்னர் ரெயில்வே மைதானம் ஆகிய 3 இடங்கள் தேர்வாகியுள்ளது.
இடம் தேர்வு தொடர்பாக மாவட்ட நிர்வாகிகள் கூறுகையில், மூன்று இடங்களையும் பார்வையிட்டு மேல் இடத்திற்கு தெரிவித்துள்ளோம். அனேகமாக ஜி கார்னர் மைதானம் தேர்வு செய்யப்படலாம்.
நாளை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருச்சி வருகிறார். அதன் பின்னர் இடம் தேர்வு தொடர்பான ஆலோசனைக்கு பின்னர் எந்த இடம் என்பது இறுதி செய்யப்படும் என்றனர்.
பிரதமர் மோடி, 10 நாட்களில் 3 முறை தமிழகம் வருவது, பா.ஜ.க. மட்டுமின்றி, கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தி உள்ளது. இதனால், தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான தேர்தல் தேதி இன்னும் 2 மாதங்களில் அறிவிக்கப்பட உள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது வரலாறு காணாத அளவுக்கு தோல்வியைத் தழுவிய காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து சில முக்கிய மாநிலங்களையும் இழந்தது. இதைத் தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டு பா.ஜ.க.வை வீழ்த்த இயலாது என்பதை உணர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் மெகா கூட்டணியை உருவாக்க முடிவு செய்தனர்.
இந்த நிலையில் மாநிலங்களில் வலுவாக உள்ள பெரும்பாலான கட்சிகள் பா.ஜ.க.வுக்கு எதிராக மாறின. அது மட்டுமின்றி கடந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் முக்கியஅங்கம் வகித்த சில கட்சிகளும் பா.ஜ.க.விடம் இருந்து விலகி காங்கிரசின் தலைமையை ஏற்க முன் வந்துள்ளன. இதன் காரணமாக பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க் கட்சிகளும் ஓரணியில் ஒன்று திரண்டுள்ளன.
பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க் கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ்கொண்டு வரும் திட்டத்தில் காங்கிரசை விட தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுக்குத் தான் வெற்றி கிடைத்துள்ளது. ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளித்து, கூடுதல் நிதி தராததால் கோபம் அடைந்த சந்திரபாபு நாயுடு பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகி, இந்த மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளார். பா.ஜ.க.வை தோற்கடித்தே தீர வேண்டும் என்ற ஒரே இலக்குடன் அவர் காங்கிரசுடன் கை கோர்த்துள்ளார்.
அது மட்டுமின்றி அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசி மெகா கூட்டணிக்குள் கொண்டு வந்தார். கடந்த மாதம் 22-ந்தேதியே எதிர்க்கட்சிகள் கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்தார். ஆனால் 5 மாநில தேர்தல் பிரசாரம் காரணமாக அந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
5 மாநில தேர்தல் முடிந்து நாளை முடிவுகள் வெளிவர இருக்கும் நிலையில் இன்று (திங்கட்கிழமை) எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற இணைப்புக் கட்டிடத்தில் உள்ள அரங்கில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி 14 கட்சித் தலைவர்களுக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த 14 கட்சிகள் விபரம் வருமாறு:-
1. காங்கிரஸ்
2. திமுக
3. தெலுங்கு தேசம்
4. திரிணாமுல் காங்கிரஸ்
5. தேசியவாத காங்கிரஸ்
6. பகுஜன் சமாஜ்
7. சமாஜ்வாதி
8. ராஷ்டீரிய ஜனதா தளம்
9. இந்திய கம்யூனிஸ்டு
10. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு
11. ஆம்ஆத்மி
12. தேசிய மாநாட்டு கட்சி
13. மதச்சார்பற்ற
14. லோக் தந்திரிக் ஜனதா தளம் (சரத்யாதவ் கட்சி)

மு.க.ஸ்டாலினை தொடர்ந்து நேற்று மாலை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி டெல்லி சென்றார். இன்று காலை மற்ற முக்கிய கட்சிகளின் தலைவர்கள் டெல்லி சென்றனர். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் சத்தீஷ் சந்திரா மிஸ்ரா கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க.வை வீழ்த்த ஒன்று திரண்டுள்ள 14 கட்சிகளின் தலைவர்கள் இன்று தான் முதன் முதலாக ஒன்று சேர்ந்துள்ளனர். இந்த கூட்டத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்ட இதுவரை இல்லாத அளவுக்கு மெகா கூட்டணிக்கான அடிக்கல் நாட்டப்படுகிறது. 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 14 எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நிற்கவும், மாநிலங்களுக்கு ஏற்ப கூட்டணியில் தொகுதி பங்கீடுகளை செய்து கொள்ளவும் முடிவு செய்யப்படுகிறது.
அதோடு ஒவ்வொரு மாநிலத்திலும் பா.ஜ.க.வை தோற்கடிக்க, எத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்துவது என்ற வியூகம் குறித்தும் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர். இந்த வியூகம்தான் பா.ஜ.க.வை வீழ்த்தும் மிக முக்கியமான ஆயுதமாக இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மாநிலங்களில் செல்வாக்கு மிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் ஒரே இடத்துக்கு வந்து இருப்பதால் இது பா.ஜ.க.வுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும்.

பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு தேவைப்பட்டால் பிஜு ஜனதா தளம், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளிடமும் ஆதரவை கேட்டு பெறும் வியூகத்தையும் எதிர்க்கட்சித் தலைவர்கள் வகுத்துள்ளனர். இன்றைய கூட்டத்தில் இந்த வியூகங்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட உள்ளது.
அதை சுட்டிக்காட்டும் வகையில் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த தீர்மானங்கள் கூட்டத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டு வெளியிடப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. #ParliamentElection #Congress #DMK #BJP






